Saturday, 13 December 2014

ஏம்பா நீ இப்படியெல்லாம் கூட படம் டைரக்ட் பண்ணுவியா? – பார்த்திபனிடம் கேட்ட பாரதிராஜா

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இந்தப் படத்தை சமீபத்தில் இரண்டாது முறையாக பார்த்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. படம் பார்த்து முடித்ததும் பார்த்திபனுக்கு போனைப் போட்டு, “ரெண்டாவது தடவ உன் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் பாக்குறேன்.

 நம்பவே முடியலே. எவ்வளவு நேர்த்தியா பண்ணியிருக்கே. twists and turns dialogues unbeliveable. எவ்வளவோ ஃபாரின் பிலிம்செல்லாம் பாத்து கூட இவ்வளவு நான் மிரண்டதில்ல. சொல்லத் தெரியல நீ ரொம்ப நல்லா வருவே” என்று சொல்லி பாராட்டியிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிராஜாவுக்கு, “நான் சொந்தமாக சிந்திக்கிறேன்… கடுமையாக உழைக்கிறேன் ஆனால் அதிர்ஷ்டத்துக்கு பதிலாக உங்கள் ஆசிர்வாதத்தை அணைத்துக் கொள்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.

No comments:

Post a Comment