Monday, 8 December 2014

'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!

நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.

நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது. இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி ரூபாய். நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள பலருக்கும் வயிற்றெச்சலாம்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ?

No comments:

Post a Comment