0
ஒடிசா மாநிலத்தில் ரயிலின் முன் பாய்ந்து இளம் வயது காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுவனும் சிறுமியும் சரக்கு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த சிறுவனின் பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை ரயில்வே பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள, இந்த இடத்துக்கு வரும்படி தனது காதலிக்கு அந்த சிறுவன் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.

பலியான இந்த ஜோடியின் பெயர் விபரங்கள் ஏதும் தெரியவில்லை. பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

 
Top