Monday, 15 December 2014

கதை திருட்டு ஆசாமிகளின் கைவரிசை..007க்கு ஆப்பு வச்சிட்டாங்க..!

புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதை திருடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவன கம்ப்யூட்டர்கள் கடந்த மாதம் 24ம் தேதி கார்டியன்ஸ் ஆப் பீஸ் என்ற அமைப்பால் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து நடிகர், நடிகைகளின் சம்பளம், பணியாளர்கள் விவரம் மற்றும் புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதையை திருடியுள்ளனர்.

லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையை திருடிய ஹேக்கர்கள்

மேலும் சோனி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் இமெயில் முகவரிகளையும் அவர்கள் இணையதளத்தில் கசியவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜி.வில்சன், பார்பரா ஃபிராக்கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன கம்ப்யூட்டர்களிலிருந்து தகவல்களை திருடியவர்கள், அதிலிருந்த ஸ்பெக்டர் திரைப்படத்துக்கான திரைக்கதையையும் திருடியுள்ளனர். இந்த திரைக்கதையை அவர்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இத்திரைக்கதையை பிரிட்டன் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். எனவே, அதை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெக்டர் படத்தில் டேனியல் கிரெய்க், மோனிகா பெலூச்சி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகும்.

போஸ்பாண்டி அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் வைப்பாரோ ?

(சரவணன் என்கிற சூர்யா) - போஸ்பாண்டி படக்குழுவினர் - சூர்யா ரசிகனை மைய கதாப்பாத்திரமாக கொண்டு படம் எடுத்தாலும், உலக அளவில் ரசிகர்களை பெற்ற சூப்பர் ஸ்டார் - ரஜினிகாந்த் பிறந்த நாளன்று அவரது பெருமையை பறை சாற்றும் வகையில் சென்னை வேப்பம்பட்டில் உள்ள பாலவிகார் சிறப்பு திறன் பெற்ற குழந்தைகளுக்கான மையத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

அன்றைய தினம் அனைவருக்கும் இலவச உணவு பரிமாறி உள்ளார்கள். அங்குள்ள அனைவரும் ரஜினி ரசிகர்கள் என்று கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த இவர் லிங்கா திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோவை தன் படக்குழுவினருடன் பார்த்து ரசித்தாராம்.

குறிப்பு:-ஒரு வேலை தனது அடுத்த படத்திற்கு இந்த ராஜா சுப்பையா சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் பெயர் வைப்பாரோ ?

ஹன்சிகாவிற்கு துரோகம் செய்த சிவகார்த்திகேயன்! இது வேணாம்.. அதுதான் வேணுமாம்..!



தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பல இளம் ஹீரோக்கள் வெயிட்டிங்.

யாருக்கும் கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு நடித்த சில படங்களில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா நட்பு வலுவானது.

இதனால் அவருக்காக ஒரு கதை ரெடி செய்ய சொல்லி சுந்தர்.சியிடம் கேட்டுள்ளார் ஹன்சிகா. அவரும் ஓகே சொல்லி, பாதி கதை முடிய, தற்போது சிவகார்த்திகேயன் எனக்கு ஹன்சிகா வேண்டாம், நயன்தாரா கமிட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். நல்லதுக்கே காலம் இல்லை.

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்


காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

சர்க்கரை நோய் தீர எளிய சித்த மருத்துவம்!

சர்க்கரை நோய் பரம்பரை நோயாக வருவது மட்டுமின்றி அதிக அளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டு அதற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் அசைவ உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் அதிகமாக உண்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கும் எளிதாக வரும்.

இப்படிப்பட்டவர்களின் உடலில் உள்ள கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்தி விடும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை குளுகோசாக மாறி உடலின் பல பாகங்களுக்கும் சென்று உடலுக்கு சக்தியை கொடுக்கிறது, இன்சுலின் சுரத்தல் நின்று விட்டால் மேல் கண்ட சக்தி நமது உடலுக்கு கிடைக்காமல் பல நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதனால் தான் நோய் கண்டவர்கள் மருத்துவமனைக்கு போன உடன் முதலில் குளுக்கோஸ் ஏற்றுவார்கள்.
siddhaஉடல் சக்தி இழப்புக்கு காரணங்கள் மித மிஞ்சிய உடல் உறவு, உடல் சூடேறி தாது கெட்டு நரம்பெல்லாம் பலன் குறைந்துவிடும் அளவுக்கு மிதமிஞ்சிய தேகப் பயிற்சி, மலம், மூத்திரத்தை அடக்குவது, தேவையற்ற பட்டினி, கண்விழிப்பு, விபத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி இனிப்பான உணவுகளை உண்பதாலும் சக்தியற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

நீரழிவு நோயின் அறிகுறிகள் :

உடல் மெலியும். வியர்வை அதிகப்படும். உடலும் கண்களும் வெளுத்து காணப்படும். நெஞ்சு உலரும். நா வரளும். தாகம் மிகும். ஆயாசம், களைப்பு உண்டாகும். உணவு செல்லாது. சிறுநீரகங்கள் பாதிக்கும். இருதயம் பலவீனப்படும். ஆண்மை சக்தி குறையும். நரம்புகள் சக்தியை இழக்கும். சிறுநீர் அடிக்கடி வெளியேறும். உடலில் எந்த பாகத்தில் காயம் பட்டாலும் இலகுவில் புண் ஆறாது.

தீராத நோய் சித்த மருத்துவத்தில் குணமாகும். இன்றைய மருத்துவர்கள் இயற்கையாக இன்சுலின் சுரக்க வழி வகுக்காமல் செயற்கை இன்சுலினை ஏற்றியும் அதிக அளவு மாத்திரைகளைக் கொடுத்தும் சார்க்கரை நோய் தீராமல் மேலும் உடலில் பல நோய்கள் உண்டாக காரணமாக வழி செய்கிறது.

இயற்கை இன்சுலின் உடலில் சுரந்து நோய் தீர சித்த மருத்துவத்தில் ஆவாரை பஞ்சாங்கம், நாவல் பட்டை, நாவல் கொட்டை, வெந்தையம், வல்லாரை, பொற்சீந்தில், ஆலம் விழுது, சிறு குறிஞ்சான், மருதம் பட்டை, அரக்கீரை, வள்ளக்கீரை, அத்தி கொழுந்து இவைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்து இடித்து சலித்து சூரணமாக்கி காலை மாலை உணவுக்கு முன்பு வேளைக்கு அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை வென்னீர் அல்லது பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் இயற்கையாக கணையம் இயங்கி அதன் வாயிலாக இயற்கை இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் தீரும்.

3 நாட்களில், 100 கோடி வசூல்…! லிங்காவுக்கு சாத்தியமானது எப்படி? – புலனாய்வு ப்ளஸ் புள்ளிவிவர ரிப்போர்ட்..!

தமிழ்நாட்டில் மட்டும் லிங்கா படத்தின் முதல் நாள் வசூல் 16 கோடி என்று கடந்த 13.12.2014 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் பிறகு நம் கவனத்துக்கு வந்த செய்திகள் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமலும், சாத்தியமில்லாத தகவல்களாகவும் இருந்தன.

லிங்கா படத்தின் முதல் 3 நாள் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாகவும் மற்றொரு தகவலும் படத்துறையில் பரவியது.
100 கோடி வசூல் படம் கொடுக்கும் தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யை இந்த செய்தி, அதிர்ச்சியடைய வைத்ததோ இல்லையோ, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது உண்மை.
அதிருக்கட்டும்.. 3 நாட்களில் லிங்கா படம் 100 கோடியை வசூல் செய்தது உண்மையா?

நமது, முதல்கட்ட விசாரணையில் 100 கோடி வசூல் உண்மைதான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாய் சத்தியம் செய்தனர்.
அவர்களின் சத்தியத்தில் நம்பிக்கை இல்லாமல் லிங்கா படத்தின் வியாபாரத்தில் இணைந்திருந்த சிலரின் வாயைக் கிளறினோம்…

லிங்கா படம் தமிழ்நாட்டில் மட்டும் 720 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியான 12.12.2014 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும், வசூலான தொகை மட்டுமே 53 கோடி ரூபாய்!

இரண்டாவது நாள் 27 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 24 கோடியும் வசூலித்திருக்கிறது.

ஆக லிங்கா படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல்… 104 கோடி!

இதற்கு முன் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்ட எந்திரன், கத்தி போன்ற படங்கள் அந்த தொகையை வசூலிக்க பல நாட்கள் ஆனநிலையில், லிங்கா 3 நாட்களில் 100 கோடியை எட்டியது எப்படி?

தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட லிங்கா, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து ஏரியா தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி முதலே திரையிடப்பட்டிருக்கிறது. சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி காட்சி முதல்….

அதுமட்டுமல்ல, பல தியேட்டர்களில் 200, 300, 500, 600 என்றும், அதிகபட்சமாக 1000 ரூபாய்வரை கட்டணம் வசூல் செய்திருக்கின்றனர்.

சென்னையில் 4 காட்சிகளும், மற்ற ஊர்களில் 8 காட்சிகள் வரை திரையிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே 3 நாட்களில் 100 கோடி வசூல் சாத்தியமானதாக சொல்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
டிக்கெட் கட்டணத்தை இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்கப்பட்டதற்கு, தியேட்டர்காரர்களின் பேராசை மட்டுமல்ல, பெரும் விலைகொடுத்து லிங்காவை அவர்கள் வாங்கியதும்தான் காரணம்.

போட்ட பணத்தை எப்படியாவது எடுத்தே ஆக வேண்டும் என்ற பதட்டத்திலும் பயத்திலும் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்.

லிங்கா படத்தை ஜெயா டிவி வாங்கியதால் அரசாங்கம் கண்டு கொள்ளாது என்ற தைரியம் மற்றொரு காரணம்..

இதுவரை வெளியான படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் லிங்காதான்.

லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து 140 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம்.
லிங்கா படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு 55 கோடிக்கு விற்றது ஈராஸ்.

கோவை ஏரியாவை மட்டும் லலிதா ஜூவல்லரிக்கு 13 கோடிக்கு முன்கூட்டியே விற்றுவிட்டனர். எனவே, கோவை ஏரியா நீங்கலாக தமிழக உரிமை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

55 கோடிக்கு படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ், அதை ஏரியா வாரியாக பிரித்து சுமார் 72 கோடி விற்றுள்ளது.

72 கோடிக்கு லிங்காவை வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி. அடிப்படையில் 90 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

தமிழ்சினிமா விற்பனையில் 90 கோடி என்பது மிகப்பெரிய சாதனைத் தொகை.

செங்கல்பட்டு ஏரியா மட்டும் 13.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள ஒரு தியேட்டர் 37 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் 25 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும், விருகம்பாக்கத்தில் உள்ள தேவிகருமாரி தியேட்டர் 30 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும் லிங்காவை திரையிட்டுள்ளனர்.

எனவே போட்ட பணத்தை உடனடியாய் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு நிர்ணயித்து வசூலை அள்ளி இருக்கின்றனர்.

3 நாட்களில் 104 கோடியை லிங்கா படம் வசூல் செய்தாலும், 75 சதவிகித தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக கட்டணத்துக்கு விற்கப்பட்டதால், அரசாங்கத்துக்கு கணக்குக்காட்டப்பட உள்ள தொகை நான்கில் ஒரு பங்கு தொகை அதாவது 25 கோடி மட்டுமே!

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் போட்டி போடும் 2 இந்திய இசையமைப்பாளர்கள்

87-வது ஆஸ்கார் விருதுகான  பட்டியல் 2015 ஜனவரி மாதம்  15 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. விருது பிப்ரவரி மாதம் 22 ந்தேதி வழங்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் இசையமைப்பாளர் ஒரிஜினல் ஸ்கோர்  பிரிவில்  மொத்தம் உள்ள 114 பேரில் இந்தியாவை சேர்ந்த 3 இசையமைப்பாளர்கள் பெயர் பரிந்துரைக்கபட்டு உள்ளது

2 ஆஸ்கார் விருதுகளை பெற்று உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டு இந்த முறை  மீண்டும் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார்.

சிலம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள பெற்று உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை தி ஹண்டரு புட் ஜெர்னி, மில்லியனர் டாலர் ஆர்ம், மற்றும் ரஜினிகாந்த் நடித்த கோச்சயான் ஆகிய படங்களுக்காக பரிந்துரைக்கபட்டு உள்ளார். பாலிவுட் படமான ஜால் படத்துக்காக சோனி நிகாமும் பிக்ராம் கோசும் பரிந்துரைக்கபட்டு உள்ளனர்.

கீது மோகன் தாஸ் இயக்கி நவாஷூதீன் தித்திக், கீதாஞ்சலி தாபா ஆகியோர் நடித்த ’லியர்ஸ் டிஸ்’என்ற படம் 87 வது விருது வாங்கும் போட்டிக்கு  சிறந்த வெளிநாட்டு படமாக பரிந்துரைக்கப்படும் என எத்ர்பார்க்கபடுகிறது ஆனால் இன்னும் இறுதி பட்டியலில் இடம் பெற வில்லை.


குழந்தையை காப்பாற்ற சிகிச்சை பெறாமல் உயிரை விட்ட பெண்: ஆசிர்வதித்த மக்கள்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறாமல் குழந்தையை காப்பாற்ற சீனப்பெண் ஒருவர் தனது உயிரை விட்டுள்ளார்.

சீனாவின் ஹெனாள் மாகாணத்தில் உள்ள ஷெங்ஷு பகுதியை சேர்ந்தவர் குயூ யுயான்யுயான் (26).
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கர்ப்பம் அடைந்த போது அவரை புற்று நோய் தாக்கியது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அவருக்கு ‘கீமோ தெரபி’ சிகிச்சை பெற மருத்துவர்கள் வற்புறுத்தினர்.
அந்த சிகிச்சை பெற்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்றார். இருந்தும் குழந்தை பிறந்த 100–வது நாளில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இத்தகவல் அறிந்த சீன மக்கள், அவரது தாய்ப்பாசத்தை வெகுவாக புகழ்ந்து அவரது மகன் நீடூடி வாழ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சன்னி லியோனின் கணவர் விரட்டியடித்த ஹிரோ

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மோஹித் அஹ்லாவாத்தும் நடித்து வருகிறார். மோஹித், எளிதில் உணர்ச்சிவசப்படுவராகவும், உடனே மற்றவரை அடித்துவிடவும் செய்கிறார். செட்டில், அவரது உதவியாளரை, ஒருமுறை அடித்தும்விட்டார். மோஹித்தை பார்த்தால், தனக்கு மிகவும் பயமாக உள்ளது என சன்னி லியோன் கூறியுள்ளார்.

பாதுகாவலர்கள் இன்றி, சன்னி தற்போது அப்படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை., மேலும், கேரவனிலிருந்து வரும் போது கூட பாடிகார்டுகளுடன் தான் சன்னி வருகிறார். சன்னி லியோனின் கணவர், எக்காரணம் கொண்டும், சூட்டிங் நடக்குமிடத்திற்கு வரக்கூடாது பல கண்டிஷன்கள் பேரில்தான் சன்னி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்..

வாட்ஸ் ஆப்பில் பரவும் அமைச்சரின் முத்த வீடியோ

வாட்ஸ் ஆப்பில் பரவும் அமைச்சரின் முத்த வீடியோ

வாட்ஸ் ஆப்பில் பரவும் அமைச்சரின் முத்த வீடியோ




விஷ்ணுவர்தன், விக்ரம் இணையும் பிரமாண்ட படம்!


விக்ரம் தற்போது பத்து எண்றதுக்குள்ள படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் கண்டிப்பாக ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் தான் என்றும் குறிப்பாக அது அக்‌ஷய் குமார் படமாக தான் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

உலக நாயகனின் புது படம்....

கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் -2 என வரிசை கட்டி படங்கள் வெளிவர உள்ள நிலையில், அவர் அடுத்த
படத்திற்கு தயாராகி விட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, மகள் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.

அதில் கமல் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். அதற்கு "வாமமார்க்கம்" என்று பெயரிட்டுள்ளேன். வாமமார்க்கம் என்றால் எனக்கு தெரிந்தவரை, இடது கை பாதை என்று பொருள். ஆனால், சிலர் அகோரிகளை, வாமமார்ஜிகள் என்று கூறுகிறார்கள். அது மதம் சம்பந்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரை, நம்நாட்டில் இடதுசாரிகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளதால், இதை படமாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

மருதநாயகம், மர்மயோகி, விருமாண்டி மற்றும் விஸ்வரூபம் கதையின் கரு எனக்கு எவ்வாறு மனதில் தோன்றியதோ, அதுபோல, தான் இந்த வாமமார்க்கத்தின் கதையும் தோன்றியது. இந்த படம் உருவாக,

பற்களில் கரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?




பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?




கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.


தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?


சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.


பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்


 ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.


மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


மிளகாய் தூளில் மரப்பொடி , செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.


காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.


கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்


 கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்


 சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.


நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.


வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.


ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.


பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.


பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும். பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம் பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.


தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள். இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.


சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.


குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.


ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.


நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.


தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.


கம்புவில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.


இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.


சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.


தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.


கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும்.


ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.


முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.


விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…


* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உ<ள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்

முகப்பருவைப் போக்க சில எளிய வழிகள்!!





ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்-கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும்.

முகப்பருக்கள் எதனால் வருகிறது? தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.

இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.  

ஆவிப்பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

கிராம்பு

கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை கழுவவும்

அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

சந்தனப் பொடி

சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

தேன்

தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

தக்காளி

தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

தண்ணீர் குடிக்கவும்

சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

தூக்கம் வரலையா?




ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் சான்சே இல்லை என்ற பதில்தான் வரும். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.

குளிர் கால எச்சரிக்கைகள்!




கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன் உடல் பளபளப்பும் ஏற்படும்.


மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.


இதற்கிடையில் இதே குளிர் காலத்தில்தான் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை மருத்துவமனை ரிகார்டுகள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.


மாற்றங்களுக்கான காரணங்கள்:


குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,தட்டை அணுக்கள், பைபர் நோஜன் அதிகரிக்கிறது .கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால்,அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது.


இதனால்தான் நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதிலும் ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை இது போன்ற காலங்களில் மிகவும் கஷ்டம். எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.


முக்கியமாக மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.


சமவெளிகளில்கூட மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபட ப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப்பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ஏசியை அணைத்து வைக்க வேண்டும்.

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்!



பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மெட்டி அணிவது ஏன்?




பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.


கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..


ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.


பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.


இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.


 காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?



சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?

அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

கோபத்தை கையாள எளிய வழிகள்..




 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

மாரடைப்பை தடுக்கும் வால்நட்...?



 வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது.

இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?




ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி! சமையல்!

 

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு

 கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி

அறுசுவை உணவு...! - சமையல்!



காரம்:

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு:

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டு.....


அறுசுவை உணவு...! Click


சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….




சமையலில் செய்யக்கூடாதவை…

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை….

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!

 The juice of black nightshade is sometimes used to treat fever and alleviate pain.




அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.


வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.



தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..



மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.



வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,

”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!

அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

 "வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.” என்று கூறிச் சென்று விட்டனர்.

பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

நல்ல நண்பன் - குட்டிக்கதைகள்!



ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,


இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.


இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.


என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.


என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,


நீதி: 


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

தலைவர்கூட ஹிருத்திக் ரோஷனுக்கும் ஒரு பிளாஸ்பேக் இருக்கு!!!

1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப்படத்தில் ரஜினியின் (வளர்ப்பு)மகனாக படுசுட்டித்த்னமான நடிபால் கலக்கியிருந்தான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் தான் இன்று 500கோடிகளுக்கு மேல் வசூலில் கலக்கிய ‘க்ரிஷ்-3’ படத்தின் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன்.

ஹிருத்திக் ரோஷனின் தந்தையும் க்ரிஷ் படங்களை இயக்கியவருமான ராகேஷ் ரோஷன் எண்பதுகளில் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி இந்தியில் தொடர்ந்து நடித்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை அமிதாப்பை அடுத்து ராகேஷ் ரோஷனுக்கு உண்டு.

லிங்கா கதை திருட்டா? வெளுத்து வாங்கிய ராதாரவி

திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் மேடைகள் கிடைத்தால் வெளுத்து வாங்குபவர் ராதாரவி.

இசைவெளியீடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு என எங்கு சென்றாலும் மைக் கிடைத்தால் எப்போதும் சாதாரணமாக பேசமாட்டார்.

அந்தவகையில் இன்று நடைபெற்ற சரத்குமார் நடித்துள்ள சண்டமாருதம் இசை வெளியீட்டு விழாவில் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று கூறியுள்ளார் ராதாரவி.

படம் வெளியாகும் நேரத்தில் திடீரென தன்னுடைய கதை என்று கூறி சிலர் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் லிங்கா படத்தைகூட இதேபோல் நிறுத்தி வைத்திருந்தனர். கடைசிநேரத்தில் நீதிமன்றத்தில் பணத்தை கட்டிதான் படத்தை வெளியிட்டனர்.

இதனால் இதுபோன்ற புதுமுக இயக்குனர்களை மிகவும் கோபமாக திட்டியுள்ளார்.

தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!


தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.




அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அச்சமயம்அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.



இதற்கிடையில் தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.



மேலும் புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.



பொதுவாக மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. 



செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. 



அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். 



காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 



செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். 


அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

சிக்கன் பற்றிய சீரீயஸ் ரிப்போர்ட்!

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்...பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................

இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்.

லிங்கா எல்லாம் ஒரு படமாய்யா…? – தெலுங்கு ஊடகங்களின் அர்ச்சனை!


ரஜினியின் லிங்கா தமிழகத்தில் வெளியான திரையரங்குகளை விட தெலுங்கில் வெளியான திரையரங்குகள்தான் அதிகம். அங்கு பெரிய நடிகர்களின் தெலுங்கு படங்களுக்கே அவ்வளவு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் டப்பிங் படமான லிங்கா அதிகப்படியான திரையரங்குகளில் வெளியானது தெலுங்கு ஊடகங்களை டென்ஷனாக்கியிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து லிங்கா படத்திற்கு விமர்சனம் எழுதிய தெலுங்கு ஊடகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் இதெல்லாம் ஒரு படமாய்யா…? என்பது போல் விமர்சனம் எழுதியிருக்கிறார்களாம். அனுஷ்கா இனிமே தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருப்பதே மேல் என்றெல்லாம் கூட தெலுங்கு ஊடகங்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்கள் தெலுங்கு படங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் சிலர் வேண்டுமென்றே ஊடகங்களை தூண்டிவிட்டு இது போன்று எழுதச் செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லிங்கா படத்திற்கு கிடைத்தது போன்ற அர்ச்சனை அடுத்து வெளிவரவிருக்கும் ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு தெலுங்கு ஊடகங்களிடம் இருந்து கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!



தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.


விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.


ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்து............


வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

 

1. மிகமோசமான தலைவலி:

தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்:


பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அநேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும்.

மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.

3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி.

4. கடுமையான வயிற்று வலி:

வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீயாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicieis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே சத்திரசிகிச்சை செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் Cancer பாதிப்புகள் குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங் களாலும் வயிற்று வலி வரலாம்.

5. கெண்டைக்கால் வலி:

கெண்டைக்காற் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி:

கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது நீழிவு நோயின் அடையாளமாக இருக்கலாம்.

7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி:

சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் “ கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது “என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம்.
உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு முளையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெந்து கொள்வது எப்போதும் நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாமல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :



உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.


வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.


தலைவலி :


கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.


வயிற்றுப் பிரச்னைகள் :



தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.


கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.


வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

அம்மைநோயைத் தடுக்க!



அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும், மேலும் பல நோய்கள் வரும் முன் தடுக்கவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


அம்மைநோயைத் தடுக்க:

ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.


அம்மைநோய் வேகத்தை தணிக்க:



பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும்.


அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும்.


 தினம் சந்தனச் சோப்பு போடவும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

தெரிந்துக் கொள்வோம் : புகைத்தலைப் பற்றி?



இன்றைய உலகில் ஆண்களில் பெரும்பாலனோர்க்கு ஆறாவது விரலாய் இருப்பது சிகரெட் தான். இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.


சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.


கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.


உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.


புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.


ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.


உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................


புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.


மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.


இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.


ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.


இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.


இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.


ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:


புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.


பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.


புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.


இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.


புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.


யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.


இன்றைய உலகில் ஆண்களில் பெரும்பாலனோர்க்கு ஆறாவது விரலாய் இருப்பது சிகரெட் தான். இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.


சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.


கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.


உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.


புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.


ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.


உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................


புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.


மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.


இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.


ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.


இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.


இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.


ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:


புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.


பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.


புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.


இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.


புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.


யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.


பொல்லாத புகைப்பழக்கம்
இல்லாதிருப்பதே ஒழுக்கம்