0
 சிபிராஜ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம்… அவர் நம்பிய நாய் அவருக்கு புது வாழ்க்கை கொடுத்திருக்கிறது சினிமாவில். சத்யராஜ் மகனாக இருந்தாலும், சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தார் சிபி.

திருமணத்துக்குப் பிறகு ஏராளமான கதைகளைக் கேட்டவர் கடைசியாக, நாணயம் படத்தின் இயக்குநர் சக்திராஜன் சொன்ன நாய்கள் ஜாக்கிரதை கதைக்கு ஓகே சொல்லி நடித்து, தயாரித்து வெளியிட்டார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வெற்றி விருந்து அளித்தார்கள் சத்யராஜும் சிபிராஜும். இதில் திரையுலகினர் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் கார்த்தி, விஜய் ஆன்டனி, ஷாம், ஸ்ரீகாந்த், சாந்தனு, சுப்பு பஞ்சு, பிரசன்னா, இயக்குநர்கள் லிங்குசாமி, பார்த்திபன், சிபிராஜ் மனைவி ரேவதி உள்ளிட்டோர் இந்த விருந்தில் பங்கேற்றனர். படத்தின் வெற்றிக்குக் காரணமான நாயை மட்டும் விருந்தில் காணோம்!

Post a Comment

 
Top