0
லிங்கா திரைப்படம் பற்றிய பரம ரகசியம்- தொற்றிய து கூடுதல் பரபரப்பு

லிங்கா திரைப்படம் பற்றிய

பரம ரகசியம்- தொற்றிய து கூடுதல் பரபரப்பு

‘நான் ஈ’ சுதீப், இயக்குநர் K.S. ரவிக்குமாரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக இருந்தது. இந் நிலையில் திடீரென்று எதிர் பாராத விதமாக ‘லிங்கா’வை இயக்க வேண்டி இருப்பதால், சுதீப்பிடம் என்ன சொல்வது என்று தர்ம சங்கடத்தில் இருந்தார் ரவிக்குமார். பெரு ந்தன்மைக்கு பெயர்போன சுதீப்போ, ‘அதனால் என்ன, சூப்பர் ஸ்டார்தான் நமக்கு முக்கியம். அடுத்த வருஷம் நம் படத்தை பண்ணிக்கலாம் சார்’ என்று விலகிக் கொண் டார்.

நட்புக்கு மரியாதை கொடுக் கக்கூடியவரான K.S.R-க்கு உள்ளுக்குள் லேசாக உறுத் தல் இருந்து கொண்டேதா ன் இருந்தது. இதை உணர் ந்து கொண்ட சுதீப், ‘லிங்கா’ ஷூட்டிங் நடைபெற்ற சிவ மோகாவுக்கு கடந்த செப்டம் பரில் நேராகவே போனார். கே.எஸ்.ரவிக்குமாரை வா ழ்த்தி விட்டு, ரஜினியிடம் ஆசி பெற்றார். கூட நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். தன்னுடைய தமிழ் ப்ராஜக்ட் தள்ளிப் போனது பற்றி தனக்கு எந்த வருத்தமுமில்லை என்பதை வெளிப்படை யாகவே காட்டிக் கொண்டார்.

இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். புதுசு என்னவென்றால் ‘லிங்கா’ வில் ஒரு காட்சியில் தலை காட்டும் ‘கேமியோ’ ரோலி ல் சுதீப்பும் தோன்று கிறார் என்பதுதான். படத்துக்கு எண்ட் கார்ட் போடும்போது டைட்டிலில் சுதீப்பின் பெயரும் வந்தாகவேண்டும் என் று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காகவே ஒரு காட்சியில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என் று பரபரப்பான தகவல்கள் கர்நாடகாவிலிருந்து கசிகி ன்றன.ரஜினியோ, ரவிக்கு மாரோ, சுதீப்போ இதுபற்றி இதுவரை வாய் திறக்க வி ல்லை. ரகசியமாக வைத் திருக்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்மொழி யாக சுதீப் ரசிகர்களிடம் இத்தகவல் எபோலாவாக பரவிவ ருகிறது.

Post a Comment

 
Top