Sunday, 7 December 2014

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


nov 7 - sugar chart.1


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                            

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

nov 7 - sugar chart

தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...

பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.

பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.


சோப்புத் தண்ணீர்

கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து, அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம்.

கள்ளிச்செடி

கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், கள்ளிச்செடியின் பாலில் இருந்து வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்.


 தேங்காய் நார்

தேங்காய் நாரைக் கொண்டு, சுவற்றில் இருக்கும் கம்பளிப்பூச்சிகளை ஒன்று சேர்த்து, அதன் மேல் தேங்காய் நாரை போட்டு எரித்தால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்.


வெள்ளை வினிகர்


வெள்ளை வினிகரை கம்பளிப்பூச்சியின் மீது தெளித்தால், அந்த வினிகரில் உள்ள ஆசிட், கம்பளிப்பூச்சியை உடனே கொன்றுவிடும்.


பூண்டு


பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அவை இறந்துவிடும்.


வெங்காயம்


தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தால், அந்த வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாசனையால், கம்பளிப்பூச்சிகள் வராமல் இருக்கும்.

ஜின்செங்


ஜின்செங் என்னும் வேரில் உள்ள சாற்றை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், அந்த வேரில் உள்ள கசப்புத் தன்மையால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்

 மிளகு


மிளகை பொடி செய்து, அதனை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கலாம்.

ஆண்டு விழாக்களும் அதன் சிறப்புப் பெயர்களும்!


வ.எண்   -  ஆண்டு -     சிறப்புப்பெயர்

1  -   முதல் ஆண்டு   -  காகித விழா


2  -   இரண்டாம் ஆண்டு -    பருத்தி விழா
 

 3  -   மூன்றாம் ஆண்டு  -   தோல் விழா
 

4  -   நான்காம் ஆண்டு   -  மலர், பழ விழா
 

5   -  ஐந்தாம் ஆண்டு  -   மர விழா
 

6    - ஆறாம் ஆண்டு   -  சர்க்கரை ,கற்கண்டு விழா
 

7  -   ஏழாம்ஆண்டு -    கம்பளி, செம்பு விழா
 

8  -   எட்டாம் ஆண்டு -    வெண்கல விழா
 

9    - ஒன்பதாம் ஆண்டு  -   மண்கலச விழா
 

10    - பத்தாம் ஆண்டு   -  தகரம் ,அலுமினியம் விழா
 

11   -  பதினோறாம் ஆண்டு   -  இரும்பு விழா
 

12   -  பனிரெண்டாம் ஆண்டு  -   லினன் விழா
 

13    - பதிமூன்றாம் ஆண்டு  -   மின்னல் விழா
 

14   -  பதினான்காம் ஆண்டு -    தந்த விழா
 

15   -  பதினைந்தாம் ஆண்டு   -  படிக விழா
 

16  -   இருபதாம் ஆண்டு    - பீங்கான் விழா
 

17    - இருபத்தைந்தாம் ஆண்டு  -   வெள்ளி விழா
 

18    - ஐம்பதாம் ஆண்டு  -   பொன் விழா
 

19     -அறுபதாம் ஆண்டு    - வைர விழா
 

20  -   எழுபத்தைந்தாம் ஆண்டு  -   பவள விழா
 

21 -    நூறாம் ஆண்டு-    நூற்றாண்டு விழா

கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்!

 homemade-tomato-juice-recipe

கற்றாழை

கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

தக்காளி சாறு

தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

உப்பு நீர்

கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

ஆயில் மசாஜ்

ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ஆலிவ் ஆயில்

சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

தயிர்

2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்.

சர்க்கரை

ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

உருளைக்கிழங்கு

கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?

Pregnant women during pregnancy in the doctor's recommendation, without consulting any pills should not eat. Project candy sugar diet to prevent the disease from coming.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.  திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.  இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும்.
முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம்.  முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம்.
எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சர்க்கரை நோய் வந்தவர்கள் அதிக தூரம் நடப்பது இல்லை. இதன் காரணமாக நோயின் பாதிப்பு அதிகரிப்பதோடு, உடலில் இன்சுலின் சுரப்பதும் தடைபடுகிறது.  இதைத் தவிர்க்கவே உடற்பயிற்சியோடு, நடப்பதற்கும் நோயாளிகள் முன்வர வேண்டும். தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது மிகவும் அவசியம். மெதுவாகவோ அல்லது சிறிது வேகமாகவோ ஓடுவதும் நல்லது. நீச்சல், விரைவு நடை பயிற்சி செய்தால் நன்மை பயக்கும்.

வராது... வந்துவிட்டால் டென்ஷன் ஆகாதீங்க


சர்க்கரை நோய் என்பது இப்போது சர்வசாதாரணமாக எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக மாறி வருகிறது. பரம்பரையாக வருவதோடு, உணவு பழக்கத்தாலும் பலரை பாதிக்கிறது. இந்த நோய் வரக்கூடாது. வந்துவிட்டால், கவலை வேண்டாம், சமாளிக்கலாம் நன்றாக வாழலாம். இதோ சில எளிய வழிகள்:

மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யுங்கள். சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிடவும்.

காலை, மதியம், மாலை, இரவு என்ற அடிப்படையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

கீரை, காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும். கிழங்கு வகை உணவை தவிர்க்கவும்

‘என்னை அறிந்தால்’ டீசர் சாதனை குறித்து சோனி மகிழ்ச்சி!

 கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு யூ டியூபில் வெளியாகிய ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இதுவரையில் 2.5 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களையும் அறுபது ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது. ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் டீசர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.


இதனால் பலத்த போட்டிகளுக்கிடையே இதன் இசை உரிமையை கைப்பற்றியிருக்கும் சோனி நிறுவனம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இதுகுறித்து தென்னக சோனி நிறுவனத்தின் தலைவர் அசோக் பர்வானி கூறியதாவது: “என்னை அறிந்தால் டீசர் பெற்றிருக்கும் இமாலய வரவேற்பினால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். வழக்கம்போல் இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் மிக சிறப்பாக இசையமைத்துள்ளார். கூடிய விரைவில் இதன் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன்பின் பாடல்கள் இந்திய அளவில் பேசப்படும்” என்றார்.

உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்!




உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.
கால்சியம்

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள்கள்

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

வால்நட்

வால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

இஞ்சி

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

மிளகு

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

தண்ணீர்

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

முட்டை
முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-




உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் :

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடிதது வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றததை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.

இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.

பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ் காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

‘13ம் பக்கம் பார்க்க’(திரை விமர்சனம்..!) லாஜிக் இல்லாமல் பார்க்கலாம்.

பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால் மரணம் என்று எழுதியிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது என்று வையாபுரி படிக்கிறார். அதில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவேன் என்று எழுத்தியிருக்கிறது. இதை இவர் நம்பாமல் இருக்கிறார்.

இதற்கிடையில் அந்த புத்தகத்தை ஒருவர் வாங்கிச் செல்கிறார். குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வையாபுரி இறந்து விடுகிறார். அந்த புத்தகத்தை வாங்கியவரும் இறந்து விடுகிறார். இவர் குடியிருந்த வீட்டிற்கு திரைப்பட கதாசிரியரான ஸ்ரீராமும், அவரது மனைவி ஸ்ரீபிரியங்காவும் வருகிறார்கள்.

ஸ்ரீபிரியங்கா மீது இந்த வீட்டில் இறந்தவருடைய ஆவி புகுந்து விடுகிறது. ஐயர் பெண்ணான இவர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார். இதை பார்க்கும் ஸ்ரீராம் அதிர்ச்சி அடைகிறார். மேலும், ஸ்ரீபிரியங்கா கற்பமாகிறார். பேய் புகுந்ததை அறியாத ஸ்ரீபிரியங்கா கருவை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார். இந்த விஷயம் ஸ்ரீராமுக்கு தெரியவர, உடனே ஸ்ரீபிரியங்காவின் தந்தையான டெல்லி கணேசுக்கு போன் செய்து வரவழைத்து அவருடன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். ஊருக்கு சென்றவுடன் பேய் அவரை விட்டு விலகுகிறது.

பிறகு கதாசிரியரான ஸ்ரீராமிற்கு ஒரு படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒரு பேய் படத்திற்கு உண்டான கதையை தயார் செய்து தரும்படி கேட்கிறார்கள். இதற்காக தன் வீட்டில் இருக்கும் பழைய புத்தகத்தில் இருந்து அந்த பேய் புத்தகத்தை எடுக்கிறார். அதை படித்து கதையை உருவாக்குகிறார். மறுநாள் அவரும் இறந்து விடுகிறார்.

இவர் இறந்ததை போலீஸ் விசாரிக்கிறது. இவருடைய பேக் மற்றும் புத்தகங்கள் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்கிறார்கள். அங்கு ஒரு பெண் போலீஸ் இந்த புத்தகத்தை படிக்கிறார். பிறகு அவரும் இறந்து விடுகிறார்.

இப்படி அந்த புத்தகத்தை படித்தவர் அனைவரும் இறந்து வரும் சூழ்நிலையில் ஸ்ரீபிரியங்கா, தன் கணவர் இறந்த மாதிரி வேற யாரும் இனிமேல் இறக்க கூடாது என்று முடிவு செய்து, அந்த புத்தகத்தின் பின்னணியை அறிய ஆரம்பிக்கிறார்.

இறுதியில் அந்த புத்தகத்தின் மர்மத்தை கண்டுபிடித்து இறப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகி ஸ்ரீபிரியங்காவிற்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் உடம்பினுள் பேய் புகுந்த பிறகு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பேய் புகுந்த பிறகு பெரிய இலை போட்டு சாப்பிடும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் கதாசிரியராக நடித்திருக்கும் ஸ்ரீராம் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். இடைவேளைக்குபின் இயக்குனராக நடித்திருக்கும் ரத்தன் மௌலி அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேயை ஓட்டும் சாமியாராக வரும் நளினி தன் நடிப்பால் பளிச்சிடுகிறார். ஆனால் அவர் பேசும் லோக்கல் வசன உச்சரிப்பைதான் ஏற்க முடியவில்லை.

தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தருகிறார்கள் என்று நினைத்து ஒரு புக்கை மட்டுமே மையக்கருவாக வைத்து கதாபாத்திரங்களை அதற்கேற்றால் போல் உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் புகழ்மணி. புக்கில் ஒரு பேய் கதை இருக்கிறது என்று சொன்ன இயக்குனர் ஆனால் கதையை கடைசி வரை சொல்லவில்லை. லாஜிக் மீறல்களை இயக்குனர் சரிசெய்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் சிறியதாகவே அமைத்திருக்கலாம். முகத்தில் ஒரு லைட் அடித்தால் பேய் இருக்கிறது. லைட் அனைந்தால் பேய் போய் விடுகிறது என்று அமைத்திருக்கிறார் இயக்குனர்

தாஜ் நூர், பேய் படம் என்பதாலோ மிகவும் அதிக சத்தங்களை எழுப்பி காதுகளுக்கு இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார். காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘13ம் பக்கம் பார்க்க’ லாஜிக் இல்லாமல் பார்க்கலாம்.

பாக்யராஜை மிதித்த மிஷ்கின்! கோபத்தில் திரையுலகினர்

இந்த மிஷ்கின் எங்க போனாலும் பிரச்சனையோடு தான் வருவார் போல. அந்த வகையில் சமீபத்தில் ’தரணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றவர் பெரிய பிரச்சனையை இழுத்து வந்துள்ளார்.

மேடையில் அமர்ந்திருந்த மிஷ்கின் தன் அருகில் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் இருப்பதை பார்த்தும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.அது கூட பரவாயில்லை அவர் மேல் கால் படும் அளவிற்கு உட்கார, மேடைக்கு கீழே இருந்தவர்களையே இந்த செயல் கோபப்படுத்தியது.

நடராஜா சர்வீஸூக்கு மாறினா : 20 ஆரோக்கிய பலன்கள் இருக்கு தெரியுமா.?

 அதிகமான எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மனச்சோர்வு, மன உளைச்சல் போன்ற மனம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அண்டாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? கர்ப்ப காலத்தின் போது கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்றும் பிரசவம் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறீர்களா? மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்குமான ஒரே பதில் நடைப்பயிற்சி. ஆம், நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

பொதுவாக நடைப்பயிற்சி, ஆரோக்கியமாக இருப்பதற்கும், அளவுக்கு அதிகமான எடையை குறைப்பதற்கும் பயன்படும் எளிய மற்றும் சுலபமான வழிகளுள் ஒன்றாகும். எப்போதும் சுறுசுறுப்பாகவும், பெரும் பிரயத்தனம் ஏதுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பும் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி மிகவும் சிறந்த ஒன்றாகும். எனவே இரு சக்கர வாகனங்களைப் புறக்கணித்து விட்டு, நடராஜா சர்வீஸுக்கு மாறி, நல்ல ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்வுக்குமான பயணத்தை துவங்கி, ஒவ்வொரு அடியையும் பயனுள்ளதாக மாற்ற முயலுங்கள். இப்போது நடைப்பயிற்சியால் கிடைக்கும் 20 ஆரோக்கிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.........

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது;தொடர்ந்து நடைப்பயிற்சி செய்து வந்தால், மிகப்பெரும் உயிர்கொல்லியான இதய நோயை அண்ட விடாமல் தடுக்கலாம். அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. மேலும், தொடர்ச்சியான நடைப்பயிற்சி, மாரடைப்பு மற்றும் பைபாஸ் சர்ஜரி ஆகியவற்றில் இருந்து, சீக்கிரமே மீண்டு வர உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது அடுத்த மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்கிறது.

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது;அன்றாடம் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மேற்கொண்டால், வாழ்க்கைத் துணையோடு படுக்கையிலும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ஏனெனில் நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக்குவதால், ஆண்மைக் குறைவு வராமல் தடுக்கும்.

ஆரோக்கியமான உடலை பரிசளிக்கிறது;ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் ஏதேனும் உடற்பயிற்சி செய்வதற்கு மட்டும் நேரம் இல்லையெனில், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஏனென்றால் தொடர் நடைப்பயிற்சி ஆரோக்கியமாக இருப்பதற்கான மிக எளிய வழியாகும்.

ஏரோபிக் வடிவிலான ஒருவித பயிற்சி;தொடர் நடைப்பயிற்சியும் ஏரோபிக் உடற்பயிற்சியின் ஒரு வகையாகும். இது மனநிலையை மகிழ்ச்சிகரமாக்கி, உடலளவிலும் ஆரோக்கியமாக்கி நல்வாழ்வுக்கு வித்திடும்.

நோய்களை குணப்படுத்துகிறது;தொடர் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடலில் உள்ள நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருப்பது போல் உணரச் செய்யும். மேலும் உயிரியல் ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் உணர்வுப்பூர்வ ஆரோக்கியம் போன்ற அனைத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது;நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள், நோயாளிகளிடையே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது. "சத்தமில்லாத உயிர்கொல்லி" என்று அச்சுறுத்தப்படும் உயர் இரத்த அழுத்த நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, தசைகளுக்குச் செல்லும் பிராண வாயுவை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது;நடைப்பயிற்சி எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, உடலின் எலும்பு இழப்பை மட்டுப்படுத்துகிறது. இந்த எளிய உடற்பயிற்சி தண்டுவடம், கால்கள் மற்றும் இடுப்புக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாகும்.

சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது;தொடர் நடைப்பயிற்சி, சர்க்கரை நோய் தாக்கியவர்களின் பி.எம்.ஐ அளவை மேம்படுத்தி, தசைகள் குளுக்கோஸை நன்றாக உபயோகித்துக் கொள்ளும்படி செய்கிறது. அதாவது, உடல் இன்சுலினை ஒழுங்காக உபயோகிக்கும் படி செய்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

மன உளைச்சலை அழிக்கிறது;நடைப்பயிற்சி மனநிலையை ஊக்குவித்து, மன உளைச்சல் வராமல் தடுக்கிறது. தவிர, அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஆற்றலோடு மன உளைச்சலை எதிர்த்துப் போராட இயலும்.

விழிப்புணர்வை அதிகரிக்கிறது;இந்த எளிய ஏரோபிக் உடற்பயிற்சி, மூளையின் விழிப்புணர்வை மேம்படுத்தவும் உதவுகிறது. நடைப்பயிற்சி மூளைக்குச் செல்லும் பிராணவாயுவை சீராக்கி, அதன் இருப்பை மேம்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும் நடைப்பயிற்சி மூலம் விடுவிக்கப்படும் அட்ரினலின் போன்ற இரசாயனங்களின் வெளியேற்றமும் விழிப்புணர்வுக்கான மற்றொரு காரணமாகும்.

நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது;நடைப்பயிற்சி, பகல் பொழுதில் உடல் சக்தியை ஊக்கப்படுத்துவதினால், இரவில் நீண்ட நேரம் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். ஆகவே நல்ல தூக்கம் வர வேண்டுமெனில், நடைப்பயிற்சியை தூக்க நேரத்திற்கு மிகவும் முன்னதாகத் திட்டமிட்டுக் கொள்ளுதல் அவசியம்.

மன அழுத்தத்தைக் கொல்கிறது;நடைப்பயிற்சி, கோபதாபங்கள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, மன நலத்தைப் பேணுகிறது. எனவே மன அழுத்தத்தில் தத்தளிப்பது போல் உணர்ந்தால், உடனே வெளியே வந்து சற்று நேரம் நடந்தால், அந்த உடல் இயக்கம் மற்றும் சுத்தமான காற்றின் கலவை, உடனடியாக மனதை லேசாக்கி, மன நிலையை சீராக்கும்.

கருச்சிதைவைத் தவிர்க்கிறது;கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடல் சோர்வைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதர கர்ப்ப காலப் பிரச்சனைகளையும் குறைக்கிறது. இது உடல் எடையை எளிதாகக் குறைக்கவும் உதவி செய்து, கர்ப்ப காலத்தின் போது சர்க்கரை நோய் வரக்கூடிய சாத்தியக்கூறையும் குறைக்கிறது. மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்வது கருச்சிதைவு வராமல் தடுக்க வல்லதுமாகும்.

உடல் எடையைக் குறைக்கிறது;நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நாளில் தோராயமாக 5,000 அடிகள் நடந்தால், அது உடலில் உள்ள கொழுப்பையும், ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

சகிப்புத் தன்மையை வலுவாக்குகிறது;ஒரே சீரான வேகத்தில் நடைபயற்சி மேற்கொள்வது, தசைகளை வலுவாக்கி, அவற்றின் தாங்கிக் கொள்ளும் சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது தனி நபர்களிடையே சகிப்புத் தன்மையை வலுவாக்கவும் உதவுகிறது.

மீண்டும் இளமையாக்குகிறது;நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் ஒரு வித ஊக்கியாக விளங்குகிறது. அதாவது மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைத்து மீண்டும் இளமையாக்கி, நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளவும் ஊக்கமளிக்கிறது. மேலும் உடற்பயிற்சி மனநிலையை சீராக்கி, உடல் சக்தியைப் பெருக்கி பூரணமான உயிர்ப்புடன் விளங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

வாழ்நாளை நீட்டிக்கிறது;தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வாழ்நாளில் மேலும் சில வருடங்களை நீட்டிக்க உதவும். அதி முக்கியமாக, இது மூட்டு அழற்சி போன்ற முதுமை தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

உடலை வலுவாக்குகிறது;நல்ல நடைப்பயிற்சி கால்களை வலுவாக்கி, அவற்றிற்கு அழகிய வடிவத்தை கொடுக்கும். அதிலும் இது கெண்டைக்கால் தசைகள், தொடைகள், பின்னங்கால் தசைநார்கள் போன்றவற்றிற்கு கட்டுக்கோப்பான வடிவை அளித்து, புட்டத் தசைகளை மேலெழும்பச் செய்யும். குறிப்பாப நேராக நிமிர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், வயிற்றுத் தசைகளை இறுகச் செய்து, இடுப்புப் பகுதியையும் அழகானதாக செதுக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது;நடைப்பயிற்சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.

கெட்ட கொழுப்பை குறைக்கிறது;தெருவில் இறங்கி ஒரு நடை போய் வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் இதய நலமும் மேம்படும். நடைப்பயிற்சியானது ஒரு நாளைக்கு சுமார் 300 கலோரிகள் வரை எரிப்பதற்கு உதவும். இதனால் கெட்ட கொழுப்பு குறிப்பிடத்தக்க அளவு குறையும். எனவே, மேலும் தாமதிக்காமல் நடைப்பயிற்சி செய்வதை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டு, அது அளிக்கும் பலன்களை பூரணமாகப் பெற்று, ஆரோக்கியமான வாழ்வைப் பெற விழையுங்கள்......!

நயன்தாராவிற்கு உதயநிதி கொடுத்த விவகாரமான பட்டம்?

தென்னிந்திய சினிமாவில் அத்தனை முன்னணி நடிகர்களிடம் நடித்த நடிகை என்றால் அதில் நயன்தாராவும் ஒருவர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இதில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நண்பேண்டா. இப்படத்தில் இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ‘ நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ஒரு பட்டம் கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஹீரோக்களிடம் இருக்கும் போட்டி போதாது என்று, தற்போது லேடி வேறையா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்றக்கூடிய சாதனம்

 சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.

Handmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது.

லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.

விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.

இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் மிக எளிது. இமெயில் படிக்கவும், வலைத்தளங்களைப் பார்க்கவும், படங்களை (pictures )ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்வது ]Playing Games போன்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கு இந்த Touch Pen பயன்படுகிறது.

வேர்ப் ப்ராச்சர் செயல்களில் Highlight மற்றும் annotate செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள் செயல்படுத்த முடியும்.

1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3.
2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop.
3. Slide, swap, drag to operate.
4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely
5. Activate all software icons with a simple touch like it happens on Tablets
6. Slide, swap, drag to operate
7. Uses Ultrasonic and Infrared Technologies
8. Ultra simple user experience

இந்த டச்ஸ்கிரீனில் உள்ள சிறப்பம்சங்கள்:

Handmate Windows 8 Pen Main Specifications

Technology: Ultrasonic and Infrared
Coverage area: up to17″(MAX)
Resolution: 100 DPI
Accuracy: 0.2mm
Communication: USB 2.0 Full Speed , USB Cable
Power Source: Pen: 2 x SR41 batteries
Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 )
Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed
Standards: FCC/CE
Platform Support:
Windows® 8
Sampling rate:58 samples/second
Power consumption:
Operating Temperature: +10°c to +35°c.
Storage Temperature: -10°c to + 50°c.
Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c).
Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm)
Weight: about 9gr.
Color: Black

இச்சிறப்பு மிக்க Handmate Windows 8 Pen வாங்கவும், அதைப்பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும்

கப்பல் படத்தை பிரமாண்ட கப்பலாக்கிய டைரக்டர் ஷங்கர்!

டைரக்டர் ஷங்கரிடத்தில் உதவியாளராக பணியாற்றி விட்டு வெளியே வந்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார் அட்லி. ஆர்யா-நயன்தாரா நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, இப்போது ஷங்கரின் இன்னொரு உதவியாளரான கார்த்திக்கும் கப்பல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், விடிவி கணேசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ப்ரண்ட்ஷிப்பை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்த படத்தில் காதலையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் டைரக்டர் கார்த்திக். ஆனால் அதை காமெடி கலந்து இரண்டரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஸ்கிரிப்ட் பண்ணியிருககிறாராம். அதனால் படத்தை முடித்து விட்டு டைரக்டர் ஷங்கருக்கு அவர் ஷோ போட்டு காண்பித்திருக்கிறார்.

ஏற்கனவே காமெடி படங்களை அதிகம் ரசிப்பவரான டைரக்டர் ஷங்கர், கப்பல் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தாராம். அதோடு, படம் பார்த்து விட்டு வந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கார்த்திற்கு போன் செய்து. இந்த படத்தை நானே எனது எஸ் பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறேன் என்று கூறினாராம். இதனால் தனது படம் பாஸ் ஆகி விட்டது என்று உற்சாகத்தில் குதித்திருக்கிறார் கார்த்திக்.

அதோடு, இந்த படத்தை ஒரு சிறிய பட்ஜெட்டில்தான் ஆரம்பித்தேன். அந்தவகையில், நான் படத்தை எடுத்து முடிக்கிற வரை இது ஒரு சிறிய கப்பலாகத்தான் இருந்தது. ஆனால், ஷ்ங்கர் சார் படத்தை வாங்கிய பிறகு இப்போது பிரமாண்டமான கப்பலாகி விட்டது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் கார்த்திக், டிசமபர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று கப்பல் படம் திரைக்கு வர இருப்பதாக கூறுகிறார்.

இது ஒரு இன்னிசை மழை… 17 பாடல்களுடன் ஜேம்ஸ் வசந்தன்

‘கண்கள் இரண்டால்…’ பாடல் மூலம் தமிழக மக்களின் கண்களையெல்லாம் தன் பக்கம் திருப்பியவர் ஜேம்ஸ் வசந்தன். கங்கை அமரனுக்கு பிறகு வளவள பேச்சும், கலகல இசையுமாக கவர்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது ஜேம்ஸ்தான். சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறியப்பட்டவரான இவர், அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் ஆனது எப்படி? இசைக்கும் இவருக்குமான தொடர்பு என்ன? என்பதெல்லாம் இப்போதைக்கு விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஏனென்றால் முதல் படத்திலேயே ஹிட் மியூசிக் டைரக்டராக முத்திரை குத்தப்பட்டுவிட்டார் அவர். அதற்கப்புறம் வந்த பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கான இடத்தை உறுதி செய்தது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார் அவர். வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக பிரமோஷன்.

இந்த படத்தில் 11 புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார். அவர்கள் அத்தனை பேரும் வெவ்வேறு கல்லூரிகளில், வெவ்வேறு துறைகளில் படித்து வருபவர்கள்! இசை சம்பந்தமான படம் என்பதால்இப்படத்தில் நடிக்கும் அத்தனை பேருக்கும் நடிப்புடன் பாடும் திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிப்பட்டவர்களையே தேர்வு செய்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

வானவில் வாழ்க்கை ஒரு நிமிட பாடல், இரண்டு நிமிட பாடல், நான்கு நிமிட பாடல் என மொத்தம் 17 பாடல்களை வைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் நடித்துள்ளவர்களையே அப்பாடல்களை பாடவும் வைத்துள்ளார். ‘வானவில் வாழ்க்கை’ படத்திலுள்ள மொத்தம் 17 பாடல்களில் 9 பாடல்களை ஜேம்ஸ் வசந்தனே எழுதியிருக்கிறார். சரி…இசையமைப்பாளராக வாழ்க்கை நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கிறது. பிறகு என்னத்துக்கு இந்த வேலை எல்லாம்?

‘‘நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்காலத்தில் ஒரு இசைப் படம் இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைத்தான் இப்போது நனவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

முன்பெல்லாம் சில படங்களில் ‘இது ஒரு இன்னிசை மழை’ என்று டைட்டிலிலேயே அறிவித்துவிடுவார்கள். வானவில் வாழ்க்கையிலும் அப்படியொரு அறிவிப்பு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அஜித், விஜய் ரசிகர்களுக்குள் மோதலை உருவாக்க நான் விரும்பவில்லை: கே.வி.ஆனந்த்!!

சோஷியல் நெட்வொர் பக்கங்களில் நடக்கும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருக்கின்றன. இப்படித்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் சமூக வலைதள பக்கத்தில் போலியான டிசைன் ஒன்றின் மூலம் அவர் ட்வீட் செய்ததுபோல ஒரு போஸ்டரை வெளியிட்டு யாரோ சில விஷமிகள் அவரை சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில் “விஜய்யின் 60வது படத்தை இயக்குவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது காதலும் ஆக்ஷனும் கலந்த படமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.. இதைப்பார்த்து அதிர்ச்சியான கே.வி.ஆனந்த், “இது பொய்யானது. அது என்னுடைய போஸ்ட் இல்லை” என மறுப்பு செய்தி போட்டார்.

கொஞ்ச நேரத்தில் அந்த டிசைன் அந்த விஷமிகளாலேயே அழிக்கப்பட்டு விட்டது.. ஆச்சர்யமாக கே.வி.ஆனந்தும் தான் தெரிவித்த மறுப்பு செய்தியையும் அழித்து விட்டாராம். காரணம் என்னவென்று கேட்டால், “இந்த செய்தியை அடிப்படையாக வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் மோதிக்கொள்வதை நான் விரும்பவில்லை” என்று சொல்லியுள்ளாராம்.

ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் மிஸ்டர் இறைவன்!

தமிழ்சினிமாவில் தங்கர்பச்சான்களுக்கு பஞ்சமேயில்லை. பேசுவார்கள்… பேசுவார்கள்… மேலும் பேசுவார்கள்! அடுத்தவன் பாக்கெட்டில் வெற்றிலை பாக்கு சமாச்சாரத்தை துப்பி வைக்குமளவுக்கு பேசுவார்கள். அதில் நல்லதும் இருக்கும். ஊசிப்போனதும் இருக்கும். தங்கராவது பரவாயில்லை. பேச்சில்தான் பிரச்சனை. மிஷ்கினின் பாடி லாங்குவேஜே பிரச்சனைதான். அவரது அமெரிக்கா ஸ்டைல் நாகரீகத்தை அமிஞ்சிக்கரையில் அப்ளை பண்ணினால் என்னாகுமோ? அதுதான் இப்போதும்!

பிரச்சனை என்னய்யா..? அதை சொல்லு முதல்ல…

‘தரணி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மூத்த இயக்குனர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த திரைக்கதை கிங் என்றெல்லாம் பாராட்டப்படும் கே.பாக்யராஜ் வந்திருந்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் பலமுறை பாராட்டுகள் பெற்ற மூத்த கவிஞர் முத்துலிங்கம் வந்திருந்தார். அங்குதான் மிஷ்கினும் வந்திருந்தார். பிரபுசாலமனும் அங்கிருந்தார். மேடையில் நாற்காலி போடப்பட்டது. காலக்கிரகம் அங்குதான் கை கொட்டி சிரித்தது. மிஷ்கினை கொண்டு வந்து பாக்யராஜ் பக்கத்தில் அமர வைத்துவிட்டார்கள்.

வந்த வேகத்தில் பொசுக்கென தன் காலை உயர்த்தி இன்னொரு கால் மீது போட்டுக் கொண்ட மிஷ்கின் அதை ஆட்டிக் கொண்டேயிருந்தது கூட பிரச்சனையில்லை. அவர் கால். ஆட்டலாம். ஆனால், அது பக்கத்திலிருந்த பாக்யராஜின் தொடையில் தட்டி, மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தது. முடிந்தளவுக்கு நாகரீகமாக ஒடுங்கி ஒடுங்கி உட்கார்ந்தார் பாக்யராஜ். மிஷ்கின் விட்டால்தானே? பார்த்தவர்கள் அதிர்ச்சியாக அதைவிட பேரதிர்ச்சிக்கு ஆளானார் அவர். இருந்தாலும் மெல்லிய சிரிப்போடு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.

‘இங்க முத்துலிங்கம் பேசும்போது சொன்னாரு. பாக்யராஜ் கூட சொன்னாரு’ என்று தனது உரையில் அவர்களின் பெயருக்கு பின்னால் ஒரு ‘சார்’ கூட போடாமல் ஒருமையில் விளித்து கரும்புள்ளி பூசிக் கொண்டார் மிஷ்கின். ஆரம்பகால கே.பாக்யராஜை போல தொடர்நது ஏழெட்டு ஹிட்டுகள் கொடுக்கக் கூடிய நிலையில் மிஷ்கின் இருந்தால், அவரது கால் பக்கத்திலிருப்பவரின் மூக்கை உரசியிருக்குமோ என்னவோ?

ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் மிஸ்டர் இறைவன்!

கணினியில் தொலைந்து போன Fileஐ கண்டுபிடிப்பது எப்படி?

 Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.

1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.

2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.

3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.

4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.


லிங்கா படத்திற்கு மட்டும் ஏன் அடி மேல் சிக்கல்?

டிசம்பர் 12ம் தேதி நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியை திரையில் காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் படத்தின் மீது போட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், மீண்டும் லிங்காவிற்கு வேறு பிரச்சனை ஒன்று வந்துள்ளது. தற்போது சென்னையைச் சேர்ந்த பி.சக்திவேல், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் லிங்கா என்னுடைய கதை என்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், எழுத்தாளர் பொன்குமரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்தால் தான் படம் திரைக்கும் வரும் என கூறப்படுகிறது.

கத்தி : உண்மையில் விவசாயிகளி​ன் பிரச்சனையா​?

ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் உண்டு. இன்றைய சினிமாக்கள் அதுமாதிரியான எதிர்பார்ப்பு கொண்ட சமூகத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் இளவரசன்களாக சினிமா கதாநாயகர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான  ஒரு கதை அமைப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி இருக்கிறது.



கத்தி படம் சமூக பிரச்சனையை பேசுவதாக செய்தி பரவியது. நமது சினிமாக்காரர்களின் சமூக அறிவு எவ்வளவு நுட்பமானது என்று நமக்கு தெரியும். இருந்தாலும். அதையும் பார்த்து விடுவது என்று சென்ற போதுதான் ‘பழைய மொந்தையில் புதிய கல்’ என்று தெரிந்தது. அச்சு அசலாக எம்.ஜி.ஆர். நடித்த ‘ எங்கள் வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் தழுவல். கோழை, வீரன் என்று அங்கே இரண்டு எம்.ஜி.ஆர். இங்கே இரண்டு விஜய். இரண்டு படத்திலும் சந்தர்ப்ப வசத்தில் இருக்கும் இடம் மாறி கொள்கிறார்கள். அங்கே நம்பியார் பாத்திரத்தில் இங்கே புதிய வில்லன். இரண்டு படத்திலும், மாறிவரும் கதாநாயகன் போலி என்பது தெரிய வருகிறது. இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, போலி நிஜத்தை காப்பாற்றிவிட்டு மறைந்து விடுகிறது. இதுதான்  இரண்டுக்கும் பொதுவான கதை அம்சம்.


சுமார் 50 நிமிடங்கள் படத்தில் எந்த சமூகப் பிரச்சனையும் தலைகாட்டவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் வாக்காளர்களாகப் போகும் பிஞ்சுகளை குஷிபடுத்தும் விஜயின் வழக்கமான உடல் மொழி சேட்டைகளும், ஆபாசம் தெறிக்கும் குத்துப்பாடலுமாகவே படம் போகிறது. கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்து வந்த விஜய் கருப்பு என்ற முருகானந்தமாக வருகிறார். 50 நிமிடங்களுக்கு பிறகு சமூக பொறுப்பு கொண்ட ஆனால் ஆளுமையும், போராடும் திறனுமற்ற புதிய விஜய் ஜீவாவாக அறிமுகமாகிறார். கம்யூனிச தோழர் பா. ஜீவானந்தத்தை நினைவு கூறும் விதமாக ஜீவானந்தம் என்ற ஜீவாவாக அறிமுகமாகிறார். அவர் ஒரு விபத்தில் சிக்க விவசாயிகளுக்காக போராடும் அவரை பன்னாட்டு நிறுவன முதலாளியின் கூலிப்படை துரத்துகிறது. ஜீவாவின் கார் விபத்துக்குளாக  கூலிப்படை சுட்டு விட்டு செல்கிறது. மயக்கத்தில் இருக்கும் ஜீவாவை முருகானந்தம் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தனது உடைமைகளையும் ஜீவாவின் அருகில் வைத்துச் செல்கிறார். கொல்கத்தா காவல் துறை தமிழகம் வந்து உடமைகளை வைத்து முருகானந்தத்திற்கு பதில் ஜீவாவை கைது செய்கிறது.


பின்னர், முருகானந்தத்தை ஜீவா என்று நினைத்து கலெக்டர் முதல் பன்னாட்டு தொழில் முதலாளி வரை நம்பி ஏமாறுவது தான் கதை. கதையின் திருப்பமாக, லயன்ஸ் கிளப், விசயாயிகளுக்கான ஜீவாவின் போராட்டத்தை கௌரவித்து விருதும் 25 லட்சம் ரூபாய் நன்கொடையும் கொடுக்கிறது. ஜீவாவிற்கு பதிலாக செல்லும் முருகானந்தம் ஜீவாவின் தியாகத்தையும், கிராமங்களில் விவசாயிகளுக்கு இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும் புரிந்து கொள்கிரார். லயன்ஸ் கிளப்பில் கிடைக்கும் 25 லட்சத்தோடு ஒடிபோகும் தனது திருடன் புத்தியை மாற்றிக் கொண்டு ஜீவா இருந்து செய்ய வேண்டியதை முருகானந்தம் செய்து முடிக்கிறார். வில்லன் கதையையும் முடிக்கிறார். முருகானந்தம், சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள எதார்த்தங்களை மீறிய கற்பனை உத்திகளை கையாள்கிறார். நெல்லையில் தன்னூத்து என்ற கிராமத்தில் பூமிக்கு அடியில் இருக்கும் நீருற்றை வெளியே கொண்டு வந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும் என்பதை ஜீவா கண்டு பிடிக்கிறார். அதை தெரிந்து கொள்ளும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று அந்த கிராம விவசாயிகளிடம் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்க முயற்சிக்கிறது. அந்த தண்ணீர் கொண்டு குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை முருகானந்தம் எனும் விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பது கதையின் முடிவு.


முற்றிலும் சினிமாதனத்தை கொண்டு பேசப்பட்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனை இது. ஆனால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளை பேசவே இல்லை.


விவசாயிகளின் பிரச்சனைகளில் முக்கியமானது கடன் சுமைதான். தவிர உர விலையேற்றம், நியாயமான கொள்முதல் விலை இல்லாமை. வறட்சியான காலங்களில் நிவாரணம் இன்மை, நிவாரணம் கொடுப்பதில் உள்ளூர் அரசியல் தலையீடு, அதை பெறுவதற்கு கொடுக்கும் லஞ்சம் என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நாட்டில் உற்பத்தியாகும் தண்ணிரை முறையாக தேக்கி, அனைத்து பரப்புக்கும் கால்வாய்களை வெட்டி, குளங்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே விவசாயத்துக்கான தண்ணீர் தேவை கணிசமாக குறைந்து விடும். விவசாயிகளுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை பெருவர்த்தக நோக்கத்தில் மரபணு மாற்ற விதைகளை அரசு இறக்குமதி செய்வது. இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பற்றி எதையும் படம் பேசவில்லை.


தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிட்டால் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதாக கதை சுருக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் உண்மையான பிரச்சனை பற்றி இயக்குனர் முருகதாசுக்கு எதுவும் தெரியவில்லையென்பதை தான் காட்டுகிறது. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்வதால் 30 மூட்டைகள் நெல் உற்பத்தி செய்யலாம். இப்போது மூடை 900 முதல் 1000 ரூபாய் வரை விலை இருக்கிறது. அப்படியென்றால் அதிகபட்சம் 30,000 ஈட்டலாம். ஒரு ஏக்கர் பரப்புக்கு ஆகும் செலவு 15000 ரூபாய் என்றால் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பில் கிடைக்கும் லாபம் 15000 ரூபாய்தான். இது ஆறுமாத கணக்குக்கு. வருடத்திற்கு அவர் இரண்டு பருவம் விவசாயம் செய்வதால் அவரது நிகரலாபம்  ஆண்டுக்கு வெறும் 30,000 ரூபாய்தான். மாதத்திற்கு 2,500 ரூபாய் என கணக்கு வருகிறது. ஒரு விவசாயி ஒருஏக்கர் பரப்பில் காலத்துக்கும் விவசாயம் செய்து மாதத்திற்கு 2,500 ரூபாய் மட்டும் பயனீட்டி அதற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி இருக்கிறது. மழை பொய்த்தாலோ, பயிர் விளைச்சல் குறைந்தாலோ, உரம், பூச்சிமருந்து விலைகள் ஏறினாலோ கொள்முதல் விலை குறைந்தாலோ அதன் இழப்பையும் அந்த விவசாயிதான் தாங்கவேண்டும்.



ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு அந்நிலம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 2500 ரூபாய் தான் தரமுடியும் என்றால், நாட்டில் 60 சதவீதமான விவசாயிகள் அரை ஏக்கருக்கும் குறைவான நிலம்தான் வைத்துள்ளார்கள். அவர்கள் சராசரி மாத வருமானமாக வகுபடும் தொகை 1250 ரூபாய்தான். அதனினும் சிறிய துண்டு துக்கடா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் கணக்கிட்டுப் பாருங்கள். அவர்கள் அந்நிலத்தில் 100 வருடங்கள் 3 தலைமுறைகள் பயிர் செய்தால் 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால், அதே நிலத்தை, தான் வாழும் காலத்திலேயே விற்று 30 லட்சத்தை சம்பாதிக்க முடியும். இரண்டில் எதை செய்ய ஒரு விவசாயி விருப்புவான்? தண்ணீர் இல்லாத நிலங்களை மட்டும் இல்லை. உபரியாக தண்ணீர் வசதி உள்ள நிலங்களையே விற்று கோடி ரூபாய் ஈட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதன் பின்னே இருப்பது  நிகழ் தலைமுறையிலேயே கொள்ளை ஆதாயம் அடையும் நோக்கம்தான். அதற்காக விவசாயிகளே பயிர் செய்யாமல்  நிலத்தை காயப்போட்டு விட்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, நஞ்செய் நிலத்தை புன்செய் நிலம் என்று சான்றிதழ் வாங்கி, நல்ல ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்க தயாராக இருக்கிறார்கள். தாராளமயமும், தனியார்மயமும் அதற்கான வாசலை திறந்திருக்கிறது. இதனை தடுப்பதற்காக மத்திய அரசு விவசாய நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு விற்பதற்கு தடை விதிக்கும் மசோதா ஒன்றை போன ஆட்சியிலேயே கொண்டு வந்தது. ஆனால் அது இன்னும் நிறை வேற்றப்படவில்லை.


தவிர, 5 முதல் 10 ஏக்கரில் அணைக்கட்டு பாசனத்தில் பயிர் செய்யும் விவசாயிகள் வருடத்திற்கு 3 முதல் 5 லட்சம் வரை பயனீட்டுகிறார்கள். 100 முதல் 5000 ஏக்கர் வரை வைத்து அதிக பயனீட்டும் பண்ணையார் விவசாயிகளும் இருக்கிறார்கள். மழையளவு போதுமானதாக இருந்து, முறையான காலத்தில் தண்ணீர் திறந்து விட்டால் பெரிய பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு பாதிப்பு இல்லை. எல்லாம் சரியாக அமைந்தாலும் சிறு, குறு நில விவசாயிகள் எப்பயனும் அடைய முடியாது. அவர்கள் தற்கொலைக்குப் பின்னால் இருப்பது விவசாயம் தோற்பது காரணமல்ல. அவர்கள் வைத்திருக்கும் நிலம் போதிய பயனை ஈட்டி தராததுதான் காரணம். அவர்களுக்கு விவசாயம் போக மாற்று தொழிலுக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் போதிய பயனில்லாத சிறு, குறு விவசாயிகளுக்காக கொண்டு பரப்பட்டதுதான். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை முடித்து வைக்கும் யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. அதனால் தான் கத்தி படம் விவசாயிகளின் உண்மையான பிரச்சனையை பேசவில்லை என்கிறோம்.


தன்னூத்து கிராமத்தில் தண்ணீர்  உறிஞ்சி குளிர்பானம் தயாரிக்க வரும் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு நிலங்களை விற்க அவ்வூர் விவசாயிகளே தயாராக இருப்பதையும் படம் பேசுகிறது. தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்து பயனில்லாத குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள்தான் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலத்தை வைத்து எப்படி பிழைப்பு நடத்துவது என்று கருதி அந்நிலங்களை விற்று வெளிநாடு செல்கிறார்கள் என்பது தான் நிஜம்.


ஆனால் கதையில், வெளிநாட்டில் கூலி வேலைக்கு சென்ற 15000 இளைஞர்கள், தண்ணீர் கிடைத்தால் ஊருக்கு திரும்பி வந்து தாங்கள் விவசாயமே செய்ய விருப்பம் தெரிவிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால், உண்மையில், அதிக பயனீட்டும் ஒரு விவசாயிகூட தன் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விட மருத்துவம், பொறியியல் படித்து கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். அப்படியாக படித்து உயர்ந்து, வாழ்க்கை சூழலும், தரமும் மாறிப் போனவர்கள் தங்கள் முன்னோர்கள் பிழைத்து வந்த விவசாய தொழிலை வெறுப்பதுடன் அவற்றையும் விற்று மண்ணை சில்லறையாக்க விரும்புகிறார்கள். விவசாய நிலங்கள் சொத்து வர்த்தகமாவதில் இவர்களின் பங்கு கணிசமானது.


நாம் ஒரு உண்மையை பேசியாக வேண்டும். வருடம் தோறும் உணவு உற்பத்தி செய்யும் பரப்பு சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தி குறைந்து உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டால்தான் மக்கள் விவசாயத்தின் மீது மதிப்பும் கவனமும் தருவார்கள்.ஆனால் சூழ்நிலை மாறாக இருக்கிறது. விவசாயிகளின் வறுமையையும் போராட்டத்தையும் நகர மக்கள் கண்டு கொள்வதில்லை என்று விஜய் வசனம் பேசுகிறார். கூடங்குளத்தில் அணுமின் உலைகள் ஆபத்து குறித்து 4 ஆண்டுகளாக மீனவர்கள் போராடிவருகிறார்கள். தமிழ் நாட்டில் எந்த வர்க்கமும் திரும்பி பார்த்தது  இல்லை. கூடங்குளம், மீனவர்கள் பிரச்சனை என்று விட்டு விட்டார்கள். மீனவர் போராட்டத்தில் விவசாயிகள் ஒரு நாளாவது வந்து ஆதரவு கொடுத்திருப்பார்களா?


அணு உலை அமைக்கவும், பிற தொழிற்சாலைகள் அமைக்கவும் நிலங்களை கையகப்படுத்துவது அரசுதான். இந்த நிலம் கையகப்படுத்தும் பின்னணியில் ஆளும் கட்சியின் நகர சபை தலைவர் முதல் ஒன்றியச் செயலாளர் வரை காசு பார்க்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாயிகளிடம் பேரம் பேசி, ஆசை ஊட்டி நிலங்களை விற்று கொடுப்பதே அரசியல் கட்சியினர்தான்.  அரசியல் கட்சிகளில் பொறுப்பு வழங்கப்படாத, பதவி கொடுக்கப்படாத, கீழ்மட்டத்தில் இருந்து சுவரொட்டி ஒட்டும் தனது கடை நிலை தொண்டனுக்கு கட்சி தலைமை கொடுக்கும் மறைமுக சலுகை இது. அதை பற்றி கத்தி ஏன் பேசவில்லை?


அரசியல் நெடியே இல்லாத நிலையிலும்  கூட படம் வெளியே வர தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி தொலைகாட்சிக்கு படத்தை விற்று எதிர்படும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இச்சூழ்நிலையில், அரசியலால் ஏற்படும் சமூக நெருக்கடிகளை நேரடியாக பேச திரைப்படங்களுக்கு துணிச்சல் இல்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக போராட்ட களத்திற்கு வரும் திரைத்துரையினர் பிரச்சனைகளை தேர்வு செய்து கொள்கின்றனர். சமீபமாக, காவேரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைகளுக்கு மட்டும் தான் ஒரு குழுவாக திரண்டனர். அதிலும் எத்தனை பேர் முழுமனதுடன் கலந்து கொள்கிறார்கள் என்பது கேள்விதான்?


அரசு ஆதரிக்கும் போராட்டங்களுக்கு மட்டும் தலைகாட்டும் கலை துறையினர் அரசு எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் இருந்து நழுவிக் கொள்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை கொடுத்தபோது, நீதிபதியையும், நீதிமன்றத்தையும் கண்டித்து உண்ணா போராட்டம் நடத்திய திரை துறையினர் ஏன் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக ஒருநாள் கூட வந்ததில்லை? ஒரு அறிக்கை கூட கொடுத்ததில்லை? இதுதான் இவர்கள் சமூகப் பிரச்சனையை அணுகும் அழகு.


இந்தியாவில்  சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், சுரண்டலுக்கு எதிராகவும் தனது உடலையும், மனதையும், பொருளையும் முன்வைத்து பல பத்தாண்டுகளாக போராடியும் கூட அரசின் கொள்கைகளை மாற்ற முடியவில்லை. தேசத்தின் சொத்துகளை கொள்ளையடிப்பவர்களை தடுக்க முடியவில்லை. மேத்தா பட்கார், அருந்ததிராய், இர்ரோம் ஷர்மிளா, ப.உதயகுமார், தீஸ்தா செதல்வாத் போன்றோர் மக்களோடு மக்களாக நிற்கின்றனர். அவர்கள் அரசு பயங்கரவாதத்தையும், மாஃபியாக்கள் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைவதில்லை. ஆர். நல்லக்கண்ணு அய்யா மக்களை திரட்டி தாமிரபரணி பாதுகாப்பு போராட்டத்தை நடத்தினார். அரசை எதிர்த்தும் தனியார் முதலாளிகளை எதிர்த்தும் வழக்கு போட வேண்டியிருக்கிறது. அரசு போடும் பொய் வழக்குகளை எதிர் கொள்ளவும், தலைமறைவாக செல்லவும் நேரிடுகிறது. நிஜத்தில் நீதிக்கான போராட்டம் என்பது உடலை வருத்தி இரத்தக் கண்ணீர் சிந்துவது. ஆனால் ஒரு சினிமா கலைஞர் இதுபோனற எந்த வலியையும் உணராமல், 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, நிஜமான போராளிகளுக்கு கிடைக்க வேண்டிய எல்லா புகழையும் பாராட்டையும் இரண்டரை மணிநேர சினிமா மூலம் தட்டிச் செல்வது மிகவும் ஆபத்தானது, அபத்தமானது.

கத்தி படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் விஜய் கம்யூனிசம் பேசுகிறார்; “உன் பசி ஆறிய பிறகுள்ள இட்டிலி வேரொருவனுக்கு உரியது!” – என்கிறார். கம்யூனிசத்தை ஒரு ஃபேசனாக பேசுவது சினிமாவில் ஒரு கலையாக பின்பற்றப்படுகிறது. மேலும் சமூக பொறுப்பு கம்யூனிஸம் பேசுவோருக்கு மட்டும் தான் இருக்கிறது என்ற பொய் தோற்றம் உருவாக்கப்படுகிறது. இயக்குனர் முருகதாசும் இந்த பொய்யான புனைவுக்குள் சிக்கியுள்ளார். இவர்கள் சமூகத்தையோ, போராளிகளையோ வாசிப்பதில்லை என்பதே காரணம்.


சினிமா சொன்ன சமூகப் பிரச்சனைகளும் நல்ல செய்திகளும் மக்களை சென்றடையவில்லை. மாறாக தீய செய்திகள் அதிகமாகவே மக்களை ஆதிக்கம் செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தார். என்றாலும் அவர் படங்களில் ‘தான்’ என்ற அகம்பாவத்தை கற்றுக் கொடுத்ததில்லை. அன்று படத்தை இயக்க வந்தவர்களுக்கும் அத்தகைய ஒழுக்கம் இருந்தது. ஆனால் ரஜினியை வைத்து எடுத்த படங்களில்தான், ‘தான்’ என்ற அகம்பாவம் கொண்ட கதைகள் வர்த்தக ரீதியில் உருவாக்கப்பட்டன. அதற்கான உடல் மொழியும், முக பாவனையும் அவருக்கு நேர்த்தியாக அமைந்திருந்தது. சரியாக 80 களுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளிடத்தில் பெற்றோருக்கும் பெரியோருக்கும் மரியாதை தராத ‘அகம்’ ஏற்பட்டதை கணக்கிட முடியும். அது தற்போது நடிகர் விஜய் மூலம் தொடர்வதாக தெரிகிறது.


ஒரு மனிதனின் சொல், செயல், நடை, உடை, பார்வை பாவனை ஆகிய அம்சங்களில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். ஆனால் நமது கதாநாயகர்களின் பாவனைகளில் அக மற்றும் புற ஒழுக்கம் வெளிப்படுவதில்லை. அது இளம் சிறார் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பின்னர் அவர்கள் அதே மனபோக்கில் வளர்ந்து வாலிபமாகின்றனர். இன்று சினிமா சமூகத்திற்கு தந்திருக்கும் பிரச்சனை இது. படம் எடுக்கும் இயக்குனர்கள், வசனம் எழுதுபவர்கள், தாங்கள் கூர்தீட்டும் வசனம் மற்றும் கதைகள் மூலம் நடிகர்களிடம் பாராட்டும், தொடர் பட வாய்ப்பும் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவிர, சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிவே இல்லை.


இன்று சமூகத்தின் வளமான பிரமுகர்கள் நொருக்குத் தீனியுடன் சமூக பிரச்சனைகளையும் மென்று முழுங்குவதற்கும், இன்றைய சினிமா, சமூக பிரச்சனை பேசுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பிரச்சனைபற்றி சினைமாவில் பேசுவதற்கு பதில், சினிமாவில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக சமூகத்தில் பரவிகிடக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொள்கிறார்கள். மணிரத்தினத்தின் ரோஜா முதல் விஜயின் கத்தி வரை இதே கதை தான்.


சமூக வாழ்க்கையில் ஒரு விவசாயி எதிர் கொள்ளும் சிக்கல்களை அதன் எதார்த்ததிற்குள் போய் பேசாமல், விஜய்  எனும் பாத்திரபடைப்புகளின் நாயகனை மக்கள் மத்தியில் நிஜமான நாயகனாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியை கத்தி படம் மூலம் முருகதாஸ் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் செல்வாக்குடன் வளர்ந்து வரும் இளம் நாயகனான விஜயை அரசியல் களத்தில், அழுத்தமான தளத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தளவாடங்கள்களாக பின் நிற்கின்றன.


தாமிரபரணி ஆற்றுநீரை ஒரு குளிர்பான நிறுவனம் சுரண்டுவதாக வசனம் பேசுகிறார் விஜய். விஜயோ வசனம் எழுதிய இயக்கிய முருகதாசோ, , விவசாயிகளின் தண்ணீர்ரை உறிஞ்சி தயாரிக்கப்படும் வெளிநாட்டு குளிர் பானங்களை தங்கள் ரசிகர்கள் குடிக்க கூடாது என்று சொல்வார்களா? விஜய் சினிமாவின் வளர் இளம் பருவத்தில் பெப்சி நிறுவன விளம்பரத்தில் நடித்திருக்கிறார். உன் வயிறு நிரம்பிய போக அடுத்த  இட்டிலி வேறொருவனுடைய என்று வசனம் பேசும் விஜய், இயக்கிய முருகதாஸ் இந்த படத்திற்கு வெள்ளையாகவும் கருப்பாகவும் வாங்கிய பணம் எவ்வளவு? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? செய்துள்ள முதலீடுகள் பற்றியெல்லாம் தேசத்திற்கும் மக்களுக்கும் வெளிப்படையாக கூறுவார்களா?


பாவம்..! பீய்ந்த செருப்பை தைத்துக் கொண்டும் பேருந்துக்கு சில்லறையை எண்ணிக் கொண்டும் வாடகை ஆட்டோ பிடித்தும் போராட்ட களம் செல்பவர்களுக்கு எந்த முகவரியும் இல்லை. ஆனால், கோடிகோடியாய் சம்பாதித்துக் கொண்டு ஆடிகாரில் வாழ்பவர்களுக்கு சினிமா சில நிமிட துளிகளில் புகழையும், மக்கள் ஈர்ப்பையும் அள்ளிக் கொடுத்து விடுகிறது என்பதுதான் உண்மையான் சிக்கல். இரண்டு மணி நேர இருட்டரை வாழ்க்கை நிஜபோராளிகளை நினைவில் இருந்து மறக்கச் செய்கிறது. நடிப்பவர்களை ‘நம்ம ஆள்’ என்று உணரச் செய்கிறது. இதனால் தான் முதலில் சினிமாவை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னாரோ என்னவோ! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரகூடாது என்பதல்ல. சமூக அக்கறையுள்ளவர்கள் சினிமாகாரர்களாக இருப்பினும் ஜனநாயகத்தின் தலைமையை ஏற்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதியோடு வரவேண்டும். தகுதி என்பது பிரபல்யமோ, ‘நடித்து’ ஈர்க்கப்பட்ட மக்கள் பெருக்கமோ இல்லை. அது உண்மையான தகுதியாக இருக்க வேண்டும். அதற்கு தனது உடலை கருவியாக்க வேண்டும். நடிப்புக்கு அப்பால் எளிய மக்களின் போராட்ட களங்களில் தூய மனதுடன் பங்கெடுக்க வேண்டும். இது வெல்லாம் செய்யாமல், மக்கள் கதாநாயகன் (Mass Hero) என்ற புகழுரையுடன் அரசியலுக்கு வந்தால் விஜய்காந்துக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். விஜய் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கத்தி படம் விஜயின் அரசியல் நகர்வுக்கு மற்றுமொரு நெம்பு கோல். விஜய் விவசாயிகள் பிரச்சனை பேசுவதாக அவரது ரசிகர்கள் இணைய தளங்களில் உணர்ச்சி வசப்படுகிறார்கள் சென்னையில் விஜய்க்கு சிலை வைத்து தெய்வமாக கும்பிட்டிருக்கிறார்கள். இனி வருடம் தோறும் குருபூசை செய்தாலும் செய்வார்கள். தமிழ இளம் தலைமுறைக்கு விஜய் ஒரு கலைஞனாக மட்டும் அல்ல ஒருதலைவனாகவும் அதற்கு மேல் ஒரு தெய்வமாகவும் வெளிபட்டிருக்கிறார். ஆனால் விஜய் குறைந்த பட்சம் முதல்வர் ஆவதுபற்றி கனவு கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரது ரசிகர் ஒருவர், பாலக்காட்டில், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துவிட்டு இறங்கும் போது கால் தவறி விழுந்து இறந்திருக்கிறார். ஆனால் விஜய் இதற்கெல்லாம் இன்னும் தடை சொல்லவில்லை. அவரது மவுனம் அங்கீகாரமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற சமூக பிரச்சனை பேசும் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ வரக்கூடும். இயக்குனராக மிளிர வாய்ப்பு தேடி அலையும் இணை துணை இயக்குனர்கள் விஜய் சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளை மூளையை திருகி எழுதிக் கொண்டு இருக்கலாம்.


கத்தி படத்தை கூர்ந்து பாருங்கள். அது விவசாயிகளின் பிரச்சனையை பேசவில்லை. விஜய்யின் சமூக பொறுப்பு பற்றி மக்கள் பேச, இதுவும் கூட விவசாயிகளின் பிரச்சனைதான் என கருதும் ஒரு கருத்து கதையில் கையாளப்பட்டிருக்கிறது.


படக்குழுவின் உண்மையான நோக்கம் அதன் இறுதி காட்சியில் இருக்கிறது. மக்களுக்கு தன்னையே அற்பணித்த ஜீவாவாகவும், சாகசத்தாலும் சாதூர்யத்தாலும் எதிரிகளை சம்காரம் செய்து, அந்த புகழை சத்தியவான் ஜீவாவுக்கு கொடுத்துவிட்டு பெரும் அற்பணிப்பு உணர்வோடு ஒதுங்கி நின்று ரசிகர்களின் கண்ணீரையும் இரக்கத்தையும் கடன் கேட்கும் முருகானந்தமாகவும் விஜய் இரண்டு பாத்திரங்களில் மக்களிடம் நெருங்கி வருகிறார். மக்கள் ஜீவாவை நோக்கி ஒடி வருவதுடன் படம் முடிவுருகிறது. அதன் பிண்ணனியில், ‘யார் பெற்ற மகனோ! இவன் யார் பெற்ற மகனோ! இவன் தான் ஆதி சிவனோ!’ என ஜேசுதாசின் குரலில் பாடல்கள் ஒலிப்பதை என்ன அர்த்தத்தில் புரிந்து கொள்ள?

மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்




எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன்.

கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஐயனுக்கும் அப்பனுக்கும் உதித்ததால் ஐயப்பன் ஆக பெயர் பெற்றார். சபரிமலையில் அமர்ந்து ஞான ஆட்சியுடன் அருளாட்சி புரிந்து மானிடர்களின் பிறவித்துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். சபரிகீரிசன் சாஸ்தாவாக பதினெட்டு படிகளுடன் கூடிய சபரிமலை திருத்தலத்தில் வீற்றிருந்து வேண்டுவார்க்கு விரும்பிய வரம் அருளி எம்மைக் காத்து வருகிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தால் அது குழந்தை, வாரிசு, சந்ததி தழைக்க குடும்பம் உருவாக காரணமாகிறது. ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கிற குழந்தை இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை வடிவில் தேவர் குலத்தைக் காக்க என மணிகண்டனாக ஹரிஹரனாக அவதாரம் எடுத்தார். மும்மூர்த்திகளான சிவனும் பிரமனும் விஷ்ணுவும் கடும்தவம் இருந்து யார் வரத்தைக் கேட்டாலும் மனமிரங்கி அவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு திண்டாடுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆக அன்னை ஆதி பராசக்தியால் கொடிய அரக்கன் மகிஷாசுரன் அழிக்கப்பட, அவனது தங்கை மகிஷி கடும் சினம் அடைந்தாள். தேவர்குலத்தை பூண்டோடு அழிக்கவும் பழிவாங்கும் எண்ணத்திலும் சிருஷ்டிக்கடவுளான பிரம்ம தேவரை நோக்கி அடர்ந்த காட்டில் கருங்கற்பாறையில் அமர்ந்து கடும் தவம் இயற்றினாள். பிரம்மதேவர் அவளை நோக்கி என்னவரம் வேண்டும் எனக்கேட்க மகிஷி கூறினாள், அரிக்கும் அரனுக்கும் மகனாக பிறந்து வேறு ஒருவரிடத்து வளர்ந்த ஒருவனை தவிர ஆயுதங்களாலும் சாதாரண மானிடர்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. எனது உரோமங்களில் இருந்து என்னைப்போன்று ஆயிரக்கணக்காணோர் உற்பத்தியாகி எதிரிகளை அழிக்க வேண்டும். எனவும் வேண்டுகிறாள்.

பிரம்மரும் வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். தேவர்களையும் ரிஷிகளையும் மானிடர்களையும் வருத்த தொடங்கி விட்டாள் அசுரகுலத்து மகிஷி. அவள் படுத்திய துன்பங்களை தாங்க முடியாத தேவர்கள் காத்தற்கடவுளாகிய ஹரியிடம் சென்று முறையிட்டனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை. அதோடு வரங்கள் பெறுவதும் அதனால் சாபங்கள் அடையப் பெற்று அல்லல் உறுவதும் இயல்பு. அப்படி முன்னொரு காலவேளையில் தேவர்கள் துர்வாச முனிவரின் சாபம் அடையப் பெற்று உடல் பலவீனம் அடைந்து தளர்ச்சி உற்று முதியவர் நிலையினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதை பயன் படுத்தி மகிஷி துன்புறுத்த தேவர்கள் விஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.

காத்தற்கடவுளாகிய விஷ்ணு பகவானும் தேவர்கள் மிகுந்த வலிமை பெற திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் உண்டால் சக்தி கிடைக்கும் எனவழியைக் காட்டினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடைந்தனர். அமிர்தம் தோன்றியது. அசுரர்கள் தேவர்களுக்கு அவ்வமுதினை பகிர்ந்தளித்து உண்ண விரும்பாமல் தாமே உண்ண விரும்பி திருவமுதினை பறித்து எடுத்தனர்.

மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டி மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை தன்பால் மோகம் கொள்ள வைத்து அமுதினை பெற்று தேவர்களுக்கு அளிக்கிறார். தேவர்களும் அமிர்தத்தை உண்டு இழந்த சக்தியை மீண்டும் பெற்றனர். இதை அறிந்த ஈசன் மூவுலகமும் மையல் கொள்ளும் வதனத்தை அந்த மோகினி வடிவத்தை காண ஆவலுற்றார். மோகினி வதனத்தை கண்ணுற்ற ஈசன் அவ்வுருவில் மோகித்து மையல் கொண்டார்.

கன்னி உருக்கொண்ட திருமாலுக்கும் பரமசிவனுக்கும் உதித்த குழந்தையை பம்பா நதிக்கரையில் விட்டுசென்று விட பந்தள நாட்டு மகாராஜா எடுத்து அன்போடு வளர்க்கிறார். குழந்தை இல்லாகுறை போக்கிய அக்குழந்தையை மனிகண்டனாக எல்லாக் கலைகளையும் பயிற்றுவித்து வளர்க்கிறார். காலம் கணிந்து வர தேவேந்திரன் ஹரிகரன் காட்டுக்குள் வந்ததையும் அவர் பூர்வீகத்தையும் அறிந்து மகிஷி அரக்கியை அழித்துவிடுமாறு வேண்டிக் கொள்ள தேவர்கள் புடைசூழ அரக்கியை வதம் செய்து அனைவரையும் காக்கிறார்.

 இளம் பாலகனாக பனிரெண்டு வயதிலேயே அரக்கியை அழித்து தேவர்களை காத்த ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை தலைவலியை போக்க என்னசெய்வது எனஎண்ணம் கொண்டார். தேவர்களின் அரசன் தேவேந்திரனிடம் அன்னை தனது பிணி தீர்க்க புலிப்பால் கொண்டு வர என்னை காட்டுக்கு அனுப்பினார்கள். நான் என் செய்வேன் எனக்கேட்க தேவேந்திரனும் உடனே பெண் புலியாக உருமாறினார். அதன் மீது ஏறி அமர்ந்து மணிகண்டனும் ஏனைய தேவர்களும் புலிக்கூட்டமாக உருமாறி பந்தளநாடு நோக்கி சென்றனர். புலி மீது பாலகனான மணிகண்டனைப் பார்த்து அஞ்சினர்.

மன்னன் இராஐசேகரன் மகனின் துணிவைப் பாராட்டி ஆரத்தழுவினார். அமைச்சர் மனதில் தீய எண்ணங்களுடன் அரசிக்கு அவளின் இளைய மகனுக்கு மூடிசூட்ட ஆசையை வளர்த்து இல்லாத தலைவலியை ஏற்படுத்தியிருந்தார்.

அதனால் மணிகண்டன் புலியுடன் வந்ததும் தவறுக்கு மன்னித்து மண்றாடினர். பன்னிரெண்டு காலம் என்னை வளர்த்து காத்து வந்தீர்கள். நாடாளும் எண்ணம் எனக்கில்லை எனக்கூறி தம்பி இராஜேந்திரனுக்கு முடிசூட்டி இளவரசன் ஆக்குங்கள் இது எனது விருப்பம் ஆகும். பூவுலகில் அவதாரம் எடுத்த எனது நோக்கம் நிறைவேறிவிட்டது வருகிறேன் என்று புறப்பட்டார்.

மன்னன் முதல் அனைவரும் கலங்கி நின்றனர். அன்பு தந்தையே ஆசி கூறுங்கள் சபரி மலைப் பகுதியில் பம்பை நதிக்கரையில் ஒரு அம்பை எய்கிறேன். அந்தச் சரங்குத்தும் இடத்தில் ஆலயம் எழுப்பி என் திரு உருவை பிரதிஸ்டை செய்யுங்கள். என்னை வழிபடும் அடியார்களுக்கு ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி அன்று நான் ஒளிவடிவில் பொன்னம்பலமேட்டில் திருக்காட்சியளிப்பேன் என்று மறைந்தருளினார்.

ஆலயம் எழுப்பி பதினெட்டு படிகளும் அமைத்து ஐயப்பனை வழிபடுபவர் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பகவான் தத்துவாதீனாக விளங்குவதையே இப் பதினெட்டுபடிகளும் உணர்த்துகின்றன. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் ஐம்புலன்கள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தும் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஐம்பொறிகள் ஓசை ஊறு ரூபம் சுவை நாற்றம் என்ற ஐந்தும், அந்தக்கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும். மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் ஆன்மாவும் என பதினெட்டு விடயங்களைக் கொண்டுள்ளது.

மேற்குறித்த பதினெட்டு விடயங்களைக் குறித்தே பதினெட்டு படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஸ்ரீ சாஸ்தாவாக விளங்கும் ஐயப்ப சுவாமி சபரி பீடத்தின் பதினெட்டு படிகளை கடந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் பேருண்மைத் தத்துவத்தை பெற்று உய்வதோடு, பொன்னம்பல மேட்டில் தை மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதி தரிசனம் கண்டு எம் பாவங்களை தீர்க்க ஐயப்பனை வணங்குவோம்.

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா..?




தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்'எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.

அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது.
தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது.

அவை என்ன தெரியுமா?


* அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது.

*"பெப்பர்மென்ட்ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.

* சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.

*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.

* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.

* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்குபல அரிய பலன்களைத் தருகிறது.

* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.

* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.

* யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக்கொண்டு ஓடி விடும்.

* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.

இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள்,தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?




"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?"

 என்று கேட்டிருந்தார்.


 நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன்.


ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது.


அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப  செய்ய முடியும்.


   கையாள்வதற்கு  மிக எளிமையான இதை  பயன்படுத்த Excel மேக்ரோ Enable  செய்யப்பட்டிருக்க வேண்டும்

இதோ  விளக்கம்


கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.


Cheque Print  DOWNLOAD

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?




 உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.


முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.


உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.


அப்படி நீக்கியும் கூட, உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்' என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.


இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.


டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)


இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.


கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.


இதன் அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.


மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:http://www.jamsoftware.com/treesize_free


இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:


2. WINDIRSTAT

தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html

3. XINORBIS

தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/

4. RIDNACS

தறவிக்கம் செய்ய: http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html

5. SPACE SNIFFER

தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/


குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.


தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்


உலகெங்கிலும் வீட்டு வைத்திய முறைகள் கையாளப்படுகின்றன. சில பகுதிகளில் மரபு வழி வைத்திய முறைகள் தலைமுறை தலைமுறையாகப் பலநூறு ஆண்டுகளாகப் புழகத்தில் இருந்து வந்திருக்கின்றன. வீட்டு வைத்திய முறைகளில் பல, அதிக அளவில் பலன் தருகின்றன; வேறு சில, குறைந்த அளவில் பலன் தருகின்றன.

வீட்டு வைத்திய முறைகளில் சில ஆபத் தான வையாகவும், தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். நவீன மருந்துகளைப் போலவே வீட்டு மருத்துகளையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

பலன் தரும் வீட்டு மருந்துகள்  :

பல நோய் களுக்குக் காலம் காலமாகப் பயன்படுத்திப் பலன் கண்ட வீட்டு மருந்துகள் நவீன மருந்துகளுக்கிணையாக அல்லது அவற்றுக்கும் மேலாகக்கூடப் பலன் தருகின்றன. பெரும்பாலானவை நவீன மருந்துகளைவிடச் சிக்கனமானவை.

மேலும் சில, நவீன மருந்துகளை விட அதிகப் பாதுகாப்பானவை. எடுத்துக்காட்டாக, இருமலுக்கும் சளிக்கும் பயன்படுத்தப்படும் மூலிகைக் கஷாயங்கள், நவீன மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் இருமல் இனிப்பு மருந்துகள், வீரியம் மிக்க மற்ற மருந்துகள் ஆகியவற்றை விடவும் நல்ல பலன் தருகின்றன.

இவற்றால் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் குறைவே. குழந்தைகளின் வயிற்றுப் போக்குக்குத் தாய்மார்கள் தருகிற கஷாயங்கள் அல்லது பானங்கள் வேறெந்த நவீன மருந்துகளை விடவும் சிறந்தவை; பாதுகாப்பானவை. வயிற்றுப்போக்கால் சிரமப்படும் குழந்தை அதிக அளவில் திரவத்தை உட்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

வீட்டு வைத்திய முறைகளின் வரம்பு  :

சில நோய்களுக்கே வீட்டு மருந்துகள் உதவுகின்றன. மற்ற நோய்களை நவீன மருத்துவ முறைகள் மூலம், மேலும் சிறப்பாகக் குணப்படுத்த முடியும். இது பெரும்பாலான தொற்றுகளுக்குப் பொருந்தும். நிமோனியா, தசைவிறைப்பு ஜன்னி, டைஃபாய்டு, காசநோய், குடல்வால் அழற்சி, பால் வினைத் தொற்றுகள், பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படுகிற காய்ச்சல் போன்றவற்றை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக நவீன மருத்துவ முறைகளைக் கொண்டு குணப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நோய்களை முதலில் வீட்டு மருந்துகள் மூலம் மாத்திரமே குணப்படுத்த முயன்று காலத்தை வீணாக்காதீர்கள். சில சமயங்களில் வீட்டு வைத்தியத்தில் எது நல்ல பலன் தரும், எது பலன் தராது என்பதை உறுதி செய்துகொள்வது கடினம். இது குறித்து அதிக கவனத் துடன்கூடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

பழைய வழிமுறைகளும் புதிய வழிமுறைகளும்  :

சில நவீன சுகாதார வழிமுறைகள் பழங்கால முறை களைவிடச் சிறந்தவை. ஆனால் சில சூழ்நிலைகளில் மரபு வழிமுறைகளே நல்லது. எடுத்துக் காட்டாக, குழந்தை அல்லது முதியோர் பராமரிப்பில் மரபு வழிவந்த முறைகள் பெரும்பாலும் அன்பு கலந்த அக்கறை உடையனவாகவும், நவீன முறைகளைவிட உறவின் நெருக்கம் மிகுந்தவையாகவும் இருக்கின்றன.

தாய்ப்பால்தான் சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு என்ற சரியான நம்பிக்கை அண்மைக் காலம்வரை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் புதிதாக வளர்ச்சி பெற்ற புட்டிப்பால் தயாரிக்கும் பெரிய வணிக நிறுவனங்கள், தாய்ப்பாலைவிட புட்டிப்பால் சிறந்தது என்றன.

இது உண்மை இல்லையென்றாலும் பெரும்பாலான தாய்மார்கள் இதை நம்பித் தங்கள் குழந்தைகளுக்கும் புட்டிப்பால் கொடுக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் தேவையின்றித் தொற்றுகளுக்கும் பசிக்கும் இலக்காகி மடிந்தன.

குணமளிக்கும் நம்பிக்கைகள்  :

வீட்டு மருந்துகளில் சில, உண்மையாகவே குணமளிக்கின்றன; மற்றவை, குணமளிப்பதைப் போல் தோன்றுகின்றன. காரணம், மக்களுக்கு அவற்றின் மீதுள்ள நம்பிக்கைதான். குணப்படுத்து வதில் நம்பிக்கைக்குள்ள சக்தி மிகவும் வலுவானது.

எடுத்துக் காட்டாக, மிகக் கடுமையான தலைவலியால் அவதிப்படும் ஒருவருக்கு தலைவலியைப் போக்க, ஒரு பெண் சேனைக் கிழங்குத் துண்டு ஒன்றைக் கொடுத்து, அது சக்தி வாய்ந்த வலி நிவாரணி என்று சொன்னாள். அவள் சொன்னதை அவர் நம்பினார்.

தலைவலி விரைவில் மறைந்தது. இங்கே அவருக்குக் குணம் அளித்தது அந்தப் பெண் கொடுத்த கிழங்குத் துண்டால் அல்ல; அந்தப் பெண்ணின் வைத்தியத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைத்தான். வீட்டு மருந்துகளில் பல இவ்வாறே வேலை செய்கின்றன. இவற்றால் பெரும்பாலும் குணம் தெரிவதற்குக் காரணம், மக்களுக்கு அவற்றில் உள்ள நம்பிக்கையே.

மக்களின் மனபிராந்தி தொடர்புடைய நோய்களையும், கவலை, பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களையும் ஓரளவு குணப்படுத்துவதில் இத்தகைய நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கின்றன. இவ்வகை நோய்கள் எல்லாவற்றுக்கும் வைத்தியம் செய்வோரின் குணப்படுத்தும் முறை அல்லது `கைராசி' மிகவும் முக்கியமானது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் நோயாளியிடம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை நோயாளி உணருமாறு செய்வதும், அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட அல்லது அவர் அமைதியடைய உதவுவதும்தான்.

உட்கொள்ளும் மருந்தில் வைத்திருக்கிற நம்பிக்கை மாத்திரமே, சில சமயங்களில் முற்றிலும் உடல் தொடர்பான கோளாறு களைக்கூடக் குணப் படுத்திவிடுகிறது. எடுத்துக்காட்டாக, கிராம மக்கள் விஷப்பாம்புக் கடிக்குப் பயன்படுத்தும் வைத்திய முறைகள்:

1. பாம்புக் கல்லைப் பயன் படுத்துவது; ஒருவித வேர் பயன் படுத்தப்படுவது. 2. கையளவு மிளகாய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுவது.
3. வாழைத்தண்டுச் சாறு நிறையக் குடிப்பது.

பாம்புக்கடிக்கு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துக்கின்றனர். நாம் அறிந்த வரையில் இந்த வகையான வீட்டு மருந்து எதுவுமே பாம்பு விஷத்தை முறிப்பதில்லை. பாம்பு விஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியது வீட்டு மருந்துதான் என்று ஒருவர் சொன்னால் அவரைக் கடித்தது விஷப் பாம்பாக இருந்திருக்காது.

இருந்தாலும் இவ்வகை வீட்டு மருந்தை ஒருவர் நம்பும் பட்சத்தில் அது சில நன்மைகளைச் செய்யலாம். இந்த நம்பிக்கை அவருடைய பயத்தைக் குறைப்பதால் நாடித்துடிப்பின் வேகமும், பதற்றமும், உடல் நடுக்கமும் குறையும். இதன் காரணமாக விஷம் அவருடைய உடலில் மெதுவாகவே பரவும். ஆகையால் அபாயம் குறைகிறது.

ஆனால் இவ்வகை வீட்டு மருந்துகள் ஓரளவு பலனையே தருகின்றன. இம்மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் பாம்புக் கடியினால் இன்னமும் பெரும்பாலானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றனர் அல்லது இறந்து போகின்றனர். பொதுவாகப் பாம்புக்கடிக்கு நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. `பாம்புக்கடி விஷமுறிகள்' அல்லது `நிணநீர் மருந்துகளை' தேவை ஏற்படுவதற்கு முன்னரே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.


இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.


இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.


சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது இதனை தவிர்க்க சொல்வதால் அந்நேரத்தில் அதனை சுவைக்க அதிக ஆவல் ஏற்படுவது மனித இயல்பு தான்.


ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம்.


இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். சில நேரம் டெசெர்ட் கூட நோய்வாய் படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக்கண்டம் என்று நாம் சொல்வோம்.

இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும் நோய்வாய் பட்டிருக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரோக்கியத்தை புதுப்பிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடாவை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கிவிடும்.

ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையாக மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கும் போது பர்கர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் சளியானது, மூக்கு மற்றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கிவிடும்.
மேலும் மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனை கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மதுபானம்

மதுபானம் என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்க செய்துவிடும். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண்டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படையச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடைத்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுதலை குறைத்துக் கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபைன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கலந்துள்ளதால், கண்டிப்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசாரமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புகள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்திவிடும்.