0
 ரஜினியின் லிங்கா படம் முடிந்து, அதன் ரிலீஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீடியாவில் உலா வர ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினி லிங்காவை முடித்ததும், தன் அடுத்த படத்தை மீண்டும் ரவிக்குமாருக்கே தரப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஷங்கர் பெயர் அடிபடுகிறது. இது ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் கதை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

மீபத்தில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தன் படங்கள் தயாராக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றார். அதிக இடைவெளி இல்லாமல், படங்களை சீக்கிரம் எடுத்து வெளியிட வேண்டும் என்ற கருத்தைக் கூறினார்.

இந்த மேடையில் ஷங்கரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியை வைத்து அவர் எடுத்த சிவாஜி வெளியாக இரண்டு ஆண்டுகள் விடித்தது. எந்திரனுக்கு இரண்டரை ஆண்டுகளானது.
இப்படி காத்திருப்பது பிடிக்கவில்லை என்று ரஜினி கூறினார். எனவே ரஜினி – ஷங்கர் இணையும் படம் ஒரு ஆண்டுக்குள் முடிகிற மாதிரி எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Post a Comment

 
Top