0
 'வேலையில்லா பட்டதாரி' குழுவினர் மீண்டும் இணையும் படம் பிப்ரவரி 2015ல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏமி ஜாக்சன் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது 'வேலையில்லா பட்டதாரி'.

'வேலையில்லா பட்டதாரி' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அக்குழு இணைந்து படம் பண்ண திட்டமிட்டார்கள். இதனை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இக்குழு இணையும் படம் பிப்ரவரி 2015ல் தொடங்கும் என தனுஷ் தெரிவித்திருக்கிறார். "'வேலையில்லா பட்டதாரி' குழு மீண்டும் இணைய இருக்கிறோம். ஏமி ஜாக்சன் நாயகியாக நடிக்கவிருக்கிறார். பிப்ரவரி 2015ல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம்.விரைவில் தலைப்பு வெளியிடப்படும்" என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

Post a Comment

 
Top