0
 விஜய் ரசிகர்கள், ப்ரேம்ஜி வலைத்தள சண்டை போர் என்று தான் முடியுமோ? தெரியவில்லை. நேற்று விஜய் ரசிகர் ஒருவர் இவரை திட்டியதன் காரணமாக போலிஸில் புகார் செய்ய போவதாக கூறினார். உடனே அந்த விஜய் ரசிகர் மன்னிப்பு கேட்டார், மன்னிப்பு கேட்டதிலுள்ள ஆங்கில பிழையை வைத்தே நேற்றுமுழுவதும் அந்த ரசிகரை மோசமாக கலாய்த்தனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று மீண்டும் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் விஜய் ரசிகர்கள். இன்று ஒருவர் மட்டுமில்லாமல் பலர் மிகவும் மோசமான வார்த்தைகளால் ப்ரேம்ஜியை திட்டினர். பிரேம்ஜியும் விடவில்லை அவ்வப்போது பதிலுக்கு ஏதாவது போட்டுக்கொண்டே இருந்தார். பிரேம்ஜிக்கு சில அஜித் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே இன்று கண்டிப்பாக போலிஸின் புகார் கொடுக்கயிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top