0
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி ஆகியோர் திருமணம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படாமல் எளிமையாக இத்திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் வடிவேலு.

வடிவேலுவின் மனைவி வழி உறவினப் பெண் தான் மணமகள். இத்திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெண் வீட்டார், சொந்த ஊரான மதுரை ஐராவதநல்லூரிலுள்ள நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். திரைப்படத்துறையில் தெனாலிராமன் பட இயக்குநர் யுவராஜ், அமீரின் உறவினரும் இயக்குநருமான ஆதம்பாபா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

நீதிமன்றம் அருகில் பரபரப்பான இடத்தில் விழா நடைபெற்றபோதும், வடிவேலு வீட்டு திருமணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் எந்த இடத்திலும் வடிவேலு பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே, ஓராண்டுக்கு முன்பு மதுரை கே.கே நகரில் மகளின் திருமணத்தை வடிவேலு எளிமையாக நடத்திய நிலையில், மகன் திருமணத்தையும் புதன்கிழமை ஆடம்பர, ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தியிருக்கிறார் வடிவேலு.

Post a Comment

 
Top