Saturday, 13 December 2014

ஏம்பா… இந்த பொங்கலுக்கு நாங்க எத்தனை படத்தைத்தான் பாக்குறது?

2015 பொங்கல் திருநாளில் ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய படங்கள்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போன்று இந்த மூன்று படங்களும் வெளியாவதும் உறுதி செய்யப்பட்டுவிட்டன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படமும் இந்த பொங்கல் ரேஸில் வந்து ஒட்டிக் கொண்டது.

இப்போது லேட்டஸ்டாக இன்னொரு படமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

இந்த வரிசையில். கார்த்தி, லஷ்மி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொம்பன் படம்தான் அது.

இந்த படங்களை வரிசையாக 9 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாகரத்து கேட்டது இதற்குதானா..? வருகிறார் லிஸி..?

தமிழில் ‘விக்ரம்’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை லிஸி. தமிழில் சில படங்களில் நடித்தாலும், மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்து கொண்டார். கடந்த 24 ஆண்டுகளாக இவர்களது திருமணம் இனிமையாக சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு இரண்டு வாரிசுகள் உள்ளனர். தற்போது இவர்களுக்கு திருமண வாழ்க்கை கசந்து போன நிலையில், கடந்த டிசம்பர் 1-ந் தேதி இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்திருந்த லிஸி, தற்போது கணவருடனான விவாகரத்து முடிவால் மீண்டும் நடிக்கும் முடிவில் இருக்கிறார். தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம் இயக்கும் ஒரு படத்தில் லிஸி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனது வயதுக்கு ஏற்றபடியான வேடத்தை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

லிஸியின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்’

பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்ப‌டங்களுக்கான பிரிவில் ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப் படத்துக்கு கர்நாடக அரசின் விருது கிடைத்துள்ளது.

கர்நாடக சலனசித்ராவின் 7-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்’

170 திரைப்படங்கள்

44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் 10 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய `பண்ணையாரும் பத்மினியும்', ஜி.பிரம்மா இயக்கிய `குற்றம் கடிதல்' ஆகிய இரு தமிழ் திரைப் படங்களும் திரையிடப்பட்டன. இரு படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

3 படங்கள் விருதுக்கு தேர்வு

இந்நிலையில் தேர்வான திரைப்படங்களில் சிறந்த கன்னட திரைப்படம், இந்திய திரைப்படம், ஆசிய திரைப்படம், உலக திரைப் படம் ஆகிய‌ பிரிவுகளில் தலா 3 சிறந்த திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன‌.

பண்ணையாரும் பத்மினியும்

இதன் நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா தலைமையில் நடைபெற்றது. கன்னட திரைப் படப் பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட `பிரக்குருதி', `ஆகாசி பார்லர்', `ஹஜ்' படங்களின் இயக்குநர்களுக்கு விருதும், தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கான பிரிவில் `அன் டூ டஸ்க் (மலையாளம்), எல்லோ (மராத்தி) மற்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இயக்குநர் மகிழ்ச்சி

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் செக் குடியரசு, டெல்லி உள்ளிட்ட 6 திரைப்பட விழாக்களில் பலருடைய பாராட்டுகளை பெற்றது. இந்த திரைப்படத்துக்கு பெங்களூரு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வீரம் முதலிடம்

தென்னிந்திய சினிமாவில் சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைப்பது இப்போதெல்லாம் ஈஸியாகிவிட்டது.

ஆனால் யாருடைய படங்கள் இதுவரை அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்று அதிக வசூல் செய்த படங்களை பற்றி கூறியுள்ளது.

அதில் அஜீத் நடித்த வீரம் படம் 130 கோடி வசூல் சாதனை படைத்து முன்னிலை வகிக்கிறதாம். அதோடு ஆரம்பம் படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த தகவலை ஏ.எம். ரத்னமே உறுதி செய்துள்ளாராம்.

அதோடு அஜீத்தின் மங்காத்தா 135 கோடி வசூல் செய்துள்ளதாக தயாநிதி அழகிரி கூறியுள்ளதாக அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

ஆக வசூல் சக்கரவர்த்தி அஜீத் .....

"என்னை அறிந்தால்" பட கேரளா உரிமை விற்பனையாகிவிட்டது??


அடுத்தவருட தொடக்கத்தில்(பொங்கல்) பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" பட சூட்டிங்க் இந்தவார தொடக்கத்தில் முடிவுற்ற நிலையில் அண்மையில் வெளியான அதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

அதுபோக ஒரு பாடலும் ரிலீஸ் செய்தார்கள். பொங்கலுக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகத்துடன் காத்துக்கிடந்த அஜித் ரசிகர்களுக்கு இவ்விரண்டும் புத்துணர்வை கொடுத்தது.


இப்போ "என்னை அறிந்தால்" படத்தின் கேரளா உரிமமும் விற்பனையாகிவிட்டதாம். கே.ஜி.நாயர் என்பவரே இதன் கேரளா உரிமையை வாங்கியவர் ஆவார்.

எந்திரன் வசூலை முறியடித்த லிங்கா வசூல்!

தமிழகத்தில் ரஜினியின் லிங்கா திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் சுமார் 650 திரையரங்குகளில் வெளியான லிங்கா முதல் நாளில் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

முதல் நாளில் மட்டும் ரூ 16 கோடியை லிங்கா வசூல் செய்துள்ளது.

 இதுவரை முதல் நாள் வசூல் 11 கோடி செய்து சாதனை படைத்திருந்தது ரஜினியின் எந்திரன்.

இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது ரஜினியின் லிங்கா. ஆந்திராவில் 750 திரையரங்குகளில் லிங்கா வெளியாகியிருந்தது.

அங்கு முதல் நாளில் 8 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் ஏராளமான திரையரங்குகளில் லிங்கா வெளியாகியுள்ளது. அந்த நாடுகளின் வசூல் விவரம் விரைவில் தெரியவரும்.

ஏம்பா நீ இப்படியெல்லாம் கூட படம் டைரக்ட் பண்ணுவியா? – பார்த்திபனிடம் கேட்ட பாரதிராஜா

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இந்தப் படத்தை சமீபத்தில் இரண்டாது முறையாக பார்த்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. படம் பார்த்து முடித்ததும் பார்த்திபனுக்கு போனைப் போட்டு, “ரெண்டாவது தடவ உன் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் பாக்குறேன்.

 நம்பவே முடியலே. எவ்வளவு நேர்த்தியா பண்ணியிருக்கே. twists and turns dialogues unbeliveable. எவ்வளவோ ஃபாரின் பிலிம்செல்லாம் பாத்து கூட இவ்வளவு நான் மிரண்டதில்ல. சொல்லத் தெரியல நீ ரொம்ப நல்லா வருவே” என்று சொல்லி பாராட்டியிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிராஜாவுக்கு, “நான் சொந்தமாக சிந்திக்கிறேன்… கடுமையாக உழைக்கிறேன் ஆனால் அதிர்ஷ்டத்துக்கு பதிலாக உங்கள் ஆசிர்வாதத்தை அணைத்துக் கொள்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.

லிங்கா – ஃபினிஷிங் குமார் உங்க ஃபினிஷிங் சரியில்லயே…

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓட்டத்தைத் துவங்கியிருக்கிறது ரஜினியின் லிங்கா. இந்தப் படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்துப் போயிருக்கிறது. இந்தப் படத்தை குறை சொல்லி அலையும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. எப்படியாவது குறை கண்டு பிடிக்கிறதுக்குன்னே அலையுறவங்களை என்னதான் பண்றது… இவர்கள் சமூக வலைதளங்களில் லிங்கா படத்திற்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்களை பரப்பும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்.


லிங்கா பிடித்துப் போன பெரும்பான்மையான ரசிகர்களில் சிலருக்கு பிடிக்கவே பிடிக்காதது படத்தின் க்ளைமேக்ஸ்தான். ரஜினி படத்தின் க்ளைமேக்ஸ் இப்படி இருப்பது ரசிகர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியை இன்னும் சிறப்பாக உருவாக்கியிருக்கலாம் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

தான் இயக்கும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியிலாவது தலைகாட்டிவிடும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் லிங்கா படத்திலும் கடைசிக் காட்சியில் பினிஷிங் குமார் என்ற காவல்துறை அதிகாரியாக தலைகாட்டுகிறார். பினிஷிங் குமாராக கேஎஸ் ரவிக்குமார் வந்த போதிலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி திருப்தியை அளிக்காததால் பினிஷிங் குமார் உங்க பினிஷிங் ஒண்ணும் அவ்வளவாக சரியில்லையே… என்று முணுமுணுக்கிறார்கள் ரசிகர்கள்.

என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி முடிவானது??

 அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த வருட தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள படம் என்னை அறிந்தால் .

இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனரின் ஷங்கரின் ஐ யுடன் மோத விடுவதா இல்லை என்னை அறிந்தால் தள்ளி போகுமா என்ற வர்த்தக ரீதியில் பலத்த குழப்பம் ஏற்பட்டது .

எது நடந்தாலும் சரி படம் பொங்கலுக்கு வரணும் என்று ஏ. ஏம் ரத்னம்மும் , அஜித்தும் விரும்புகின்றனர் .
இந்நிலையில் என்னை அறிந்தால் டீம் கிட்ட இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது அஜித்துக்கு இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டில் அவ்ளோ ஈடுபாடு இல்லை என்றதால் படத்தை ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து செய்துள்ளனர் .

தற்போது திரைஅரங்கை புக் செய்ய ஏ. ஏம் ரத்னம் ஆரம்பித்து விட்டாராம்.
ஆனா இதுபற்றி அதிகரபூர்வமாக படக்குழுவினரால் எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு பிடித்த டயலாக்


தல என்னை அறிந்தால் படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது. அதோடு சமீபத்தில் தான் படத்தில் இடம் பெரும் அதாரு அதாரு என்ற பாடல் ஆடியோ வடிவில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு தகவல் தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த வசனம் அஜித்தை ரொம்பவும் கவந்தது என்று படகுளிவில் கூறபடுகிறது.

ஹாலிவுட்டில் தமிழ் திரைப்படம் - ஒண்ணுமே புரியல

ஒண்ணுமே புரியல என்னும் தமிழ்படம் வெளியாகும் முன்னரே ஹாலிவுட்டில், ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழிகளில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் பென்செல் அண்ட் ஜானிஷ் பிலிம் புரொடெக்சன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குனர் அப்சரா ராம்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அப்சரா ராம்குமார் அவர்களிடம் கேட்ட போது, இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விசயமாக கருதுகிறேன். என்று கூறினார்.

 இந்த படத்தின் கதாநாயகனாக நடித்தது ஜான் மைக்கேல் மற்றும் கதாநாயகிகள் வித்யா மற்றும் ஹரிணி. இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரெகானா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர்நாடி. ஏ.ஆர். ரெஹானாவின் இசை என்று அப்சரா ராம்குமார் கூறியுள்ளார். ஒண்ணுமே புரியல என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும்,  இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்.

ஒண்ணுமே புரியல திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் இயக்கும் என்றும், இப்படத்தை மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒண்ணுமே புரியல திரைப்படம், ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்கா ரசிகர்கள் விமர்சனம் - எப்படியிருக்கு...!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் லிங்கா.

ரஜினியின் பிறந்தநாள் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லிங்கா பற்றி ரசிகர்கள் சிலர் அனுப்பிய விமர்சனங்கள் உங்களுக்காக.
Kumaran
தலைவர் ஓபனிங் சீன்லயே மிரட்டிருக்காரு. பஞ்ச் டைலாக் எல்லாம் தெறிக்குது. அனுஷ்கா செம்ம அழகு... காசலினா... சோன் பப்டி மாதிரி இருக்காங்க சோனாக்ஷி. லிங்கா இந்த வருஷத்தோட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளப்போகுது.

Vicky

லிங்கா - படையப்பா அளவுக்கு நச்சுனு இல்ல

முத்து அளவுக்கு மோசமாவும் இல்ல

இது லிங்கா படம் அல்ல தலைவர் படம் ... புரிஞ்சவன் மட்டும் லைக் போடு
Prabhu
Thalaivar padam superrr but aana baba story mathiriyea iruku...thalaivar kaga pakkalam... superrru ....
Antoneyraj

கே எஸ் ரவிக்குமார் படத்துல ரஜினி நடிக்கிறார்னா அதுல புது கதையையும் புது அனுபவத்தையும் பார்க்க முடியும். ஆனால் லிங்கா படத்த பார்த்தா பழைய கதைய கொஞ்சம் மிக்ஸ் பண்ணி இந்த காலத்து ட்ரெண்ட்-க்கு குடுத்துட்டாரு போல நம்ம கே எஸ் ரவிக்குமார்.
Dheena

முதல் பாதி கொஞ்சம் மொக்க காமெடியாத்தான் இருக்குது. இண்டர்வலுக்கு அப்புறமா தான் சூடு பிடிக்குது. மக்களுக்காக வாழுறவங்கள இந்த மாதிரி தலைவர் படத்துல மட்டுந்தான் பார்க்கமுடியும்.

இந்த படம் பார்க்கும் போது ரொம்ப பிடிச்சதே இடைவேளையில் போட்ட நம்ம தலயோடு டீசர் தான்.. லிங்கா அனுஷ்காவ விட என்னை அறிந்தால் அனுஷ்கா தான் ரொம்ப புடிச்சது...

பாலிவுட்டிற்கு செல்கிறாரா செல்வராகவன்

 செல்வராகவன் இயக்கத்தில் 2003ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் காதல் கொண்டேன். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, தனுஷிற்கும் வெற்றி படமாக அமைந்திருந்தது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம் செல்வராகவன். இந்த ரீமேக்கில் தனுஷ் நடித்த வேடத்தில் ஒரு புதுமுக நாயகனை நடிக்க வைக்க போகிறாராம். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதோடு இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு பேட்டியில் தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, அரவிந்த் கிருஷ்ணா மூவரும் இணைந்து வென்டர்பார் நிறுவனத்தில் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

முதலிரவில் காலில் விழுந்து கதறல் : மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்தார் புது மாப்பிள்ளை

முதலிரவில் புதுப்பெண் காலில் விழுந்து கதறி அழுததால் அவரை காதலனுடன் சேர்த்துவைத்தார் புதுமாப்பிள்ளை. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நிச்சயம் நடந்தது.

அதன்பின் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு இருவீட்டாரும் விநியோகித்தனர். கடந்த 10ம் தேதி காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் தடபுடலாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் பெண் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். இரவு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபின் மணமக்கள் முதலிரவு அறைக்கு சென்றனர். அப்போது திடீரென நந்தகுமாரின் காலில் தேவி விழுந்து கதறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த நந்தகுமார், விசாரித்தார். அப்போது தேவி, ‘நானும், எங்கள் ஊரை சேர்ந்த லாரி டிரைவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன். என்னை அவருடன் சேர்த்து வைக்காவிட்டால் செத்துவிடுவேன்‘ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். நந்தகுமாரும் விடிய விடிய யோசித்துள்ளார். இறுதியில் காதலனுடன், மனைவியை சேர்த்து வைக்க முடிவு செய்தார். மறுநாள் காலை இரு வீட்டாரும் கூடி பேசினர். அப்போது தேவியை, அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைப்பது என முடிவானது. திருமண செலவுத்தொகையான யி1 லட்சத்தை பெண்ணின் பெற்றோரோ அல்லது காதலனோ நந்தகுமார் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் இதுகுறித்து எழுதி வாங்க துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு குடும்பத்தினரும் நேற்று மாலை சென்றனர். ஆனால் இருவரையும் சேர்த்து வைக்க முடியுமே தவிர, தங்களால் பிரித்து வைக்க எழுதி வாங்க முடியாது என்று கூறி போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதுகுறித்து வேலை விஷயமாக லாரியில் வெளியூர் சென்றிருந்த தேவியின் காதலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். பின்னர் காதலனுடன் தேவிக்கு நேற்று காலை துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் திருமணம் நடந்தது. தாலி கட்டிய மனைவியை  காதலனுக்கே திருமணம் செய்து வைத்த நந்தகுமாரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டினர். 

பேயாக நடித்தவரைப் பார்த்து மயங்கி விழுந்த நாயகி

மாதா பிலிம்ஸ் சார்பில் ஆர்.எல்.ஏசுதாஸ் வழங்க வி.ஐ.பி சினிமாஸ் சார்பாக கார்த்திக் ரெட்டி தயாரித்துள்ள படம் ‘ராகு’. இப்படத்தில் கெல்வின், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, ஹீரோயின்களாக ரேஷ்மா, ரியா, அக்‌ஷயா, சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஐ.ஜெ.பி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீ நார்த் இசையமைக்கிறார். ஞானகரவேல், மதன் ஆகியோர் பாடல்கள் எழுத, கணேஷ் ராவ் போன்ஸ்லே படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டைல் பாலா நடனம் அமைக்கிறார்.

கார்த்திக் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சதீஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் சதீஷ் சுப்பிரமணியம் கூறுகையில், “கல்லூரியில் படிக்கும் மூன்று இளைஞர்கள் உயிர்த்தோழர்கள். அவர்கள் அவர்களைப் போல் உயிர்க்கு உயிராக நேசிக்கும் மூன்று தோழிகளைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் இந்த காதல் வலையில் மூன்று தோழிகளும் சிக்குகின்றனர். இந்த காதல் ஜோடிகளின் வீட்டிலும் எதிர்ப்பு வரும் என்பதால், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்வதற்காக அருகில் உள்ள மலைக்கோட்டை கோயிலுக்கு செல்கின்றனர். திரும்பி கீழே இறங்கி வருவதற்குள் இருட்டி விடுகிறது. அந்த இரவில் அவர்கள் சந்திக்கும் அபாயகரமான நிகழ்வுகள் தான் கதைக்களம்.

கன்னியாக்குமரி அருகில் மருங்குரில் 1000 அடி மலைப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகிகளுள் ரேஷ்மா பேய் வேஷம் போட்டி ரியாவை துரவத்துவது போன்ற ஒரு காட்சி நள்ளிரவு 1 மணி அளவில் படமாக்கி கொண்டிருந்தனர். திடீரென ரியா மயங்கி விழ உடனே பூசாரியையும் நாட்டு வைட்த்தியரையும் அழைத்து வந்து வேப்பிலை அடித்து மருத்துவ முதலுதவி செய்து மயக்கம் தெரிய வைத்தனர். நான் நிஜப் பேய் என்று பயந்துவிட்டேன் பயத்துடன் கூறினார். பின் தங்கியிருக்கும் கொட்டகையில் ஓய்வெடுக்க வைத்தனர். மலைப்பாம்பு ஒன்று கூரைக்குள் ரியாவுக்கு எதிரே நெருங்கிக் கொண்டிருந்தது. ரியா பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த இயக்குநர் பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டார்.

நாகர்கோவில், மயிலாடி, கன்னியாக்குமரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கல்லாப் பெட்டியை நிரப்ப வரும் “கயல்” – டிசம்பர் 25 அன்று உலகம் முழுக்க வெளியீடு…

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து பிரபுசாலமன் இயக்கத்தில் அதிக பொருட்செலவில்  தயாரித்துள்ள படம் – கயல்.

சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.

மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், ஜேக்கப்,  ஜானகி சௌந்தர், ஃபிளாரன்ட் C.ஃபெரேரா, வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம் கோபி, தரணி, அன்புமதி, ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கலை – வைரபாலன்

பாடல்கள் – யுகபாரதி

இசை – D. இமான்

நடனம் – நோபல்

ஒளிப்பதிவு – V.மகேந்திரன்

எடிட்டிங் – 1 சாமுவேல் 2:8

ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்

இணை தயாரிப்பு – ஜேம்ஸ்

தயாரிப்பு – P.மதன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

மைனா, கும்கி போன்ற வெற்றிபடங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான கயல் திரைப்படம் இம்மாதம் (டிசம்பர் ) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலக முழுவதும் வெளியாகிறது.

கயல் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் “ U ” சர்டிஃபிகேட் வழங்கி பாராட்டி உள்ளனர்.

வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அணைத்து பாடல்களும் ஹிட்டாகும். அதேமாதிரி கயல் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளது.

தயாரிப்பாளர் மதன் தொட்டதெல்லாம் துலங்கும். அந்த வரிசையில் கயல் படமும் கல்லாப்பெட்டியை நிரப்பும் என்று நம்பலாம்.

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

“நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில்  ரஜினி உடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா.

ரஜினி ஜெயப்ரதா இடையிலான நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா  ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படபிடிப்பின் போது சந்தித்துள்ளார்.

அப்போது தன் மகன் சித்துவை வைத்து தான் தயாரித்து கொண்டிருக்கும் “உயிரே உயிரே” படத்தின் முன்னோட்டத்தை ரஜினிக்கு போட்டுக் காண்பித்துள்ளார்.

உயிரே உயிரே படத்தை வெகுவாக பாரட்டிய ரஜினி  உயிரே உயிரே படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார்.

ரஜினியின் பெருந்தன்மையை கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்பிரதா தனது நன்றியை தெரிவித்தாராம்.

உயிரே உயிரே படத்தில் நடிகை ஜெயப்பிரதாவின்  மகன் சித்து கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

விஷாலை வைத்து சத்யம் படத்தை இயக்கிய A.R. ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

மனித வாழ்க்கையை சாதனையாக்கிய சேரன்

தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தை தமிழகர்களுக்கு எடுத்துரைத்தவர் தான் சேரன். தன் ஒவ்வொரு படைப்பையும் அவர் இயக்கவில்லை, செதுக்கினார் என்று சொன்னால் கூட மிகையல்ல. கிராமங்களாக இருக்கட்டும், நகரங்களாக இருக்கட்டும் அனைத்தையும் உண்மையாகவும், நேர்மையாகவும் நம் கண்முன் கொண்டு வந்து பிரதிபலித்தவர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக வருவார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் தன் முதல் படமே அறியாமையை சாதி வெறியையும் கூண்டோடு அழிக்கும் பாரதி கண்ணம்மா என்ற படைப்பை கொடுத்தார்.

தமிழ் மக்கள் அனைவரும் வெளி நாடு மோகம் பிடித்து அலைய, நம் நாட்டில் என்ன இல்லை, ஏன் வெளி நாடு போக வேண்டும் என்று அனைவரின் முகத்தில் அறைந்தது போல் கொடுத்தார் வெற்றி கொடி கட்டு.

தமிழர் வாழ்வை அப்படியே செல்லுலாய்டில் பிரதிபலித்த படம் தான் பாண்டவர் பூமி, இதை தொடர்ந்து ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தில் இடம்பெறும் பெண்களை மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பெண்களுக்கு கௌரவ படுத்தும் விதமாக இயக்கிய படம் தான் ஆட்டோகிராப்.

அதேபோல் ஒவ்வொரு மகன்களும் இப்படி ஒரு அப்பா நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கி ஏங்கி பார்த்த படம் தான் தவமாய் தவமிருந்து. இதை தொடர்ந்து மாயகண்ணாடி, பொக்கிஷ்ம் போன்ற பல தரமான படைப்புகளை இயக்கியுள்ளார்.

இதுவரை இவர் இயக்கிய 4 திரைப்படங்கள் தமிழகத்தின் சிறந்த படமாக தேசிய விருது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராக ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயகண்ணாடி, முரன், ராமன் தேடிய சீதை, சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் கதையின் நாயகனாக கலக்கியிருப்பார்.

இப்படி திரைத்துறையில் பல சாதனை படைத்த இயக்குனர் சேரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தல தளபதி களத்துல, கன்னா பின்னா தலைப்புகள்

இப்போதெல்லாம் கன்னா பின்னாவென்று தலைப்பு வைப்பது புது டிரண்டாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு படத்துக்கு "கன்னா பின்னா" என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். தியா நாயர் என்பர் நடித்து இயக்கும் படம். ஆக்ஷா, ப்ரியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். காதலிப்பதற்கு அழகான பெண்ணைத் தேடிச் சென்று மொக்கை வாங்கும் காமெடி கதையாம்.

அடுத்து "தல தளபதி களத்துல" என்ற பெயரில் ஒரு படம் இன்று (டிச 12) பூஜையுடன் தொடங்குகிறது. பிரின்ஸ் மீடியா சார்பில் ஜபீரலி என்பவர் தயாரிக்கிறார். என்.டி.ரவிசந்திரன் இயக்குகிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார், ராஜேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மோதுகிற மாதிரி வெளியில் தோற்றம் கொடுத்து விட்டு உள்ளுக்குள் நட்பாக இருக்கும் நண்பர்களின் கதையாம். தலைப்புக்கு பிரச்சினை வராத வரைக்கும் தலைப்பு நீடிக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜால் வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்...


பொதுவாகவே ஹரிஸ் மேல ஒரு கருத்து இருக்கிறது, பாடல்கள் எப்பிடியாவது காப்பியடித்து நல்லா கொடுத்திடுவார். ஆனா, ஆக்சன் படங்களுக்கான பின்னணி இசை என்பது ஹாரிசுக்கு சரிப்பட்டுவராததொன்றாகும். இதற்கு அவர் இசையமைத்த ஆக்சன் படங்களை உற்று அவதானித்தாலே போதும்.


தற்போது ஹாரிஸ் அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" படத்தில் பணியாற்றுகிறார். யுவனின் பின்னணி இசையில் அனல் பறக்கும் அஜித்தின் ஆக்சன், ஸ்டைல் சீன்களை பார்த்து ரசித்துவந்த அஜித் ரசிகர்கள் பலருக்கு ஹாரிசை இப்படத்தில் நியமித்தது பிடிக்கவில்லை, சரி இனி என்ன பண்ண? பாடல்களையாவது சந்தோசமா கேட்போம் என்று மனதை தேற்றிக்கொண்ட அஜித் ரசிகர்களுக்கு அண்மையில் வெளியான "அதாரு அதாரு" பாடல் முழுமையான திருப்தியை தரவில்லை.. ஆகவே பாடல்களும் ஏமாற்றிவிடுமோ என்ற கவலை அஜித் ரசிகர்களுக்கு தொற்றிவிட்டது.

என்னை நிர்வாணப்படுத்தியது இராணுவம் - ஜனாதிபதிக்கே இந்த நிலமையா...?

இராணுவ சர்வாதிகார ஆட்சியில் தாம் நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் ஜனாதிபதி உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1964ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பிரேசிலில் இராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது.
அப்போது  அந்த ஆட்சியை எதிர்த்த மக்களை ராணுவம் கைது செய்து கொடுமைப்படுத்திக் கொலை செய்தது.

இதே போல் மக்களுள் ஒருவராக எதிர்ப்பை தெரிவித்ததில் பிரேசிலின் தற்போதைய ஜனாதிபதி தில்மாவும் ஒருவர் ஆவார்.
தான் பாதிக்கப்பட்டது குறித்து தில்மா கூறியதாவது, கொடுங்கோல் ஆட்சியில் பல கொடுமைகளுக்கு ஆளானேன். எனக்கு 22 வயதாக இருக்கும்போது அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த 1970ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன்.

சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள், மின் அதிர்ச்சி கொடுத்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினர்.
மேலும் என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்று, என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள்.

இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது.
இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து, அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது என அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.

இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஹீரோவா த ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி - லிங்கா - சினிமா விமர்சனம்

ஹீரோ  ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும்  செய்யும்  லூட்டிகள் செம  ஜாலியாப்போகுது.


  சோலையூர்  அணையை இஞ்சினியர் செக்  பண்ணி  அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில்  இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது  வாரிசான  லிங்காவோ  வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா  லிங்கா   வர மாட்டேங்கறார்


நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட  மரகத நெக்லசை  ஆட்டையைப்போட  திட்டம் போடும்  இடங்கள்  காதில்  பூச்சுற்றல் என்றாலும்  சுவராஸ்யம். ஹீரோயினை  சோலையூர்  கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய  பணி  ஹீரோயினுக்கு. அதே  ஊரில்  இருக்கும்  கோயிலில்  உள்ள  மரகதச்சிலையை திருட வந்த  ஹீரோ வுக்கு  தன்  தாத்தா  வின்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது.  

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து  தன் கலெக்டர் பதவியை  துறந்து  ஹீரோவின்  தாத்தா  ஊர் மக்களின்  நன்மைக்கு  அணை  கட்டுகிறார். அந்த அணை  கட்ட  ஏகப்பட்ட  தடங்கல்கள்  சதிகள்  சவால்கள் .எல்லாத்தையும்  முறியடிச்சு  சொந்த  செலவில்  எப்படி  அணையைக்கட்டுகிறார்  என்பதே  கதை

ஹீரோவா  த  ஒன் அண்ட்  ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி. 4 வருட  இடைவெளிக்குப்பின்  அவர்  காட்டும்  அட்டகாசமான  ஓப்பனிங்  சீன்  கலக்கல் . 60வயது ஆன  பின்னும் அவர்  25  வயது  இளைஞர்  போல்   சுறுசுறுப்பாக  பின்னிப்பெடல்  எடுக்கிறார். பாடல்  காட்சிளில்  தமிழ் நாட்டு  மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும்  வேண்டா  வெறுப்பா  ரொம்ப  சிரமப்பட்டு  அனுஷ்கா  கூட  சோனாக்சி  சின்ஹா  கூட  டூயட்  பாடி ஆடி  நடிச்சிருக்கார்.




டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி  குஸ்கா கன்ன அழகி அஞ்சே  முக்கால் அடி உயர கொழுக் மொழுக்  ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான்  நமக்கெல்லாம்  பூஸ்ட்.பாப்பாவுக்கு  முகத்தில்  கொஞ்சம்  முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும்  தமிழன் முகத்தை அதிகம்  கவனிக்காததால்  தப்பி விடுகிறார்.கண்காட்சியில்  ரஜினியுடன்  நெருக்கமாக  இருக்கும் காட்சி ஆல்ரெடி    பீரோவுக்குள்  கொஞ்சிக்குலாவிய  தூள்  படத்தின்  தழுவல்  காட்சி  தான் ( விக்ரம் -ஜோதிகா)  என்றாலும்  கிளு  கிளு தான்.


மெயின்  ஜோடி  சோனாக்சி சின்ஹா.ஹிந்தில  சோனா  என்றால்  தங்கம்னு அர்த்தம் .அதே  போல்  தங்கம்  போல்  ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி  இவருக்கு  மைனசாவே  தெரியலை.நல்லா பரம பத  மேப்பை  விரிச்சு  வெச்சு  விளையாடும் அளவுக்கு அகலமான  முதுகு அழகி.முதல்  மரியாதை  ராதா  கணக்கா  ஜாக்கெட்  இல்லாம  வர்றார். ( சேலை  கட்டி  இருக்கார் ) கண்ணியமான   கேமரா மேனாக இருந்தாலும்  ஒரு  பாடல்  காட்சியில்  அவரையும் அறியாமல்  கிளாமர்  எட்டிப்பார்க்குது



சந்தானத்தின்  காமெடி  வழக்கம்  போல்  கலக்கல்.இவரது  ஒன் லைனர்கள்  அப்ளாஸ் அள்ளுது. கருணா வும்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா  என  அவர்  முழுசாக  சொல்ல  முடியாமல்  வயசு  சீனியாரிட்டி  கருதி நண்பேன்  என  நிறுத்த  ரஜினி  டா என  முடிக்க  தியேட்டரே  கல கல



ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  ரொம்ப  நீளம் .படத்தின்  மெயின்  கதையே  ஃபிளா   ஸ்பேக் தான்  என்பதுதான்  படத்தின்  பலமும்  பலவீனமும். ரஜினி  படம்  எனில்  பாட்ஷா  படையப்பா  போல்  சவால்  விடும்  கேரக்டரா  பார்த்து  மக்கள்  ட்யூன் ஆகிட்டாங்க .எனவே  இது போல்   பென்னி  குயிக்   அணை  கட்டும்  கதை  எல்லாம்  ரிப்பீட் ஆடியன்சை  வர  வைப்பது  சிரமம்.


வில்லனாக  வரும்  பிரிட்டிஷ்  வில்லன்   ஆள்  நல்ல  பர்சனாலிட்டி  எனில் அவர்  மனைவியாக  வந்து  ரஜினிக்கு  சப்போர்ட்  செய்யும்   கேரக்டர்  நல்ல  கலர் . ஜவஹர்லால்  நேரு  - மவுண்ட்பேட்டன்  பிரபு  சம்சாரம்  கதை தான்  நினைவு  வருது.



இசை  ஏஆர்  ரஹ்மான் . 2 பாட்டு  நல்லாருக்கு . ஆனா  பின்னணி  இசை  சுமார்தான் .


மிகக்குறுகிய  காலத்தில்   பெரிய பிராஜக்ட்டாக  சக்சஸ்ஃபுல்லா  தருவது  சாதா  விஷயம் இல்லை . கே எஸ்  ரவிக்குமார்  தான்  அந்த  மேஜிக் கை  நிகழ்த்திக்காட்டி   இருக்கார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........



குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...


* பிசிஜி - பிறப்பின் போது

* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது

* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்

* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்

* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்

* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்

* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்

* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்

* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்

* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்

* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்

* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்

* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்

* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்

* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்

* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்

* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்

* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்

* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!



பல குழந்தைகள் இருட்டில் ஏதோ ஒரு உருவம் ஒளிந்து கொண்டு தன்னை விழுங்கப்போவதாக நம்பிக்கை கொண்டிருப்பர். இந்த பயம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, பெற்றோர்கள் அவர்களின் பயத்தை எப்படி போக்குவது என்பதை இங்கு பார்க்கலாம். பயம் என்பது நம் அனைவரது வாழ்விலும், குறிப்பாக குழந்தைகளிடம் காணப்படும் ஒரு சாதாரண விஷயம். இருட்டைக்கண்டு பயப்படுவது குழந்தைகளின் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நாம் புதியதாக ஒன்றை முயற்சிக்கும் போது, இதற்கு முன் அனுபவிக்காத ஒன்றை அனுபவிக்கும் போது நமக்கு பயம் ஏற்படுகிறது.


குறிப்பாக குழந்தைகளிடம் இது போன்ற பயம் தினம் தினம் ஏற்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் பல உள்ளன. தொலைக்காட்சியில் காட்டப்படும் பயப்படும்படியான செய்திகள், அடிக்கடி பேய் கதைகளை பெற்றோர் குழந்தைகளிடம் கூறுவது போன்றவை கூட குழந்தைகளின் பயத்தை அதிகரிக்கும். தேவையில்லாத புத்தகங்கள் கூட குழந்தைகளிடம் பயத்தை உருவாக்குவதில் குற்றமுடையதாகுகிறது. இரவில் இருட்டைக்கண்டு பயப்படும் குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், அவர்களோடு பொறுமையுடன் பேச வேண்டும்.

அவர்கள் கூறுவதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பயத்தை கேலிக்குரியதாக்காமல், அவர்களை அமைதிப்படுத்தி, அவர்களின் பயத்தை போக்கி, அவர்களை வேறு நல்ல விஷயங்களில் திசை திருப்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மேலும் பயப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் உங்களின் கேலிக்குரிய பேச்சால் குற்றவுணர்வுடன், வெட்கப்பட்டு உங்களிடம் எதையும் கூறாமல் மறைக்க ஆரம்பிப்பர். அதனால் பிரச்சனைகள் பெரிதாகுமே தவிர, தீர்வு ஏற்படாது. அதற்கு பதில் அவர்களுக்கு பாதுகாப்புணர்வை எற்படுத்துங்கள். அதனால் தங்கள் அச்சத்தை எளிதில் கையாளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்படும். குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்குவதற்கான சில வழிமுறைகளை கீழே காணலாம்.


1. உங்கள் குழந்தைகளின் படுக்கையறையில் மெலிதான வெளிச்சம் பரவும்படி மின்விளக்கை பொருத்தவும். இதனால் உங்கள் குழந்தைகள் ஓரளவு நிம்மதியுடன் உறங்குவர்.

2. இருளில் உங்கள் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் அல்லது உணர்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது அச்சத்தை போக்குவதற்கு உத்திரவாதம் அளியுங்கள்.

3. இருட்டாக இருக்கும் போதும், வெளிச்சமாக இருக்கும் போதும், அவர்களது அறை ஒரே மாதிரி இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதனால் அவர்களது பயம் படிப்படியாக குறையும்.

4. ஒரு மங்கலான ஒளியைத் தரும் மின் விளக்கை பொருத்தி, பின் படிப்படியாக அவ்வெளிச்சம் குறையும்படி செய்தால், குழந்தைகளின் பயம் குறைந்து, நம்பிக்கையுடன், அவர்களே விளக்கை அணைத்துவிட்டு உறங்கும் நிலைமை ஏற்படும்.

5. ஹாலில் உள்ள விளக்கை அணைக்காது வைத்து, உங்கள் குழந்தை உறங்கியவுடன் அணைத்து விடுங்கள்.

6. விளக்கை அணைத்து விட்டு உங்கள் குழந்தையுடன் இருங்கள். அவர்களை இருட்டில் இருக்கச் செய்யுங்கள். அவர்கள் அந்த இருட்டிற்கு பழகி அருகிலுள்ள பொருட்களை பார்க்க முடியும் என்றும் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் உணர வையுங்கள். குறிப்புகள்: ஒருவேளை குழந்தைகள் எதையாவது நினைத்து பயந்து விழித்தால், உங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள அவர்களது அறையில் தொலைபேசி ஒன்றை வைக்கவும்.

இரவில் நடமாடும் விலங்குகளான பூனை, வவ்வால் மற்றும் பறவையினமான ஆந்தை போன்றவற்றின் பொம்மைகளை அவர்கள் அறையில் வைத்தால், அவர்கள் இரவில் கண்விழித்து பார்க்கும் போது, இருட்டில் பார்க்கக்கூடிய நண்பர்கள், தன்னை பார்ப்பதாக நினைத்து, தங்கள் பயத்தை போக்கிக்கொள்வர். விளக்குகளை அணைத்து அவர்கள் பயப்பட எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள் சோர்வாக உணரும் வரை புத்தகங்கள் படிக்க அவர்களை அனுமதியுங்கள். அவர்களே விளக்குகளை போடவும், அணைக்கும்படியும் செய்ய பழக்கப்படுத்துங்கள். நல்ல இனிமையான இசையை கேட்கும்படி செய்யுங்கள். அவர்கள் உறங்கப்போகும் முன் நல்ல விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் அவர்களிடம் பேசுங்கள்.

இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!




முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர்.

இதற்கிடையில் இரண்டாம் முறை கருவுற்றால் நீங்கள் சீக்கிரமே தளர்வடைந்து போவீர்கள். ஏனெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்க நேரிடும். ஒன்று உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுவது இரண்டாவதாக உங்கள் முதல் குழந்தை கவனித்து கொள்ளுவது. அதிலும் உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பின்னர் பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். காரணம் அச்சமயம் உங்கள் கைக் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும்.

இப்படி இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையின் அன்புதான் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு,இப்போது ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகிறது. அத்துடன் பெற்றோரைப் போன்றே உறவினர்களின் அன்பும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, இந்த பகிர்தல் தெரியாத வண்ணம் குழந்தையிடம் பாரபட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில இதோ..

# முதல் குழந்தைக்கு அன்பு முழுவதையும் பொழிந்துவிட்டு இரண்டாவது குழந்தை வந்ததும் அதனை அதிகமாகப் பராமரிக்க ஆரம்பிக்கின்றனர். சிறு குழந்தை என்பதால், இரண்டாவது குழந்தையைக் கொஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித்தியாசமில்லை. பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்டாவது குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்கு இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, “நீ தனியா விளையாடுகிறாய்; பாப்பா வந்ததும் உன்னுடன் சேர்ந்து விளையாடும். நீ தான் பாப்பாவுக்கு எல்லாம் சொல்லித் தர வேண்டும்” என்று சொல்லி சொல்லி, முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

# உறவினர்கள் ஒரு குழந்தையிடம் அன்பை காட்டிச் சென்ற பின், தாயோ அல்லது தந்தையோ மற்றொரு குழந்தையிடம் அரவணைப்பைக் காட்டி “உன் சகோதரன் (சகோதரி) தானே, நீ விட்டுக் கொடுக்க வேண்டும்” என்பதை, நம் அன்பில் சிறிதும் குறையாமல் புரிய வைக்க வேண்டும்.

# கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறுமியாயிருக்கும் போது பள்ளிக்கோ அல்லது பக்கத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கோ அனுப்பும் போது, சிறு குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை பெரிய குழந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலும், அன்பு, உணவு என அனைத்தையுமே இரு குழந்தைகளுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்.

# ஒரு குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ திறமையாக இருக்கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்திலோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத்தைக் கொண்டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தன் ஆதிக்கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந்தால், சகோதர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!



அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில்
 பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..

மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??




பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
.

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!



உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பீர் பிராண்ட்டுகள்


 உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.

பீர் ஃபோபியா

 உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?

உண்மையான பீர்

 பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும்
 நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.

சளிக்கு சிறந்தது

 சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.

இதய நோய்

 இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

அழகு

 பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.

ஸ்மார்ட்டாக்கும்

 எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.

ஆற்றல் பானம்

 உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

விலை உயர்ந்த பீர்

 மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

வாழ்க்கையின் பய‌னுள்ள குறிப்புகள்!



1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்



18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்



19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்


24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்


28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


31. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

சங்க கால மலர்கள்...





சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


1. அடும்பு

2. அதிரல்

3. அவரை - நெடுங்கொடி அவரை

4. அனிச்சம்

5. ஆத்தி - அமர் ஆத்தி

6. ஆம்பல்

7. ஆரம் (சந்தன மர இலை)

8. ஆவிரை - விரிமலர் ஆவிரை

9. இருள்நாறி - நள்ளிருள் நாறி

10. இலவம்

11. ஈங்கை

12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்

13. எருவை

14. எறுழம் - எரிபுரை எறுழம்

15. கண்ணி - குறு நறுங் கண்ணி

16. கரந்தை மலர்

17. கருவிளை - மணிப்பூங் கருவிளை

18. காஞ்சி

19. காந்தள் - ஒண்செங் காந்தள்

20. காயா - பல்லிணர்க் காயா

21. காழ்வை

22. குடசம் - வான் பூங் குடசம்

23. குரலி - சிறு செங்குரலி

24. குரவம் - பல்லிணர்க் குரவம்

25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி



26. குருகிலை (குருகு இலை)

27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்

28. குவளை (மலர்) - தண்கயக் குவளை

29. குளவி (மலர்)

30. குறிஞ்சி

31. கூவிரம்

32. கூவிளம்

33. கைதை

34. கொகுடி - நறுந்தண் கொகுடி

35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை

36. கோங்கம் - விரிபூங் கோங்கம்

37. கோடல்

38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்

39. சிந்து (மலர்)

40. சுள்ளி மலர்

41. சூரல்

42. செங்கோடு (மலர்)

43. செம்மல்

44. செருந்தி

45. செருவிளை

46. சேடல்

47. ஞாழல்

48. தணக்கம் (மரம்)

49. தளவம்

50. தாமரை - முள் தாள் தாமரை


51. தாழை மலர்

52. திலகம் (மலர்)

53. தில்லை (மலர்)

54. தும்பை

55. துழாஅய்

56. தோன்றி (மலர்)

57. நந்தி (மலர்)

58. நரந்தம்

59. நறவம்

60. நாகம் (புன்னாக மலர்)

61. நாகம் (மலர்)

62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)

63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)

64. பகன்றை

65. பசும்பிடி

66. பயினி

67. பலாசம்

68. பாங்கர் (மலர்)

69. பாதிரி - தேங்கமழ் பாதிரி

70. பாரம் (மலர்)

71. பாலை (மலர்)

72. பிடவம்

73. பிண்டி

74. பித்திகம்

75. பீரம்



76. புன்னை - கடியிரும் புன்னை

77. பூளை - குரீஇப் பூளை

78. போங்கம்

79. மணிச்சிகை

80. மராஅம்

81. மருதம்

82. மா - தேமா

83. மாரோடம்

84. முல்லை - கல் இவர் முல்லை

85. முல்லை

86. மௌவல்

87. வகுளம்

88. வஞ்சி

89. வடவனம்

90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை

91. வள்ளி

92. வாகை

93. வாரம்

94. வாழை

95. வானி மலர்

96. வெட்சி

97. வேங்கை

98. வேரல்

99. வேரி மலர்

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள் ?



1. மது அருந்துதல்


எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.


சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி


"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'

Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."


சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக பெண்கள் வீதிகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...


வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...


நீங்கள்  motor cycle  ஓட்டும் போது எதிரில் வருபவர் முன் உங்கள்  headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......


அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...?




அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள
வேண்டும் ...


1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும்,


2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க


3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க


4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர்
வாங்காதீங்க


5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க


6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க


7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க


8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு
கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க


9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க


10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க


11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல
இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க


12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு
சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க


13. குட் லக்


14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்


15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா,
இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க


16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க


17.கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க


18.ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட
போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க


19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?


என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.

இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டில் "எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....

சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.

"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.

"உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.

ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம்  எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை  பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.

"தைரியமாக  சொல் நீ மனிதன்தானா?
இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"

என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.

 திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
 டாடியும் மம்மியும் திட்றாங்க'

தீராத தம்மு வேணும்
திட்டாத அப்பு[அப்பா] வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்...


என்று அது அழுது  புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.

ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.

தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.


" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.

சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.

தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை

•இனி  தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,

•பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,

•இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,


•ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?

நோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.


விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம்  என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://www.nobelprize.org/educational/all_productions.html

நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும்  விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக விளையாட ஆரம்பிக்கலாம் மன்னிகவும் அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா?


iss_1011_600x450

நாசாவின் புதிய முயற்சி..

சர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.
தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் ISS ஐ இயக்கி வருகின்றார்.

இந்த ISS செயற்கைக் கோளை இரவு வானில் தொலைக் காட்டி இன்றி எவரும் வெறுங் கண்ணால் ஒரு நட்சத்திரம் விண்ணில் குறுக்கே மிக வேகமாக செல்வது போல் அவதானிக்கலாம்.

தமது இடத்திலிருந்து வானின் எத்திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு நாசா சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய SMS சேவைக்கு அதாவது நாசாவின் இணையத் தளமான http://spotthestation.nasa.gov/ இல் தமது பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரியை இவர்கள் பதிவு செய்தால் போதும். ISS தென்படும் நேரம் மற்றும் இடம் SMS மூலம் தெரிவிக்கப்படும்.

வானியலில் ஆர்வமுடையவர் எவரும் ISS ஐ வெறுங் கண்ணால் பார்ப்பதற்கு இதன் மூலம் உடனடியாக முயற்சி செய்ய முடியும்.

ஆகவே நீங்களும் உங்கள் வீட்டருகே ISS ஐ அவதானித்து அதைப் பிறருக்கும் எடுத்துரையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கும் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரிக்கலாம்.

நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் நாடாளக்கூடாதா?

ஒரு ப்ளாஷ்பேக்… 1989-ம் ஆண்டு நடந்த விழா அது. அன்றைய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, இயக்குநர் பாலச்சந்தர் என பலரும் பங்கேற்ற விழா.

ரஜினி பேசுகிறார்…

“என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்’ என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.

எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். அதே மண்ணில்தான் நானும் பிறந்தேன். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் உள்ளது.

நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர். ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமண மகரிஷி ஒரு தமிழர்.
சிவாஜி ராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து, எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.

வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி.

என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.
எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.

அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்!”

ரஜினியின் இந்தக் கேள்விக்கு அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி சொன்ன பதில்… ‘எங்கள் மண்ணின் மைந்தர்’! என்றார்.

அதைத் திருத்திய கருணாநிதி…’அவர் தமிழகத்தின் மைந்தர்’ என்றார்.

நாச்சிக்குப்பமும் ரஜினியும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் பிறந்த நாளும் அவர் நடித்த படமும் ஒரே நாளில் வந்திருப்பது இதுதான் முதல் முறை.

இந்த ஆண்டும் அவரது அரசியல் வருகை பற்றிய பேச்சு எழுந்து பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை மத்தியில் பி.ஜே.பி. அரசு அமைந்திருப்பதும் நரேந்திர மோடியுடன் ரஜினிக்கு இருக்கும் நட்பும் கூடுதல் பலமாக சேர்ந்து கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.


 ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி தோல்வி என்பது ஒரு பக்கமிருந்தாலும், அவர் அரசியல் பிரவேசம் செய்தால் இப்போது அரசியல் சந்தையில் கடை போட்டிருக்கும் பல பழுத்த வியாபாரிகள் தங்கள் கடையை மூட்டை கட்ட வேண்டிய நிலை வரும் என்பதுதான் உண்மை.


 ரஜினி எப்போது அரசியல் பற்றி பேசினாலும், யாரையாவது வைத்து அவருக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்துவார்கள். ‘உங்களி விட சீனியர் உங்கள் நண்பர் அரசியல்ல இருக்கார். அவரை எதிர்த்து எப்படி நீங்கள் அரசியல் செய்ய முடியும்' என்று ரஜினியின் காதில் போட்டு வைப்பார்கள். இன ரீதியாக அவரை தனிமைப்படுத்தும் முயற்சி இது.


காரணம் ரஜினியிடம் நேரடியாக ‘நீ அரசியலுக்கு வந்தால் கர்நாடக முத்திரை குத்திவிடுவோம்'; என்று சொல்ல முடியாதல்லவா. இப்படிதான் ஒவ்வொரு முறையும் ரஜினியை அடக்கி வைத்தார்கள், அரசியல்வாதிகளின் தூதுவர்களாக செயல்படும் வெள்ளித்திரை வியபாரிகள்..


லிங்கா படவிழாவிலும் இதுதான் நடந்தது. கூட்டமே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்க, இடையில் பேச வந்த வைரமுத்து ‘ரஜினியை நீங்கள் கடவுள் என்கிறீர்கள், தேவதூதர் என்கிறீர்கள், வருங்கால முதல்வர் என்கிறீர்கள்.. ஆனால் தான் யார் என்பது ரஜினிக்குத் தெரியும்' என்று பேசுகிறார். இது ரஜினிக்கு மறமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் பார்த்தார்கள்.


ஆனால் ரஜினி பேசும்போது. "நான் அரசியலுக்கு வரணும்னு எல்லோரும் பேசுறீங்க. அது பிரச்சனையில்ல. அப்படி வந்து பலரையும் மிதித்து அந்த இடத்துக்குப் போயி உங்களுக்கு நல்லது செய்ய முடியுமான்னுதான் யோசிக்கிறேன்," என்று நீண்ட நாளைக்குப்பிறகு அரசியல் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்.


தன்னுடைய அரசியல் பிரவேசத்தால் அதிகம் பாதிக்க[ப்படப்போவது யார் என்பது ரஜினிக்கும் தெரியும். அதனாலும் அமைதி காத்தார். ரஜினி மீது அரசியல்வாதிகள் ஏவும் பிரமாஸ்திரமான கர்நாடக அம்பும் முறிந்து போய் பல நாட்களாகி விட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ரஜினி பிறந்தது தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிருஷணகிரியில் இருக்கும் நாச்சிக்குப்பம் என்ற குக்கிராமம்.


இங்கு ரஜினியின் அம்மா, அப்பா வசித்த வீடும் ரஜினி பிறந்த வீடும் இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த வீட்டிற்குள் போனால் இப்போதும் குடும்ப உறுப்பினர்க்ளோடு ஒரு ஓரத்தில் சிவாஜி ராவாக ரஜினி நிற்கும் பழைய போட்டோவைப் பார்க்களாம்.

இந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழன்தான் ரஜினி என்பதற்கு அந்த கிராமத்தில் நிறைய சாட்சிகள் இப்போது இருக்கிறது. ரஜினியின் உறவின் நினைவாக இன்றும் அந்த வீட்டில் அவரது தாய் வழி உறவினர்கள் வசித்து வருகிறார்கள்.

அதே கிராமத்திற்கு ரஜினி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் உயர்நிலை குடிநீர் தொட்டியும் கட்டிக்கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு தனியாக தாகம் தீர்க்க வழி செய்திருக்கிறார். இன்னும் தன்னுடைய தாய் தந்தையர் நினைவாக திருமண மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட பணிகளையும் செய்து வைத்துள்ளார்.

காலம் யாரை எங்கு எப்போது கொண்டு வந்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆரே நம் இதயத்தில் வாழும்போது தமிழ்நாட்டில் நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா என்ன?