0
திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் மேடைகள் கிடைத்தால் வெளுத்து வாங்குபவர் ராதாரவி.

இசைவெளியீடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு என எங்கு சென்றாலும் மைக் கிடைத்தால் எப்போதும் சாதாரணமாக பேசமாட்டார்.

அந்தவகையில் இன்று நடைபெற்ற சரத்குமார் நடித்துள்ள சண்டமாருதம் இசை வெளியீட்டு விழாவில் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று கூறியுள்ளார் ராதாரவி.

படம் வெளியாகும் நேரத்தில் திடீரென தன்னுடைய கதை என்று கூறி சிலர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் லிங்கா படத்தைகூட இதேபோல் நிறுத்தி வைத்திருந்தனர். கடைசிநேரத்தில் நீதிமன்றத்தில் பணத்தை கட்டிதான் படத்தை வெளியிட்டனர்.

இதனால் இதுபோன்ற புதுமுக இயக்குனர்களை மிகவும் கோபமாக திட்டியுள்ளார்.

Post a Comment

 
Top