0
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓட்டத்தைத் துவங்கியிருக்கிறது ரஜினியின் லிங்கா. இந்தப் படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்துப் போயிருக்கிறது. இந்தப் படத்தை குறை சொல்லி அலையும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. எப்படியாவது குறை கண்டு பிடிக்கிறதுக்குன்னே அலையுறவங்களை என்னதான் பண்றது… இவர்கள் சமூக வலைதளங்களில் லிங்கா படத்திற்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்களை பரப்பும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்.


லிங்கா பிடித்துப் போன பெரும்பான்மையான ரசிகர்களில் சிலருக்கு பிடிக்கவே பிடிக்காதது படத்தின் க்ளைமேக்ஸ்தான். ரஜினி படத்தின் க்ளைமேக்ஸ் இப்படி இருப்பது ரசிகர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியை இன்னும் சிறப்பாக உருவாக்கியிருக்கலாம் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

தான் இயக்கும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியிலாவது தலைகாட்டிவிடும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் லிங்கா படத்திலும் கடைசிக் காட்சியில் பினிஷிங் குமார் என்ற காவல்துறை அதிகாரியாக தலைகாட்டுகிறார். பினிஷிங் குமாராக கேஎஸ் ரவிக்குமார் வந்த போதிலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி திருப்தியை அளிக்காததால் பினிஷிங் குமார் உங்க பினிஷிங் ஒண்ணும் அவ்வளவாக சரியில்லையே… என்று முணுமுணுக்கிறார்கள் ரசிகர்கள்.

Post a Comment

 
Top