0
மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சுவாரியருக்கும் 1998–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். திருமணத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவகாரத்து கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பிரிவுக்கான காரணம் பற்றி சொன்னார்கள். பிறகு நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் பலர் அணுகி உள்ளனர்.

இந்த நிலையில் திலீப்–மஞ்சுவாரியர் விவாகரத்துக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று மலையாள பட உலகில் செய்தி பரவியது. காவ்யா மாதவன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ‘காசி’, ‘சாதுமிரண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் திலீப் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 2009–ல் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே கணவனை விவாகரத்து செய்து விட்டார். தற்போது திலீப்புடன் இணைந்து நடித்து வருகிறார்.

திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. விவகாரத்துக்கு பிறகு இன்னும் நெருக்கமாகி விட்டனர். இவர்கள் காதல் விவரம் தெரிந்துதான் மஞ்சுவாரியர் பிரிந்து போய் விட்டதாக கூறப்பட்டது.

திலீப், மஞ்சுவாரியர் விவாகரத்துக்கு நீங்கள்தான் காரணமா என்று கேட்டபோது காவ்யா மாதவன் ஆவேசப்பட்டார். அவர் கூறும்போது, எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு என்பதா? இதுபோன்ற கிசுகிசுக்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேற்கொண்டு இதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றார்.

Post a Comment

 
Top