0

பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் விவாகரத்து செய்த தனது மூன்றாவது மனைவிக்கு ரூ.40 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் இதுவரை மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். முதலில் கடந்த 1997ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்த அவர் அவரை 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்,. பின்னர் ரேணு தேசாய் என்ற பெண்ணை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்த பவன் கல்யாண் அவரையும் 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக அவர் அன்ன லெங்வேனா என்பவரை கடந்த வருடம் மணந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் விவாகரத்து பெற்ற ரேணுகா தேசாய் பவன்கல்யாணிடம் இருந்து ரூ.40 கோடி ஜீவனாம்சம் வாங்கியதாகவும், அந்த பணத்தை வைத்து அவர் சினிமா தயாரிக்கவுள்ளதாகவும் தெலுங்கு பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

எனவே இதுகுறித்து ரேணுகா தேசாய் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பவன் கல்யாணிடம் ரூ.40 கோடி வாங்கியதாக தொடர்ந்து வதந்திகள் பரவின. அவற்றை பொருட்படுத்தாமல் இருந்தேன். ஆனால் என் தோழிகளும் ரு.40 கோடி வாங்கினியாமே என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். நான் 40 கோடி ரூபாய் வாங்கவில்லை. உண்மை என்ன என்று எனக்கும், பவன்கல்யாணுக்கும் நன்றாக தெரியும். அதையெல்லாம் வெளியே சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்தோம். 10 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்தோம். பணம் எங்களுக்கு பிரச்சினை இல்லை. வதந்திகளை பொருட்படுத்தவும் இல்லை. என் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் தான் சினிமா தயாரிக்கவுள்ளது உண்மைதான் என்றும், ஆனால் அந்த பணத்திற்கும் ஜீவனாம்சம் தொகைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

Post a Comment

 
Top