Tuesday, 23 December 2014

இந்த பொங்கல் தல பொங்கல் தான் - அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

 கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் என்னை அறிந்தால். இந்தப் படம் கடந்த சில மாதங்களாகவே பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. ஐ உள்பட 3 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், என்னை அறிந்தால் வருமா என்ற கேள்வி குறியாக இருந்தது. இப்போது என்னை அறிந்தால் படம் ஜனவரி 14ம் தேதி திட்டமிட்டபடி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாவது உறுதியாகிவிட்டது.

இந்த தகவலை அட்மஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பாகவே என்னை அறிந்தால் வெளியாக இருக்கிறது.

Google+ பயனர்களுக்கான அதிரடி வசதி

சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் பகிரப்படுவது இன்று அதிகளவில் இடம்பெறுகின்றது.

இவற்றில் வீடியோக்கள் பல்வேறு வகையான சாதனங்களைக் கொண்டு பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு வெவ்வேறு சாதனங்களின் உதவியினூடாக பதிவு செய்யப்படுவதனால் அவற்றின் தரம் மாறுபடுகின்றது.
இதனால் Google+ இல் பதிவேற்றப்படும் வீடியோக்களின் தரத்தினை வெளிச்சம், கலர் போன்றவற்றினூடாக மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வசதியினை ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
Android, Windows, Mac மற்றும் Chrome OS ஆகிய இயங்குதளங்களில் Google+ இனைப் பயன்படுத்தும்போது இவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் இவ்வசதி நேரடியாக தரப்படாமையினால் பயனர்கள் தாமாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஜிகாதிகளை கரம்பிடித்தால் ஆனந்த வாழ்வு! சிறுமிகளுக்கு வலைவீசும் பெண் தீவிரவாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மணக்க சிறுமிகளை டுவிட்டரின் மூலம் பெண் ஒருவர் முளைச்சலவை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் சமூக வலைதளங்களின் மூலம் பலரை மனம் மற்றி தங்களது அமைப்பில் இணைத்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரக்கா (Raqqa) நகருக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த சாலி ஜோன்ஸ்(Sally jones Age-45) என்ற பிரித்தானிய பெண் டுவிட்டரின் மூலம் இளம் வயது சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி மூளைச்சலவை செய்து வருகிறார்.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

Monday, 22 December 2014

சிறுவன்- சிறுமி காதல் ஜோடி தற்கொலை: ஒடிசா சம்பவம்

ஒடிசா மாநிலத்தில் ரயிலின் முன் பாய்ந்து இளம் வயது காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுவனும் சிறுமியும் சரக்கு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த சிறுவனின் பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை ரயில்வே பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள, இந்த இடத்துக்கு வரும்படி தனது காதலிக்கு அந்த சிறுவன் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.

பலியான இந்த ஜோடியின் பெயர் விபரங்கள் ஏதும் தெரியவில்லை. பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Sunday, 21 December 2014

பிகே படம் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், முதல்நாளில் ரூ. 26.63 கோடி வசூல் செய்துள்ளது.

விடுமுறை அல்லாத நாளில் ரிலீஸ் ஆகி, அதிக வசூல் பெற்ற படங்கள் பட்டி்யலில், இரண்டாவது இடத்தை பிகே படம் பிடித்துள்ளது.

முதலிடத்தில், தூம்3 படம் உள்ளது. சர்வதேச அளவிலான கிராண்ட் பாக்ஸ் ஆபிசில், 132.108 அமெரிக்க டாலர்கள் வசூலாகி, பிகே படம் சாதனை படைத்துள்ளது...

Saturday, 20 December 2014

விஜய், ரஜினியை தொடர்ந்து அஜித்தை பிடித்த சனி!!!

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு புது டிரண்ட் ஒன்று ஆரம்பித்துள்ளது, அது என்னவென்றால் ஒரு படம் ஆரம்பிக்கும் போதும், அதன் படபிடிப்பு நடைபெறும் போதும் யாரும் இது என்னுடைய கதை என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதுவே அந்த படம் முடிவடைந்து வெளியீட்டு தயாராகும் நிலையில் இருக்கும் போது இது என்னுடைய கதை என்று யாராது கையை தூக்கிகொண்டு வந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கத்தி படத்திற்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திற்கும் சரி ,படம் வெளியாகும் போது என்னுடைய கதையை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த படத்தை வெளிவரவிடாமல் சிலர் சதிவேலைகளை செய்துவந்தனர். விஜய், ரஜினியை அடுத்து அஜித்தை புடித்துள்ளது அந்த டிரண்ட் (சனி).

அட ஆமாங்க இப்போது அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார். இவர் கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உதவி இயக்குனரிடம் சொன்ன கதை தான் தற்போது கௌதம்மேனன் காதுக்குபோய் ”என்னை அறிந்தால்” என்ற படமாக உருவாகிவருகிறது என்று குற்றம் கூறுகிறார்.

ஆனால் அதற்கான ஆதாராம் எதுவும் இவரிடத்தில் இல்லை, எனவே இந்த விஷயத்தை கௌதம் மேனன் கண்டுகொள்ள தேவை இல்லை, இது போல் படம் வெளியாகும் சமயத்தில் என்னுடைய கதை என்று சொல்லுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சிலரின் கருத்துகள்.

Friday, 19 December 2014

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்

இசையமைப்பாளர்- இயக்குநர்- பாடலாசிரியர் கங்கை அமரன் நாளை அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாஜக.தமிழக சினிமா மற்றும் பிற கட்சியின் பிரபலங்களுக்கு அக்கட்சி வலைவீசி வருகிறது.

திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாளை சென்னைக்கு வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

அவரது முன்னிலையில் விஐபிக்கள் சிலர் பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறார்.

அவருடன் மேலும் சில சினிமா பிரபலங்களும் இணையக்கூடும் என்கிறார்கள்.

ஐ படத்துக்கு யு/ஏ சான்று! ஜனவரி 9ல் வெளியீடு

 இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீதுதான் உள்ளது.

விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கியுள்ள படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லிப் பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், "அந்நியன்' ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட் அப்கள் வேறு இருக்கிறது.

படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே ஐ படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் ஐ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே அரசின் வரி விலக்கு பெற இயலும். ஆனால் இப்போது ஐ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் படக்குழுவினர் இறங்குவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்பு

 
 டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்:
நான் 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை, காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன, முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.

பா ஜ க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலையை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

Thursday, 18 December 2014

கே.பாலச்சந்தர் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா!!!

இயக்குனர் கே. பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்று தவறாக ட்வீட் செய்ததற்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில், இந்திய சினிமாவின் அருமையான இயக்குனர் கே. பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பாலச்சந்தர் உயிருடன் இருக்கும் செய்தியை அறிந்த அவர் அந்த ட்வீட்டை அவசரமாக அழித்துவிட்டு புதிதாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை நம்பி ட்வீட் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

"நாய்" தந்த நம்பிக்கையில் சிபிராஜ் எடுத்த புதிய முடிவு!

 சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நாயும் அனைவரின் பாரத்தையும் பெற்றது.

பல வருடங்களாக படம் நடிக்காமல் வீட்டிலேயே இருந்த சிபிராஜ் இந்த வெற்றியின் மூலம் உற்சாகமடைந்துள்ளார்.

வேறு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும், அதையெல்லாம் மறுத்துவிட்டு இப்போது, 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளாராம்.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனரே இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

லிங்காவின் அமர்க்களம் அடங்கத் தொடங்கியிருப்பதால் நாளை நான்குப் படங்கள் வெளியாகின்றன.

முதலில் மிஷ்கினின் பிசாசு. கலை, கலைஞன் என்றெல்லாம் மூச்சுமுட்ட பேசும் மிஷ்கின் பிசாசு படத்தின் விளம்பரங்களில் தனது பெயரையும் பாலாவின் பெயரையும் மட்டுமே குறிப்பிட்டு மற்ற கலைஞர்களை இருட்டடிப்பு செய்துள்ளார். படத்தை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் மறைந்த ராம.நாராயணன் மற்றும் அவரது மனைவி பெயர்கூட விளம்பரங்களில் உள்ளது. ஆனால் ஒளிப்பதிவு செய்தவர், இசையமைத்தவர், எடிட்டிங் செய்தவர் என்று யாருடைய பெயரும் இல்லை. மிஷ்கினின் இந்த அகம்பாவ இருட்டடிப்புக்கு முதலில் நம் கண்டனங்கள்.

பிசாசு படம் குறித்து பேசிய மிஷ்கின், பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். படம் தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்” என்றார்.

பிரயாகா ஹீரோயின். படத்தில் பிசாசாக வருகிறவர் இவரே. நாயகன் பெயர் நாகா. தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ரவி ராய். இசை அரோல் கொரெலி.

யுஏ சான்றிதழ் பெற்றுள்ள பிசாசு நாளை திரைக்கு வருகிறது.

நாளை வெளியாகும் இன்னொரு படம், ரிச்சர்ட் நடித்துள்ள சுற்றுலா. என்ன மாதிரி கதை? இயக்குனர் ராஜேஷ் ஆல்பர்டிடம் கேட்டோம்.

ஒரே நாளில் நடக்கும் கதை. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம்.

ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார்..அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக சுற்றுலா இருக்கும்.

முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான மாளிகை தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கினோம்.

அடுத்து என்ன... அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலப் படத்திற்கு நிகரான திரைக்கதை இதில் இருக்கும் என்றார்.

இவை தவிர நாடோடிப் பறவை, நட்பின் நூறாவது நாள் ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.

அமீர் கானின் பிகே படமும் நாளை திரைக்கு வருகிறது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கம் என்பதால் படத்துக்கு இந்தியாவுக்கு வெளியேயும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாளை வெளியாகும் படங்கள், வரவிருக்கும் மூன்று தினங்களில் லிங்கா வசூலிப்பதில் சின்ன சதவீதத்தை பெற முடிந்தாலே அது பெரிய விஷயம்தான்.

லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன... இப்போ வேகமா இருக்கா படம்?

லிங்கா படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டதை நேற்றே கூறியிருந்தோம். நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை நேற்று முதல் பார்க்க முடிந்தது.

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6. அவை:

1. மரகத நெக்லஸ் திரும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு மார்க் பண்ண வைக்கும் காட்சி

2. ரஜினியை வரவேற்று லோக்கல் புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி

3. தன் தோழிகளுடன் சோனாக்ஷி செய்யும் சேட்டை காட்சி

4. டேம் ப்ளான் பேப்பரில் சோனாக்ஷி காப்பியைக் கொட்டிவிடும் காட்சி

5. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி

6. க்ளைமாக்ஸ் பலூன் காட்சியில் ஒரு பகுதி மொத்தம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.

இப்போது படத்தைக் குறை சொல்வோர் பிரதானமாகச் சொல்வதே, அதன் நீளத்தைத்தான். எனவே நீளத்தையும்,

க்ளைமாக்ஸின் ஒரு பகுதியையும் ட்ரிம் செய்துள்ளனர். இப்போது படம் முன்பை விட வேகமாக இருகிறது என்பது இப்போது பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது!

ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்...?.

 லிங்கா வெளியான இரண்டாவது நாளே திருட்டு டிவிடிகள் வலம்வர ஆரம்பித்தன. ஆந்திர போலீஸார் ஒரே நபரிடமிருந்து 3000 லிங்கா திருட்டு டிவிடிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த செய்தியால் லிங்கா யூனிட் அலார்ட் ஆகியுள்ளது. சென்னை பர்மா பஜாரிலும் லிங்கா திருட்டு டிவிடி விற்கப்படுகிறது. ஒரு டிவிடியின் விலை 100 ரூபாய்.

திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் உரிமம் பெறாத திருட்டு சி.டி.க்கள் தமிழகமெங்கும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரின் ரசிக கண்மணிகளாகிய நீங்கள் அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்குமாறு சட்டப்படி நடவடிக்கை எடுத்து லிங்கா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

இதுதான் விஜய் - சிம்புதேவன் படத்தின் - ’மறு தீரன்’

 கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்திற்கு கருடா, மதீசன் என்று பெயர் வைத்திருப்பதாக வதந்திகள் வந்திருந்தது. தற்போது இப்படத்திற்கு ’மறு தீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இப்பெயரும் உறுதியா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

விஜயின் உண்மையான முகம் :சொந்த தாய்மாமனை வறுமையில் தவிக்க விட்டவர்! - பேஸ்புக்கில் வெளுக்கும் வேலு பிரபாகரன்

இயக்குநர் வேலு பிரபாகரன்.. நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், உள்ளிட்ட பல படங்களைத் தந்தவர். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த முதல்வராகக் காய் நகர்த்தும் விஜய், தன் சொந்த தாய்மாமன் வறுமையில் வாடுவதைக் கண்டு கொள்ளாத சிறு மனம் படைத்தவர் என்று கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து வேலு பிரபாகரன் எழுதியிருப்பதாவது:

"என்னுடன் இருப்பவர் நடிகர் விஜய் அவர்களின் தாய் மாமன்.. தாயார் ஷோபா அவர்களின் அண்ணன...சுரேந்தர். இவரை ஒரு பழைய ஸ்கூட்டி ஓட்டியபடி வடபழனி ஏரியாவில் அடிக்கடி பார்ககலாம் மிக மிக சாதாரண வாழ்க்கை வாழும் அவரது நிலை எங்களை போன்ற சினிமாக்காரர்களுக்கே அதிர்ச்சியும், வேதனையும் தரும். இருவருக்கும் சரியான உறவில்லை என்று நெருங்கியவர்களுக்கு தெரியும், இருந்தாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டங்கள் தீட்டி காய்களை நகர்த்தும் ஒருவர்.

அதுவும் பல கோடிகளை ஊதியமாகப் பெரும் ஒருவர், எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பரந்த மனப்பான்மையோடு தன் மாமன் நிலையை உயர்த்த மனமில்லாதவர்.. பல கோடிகள் புரளும் போதும் தன் இரத்த சொந்தம்... ஏழ்மையில் சிக்கியிருப்பதைக் கண்டும் உதவாத சிறு மனம் படைத்த, மனிதாபிமானமற்ற இதயமில்லாதவர்.. அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன செய்வார்?" -இவ்வாறு அவர் எழுதியுள்ளார். அதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளோம். (வேலு பிரபாகரன் விஜய்யை ஒருமையில் எழுதியுள்ளார்)


குறிப்பு: எஸ் என் சுரேந்தர் பிரபலமான பிண்ணனிப் பாடகர். தேவன் கோயில் தீபம் ஒன்று.. போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியவர். சென்னை 28 படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலிருந்து நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான். ஆரம்ப நாட்களில் விஜய்க்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

Wednesday, 17 December 2014

அமேசான் காட்டில் உள்ள பழங்குடியினரை திருமணம் செய்த இயக்குநர்

 அமேசான் காட்டில் உள்ள பழங்குடியின தலைவரை, இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக்கார பெண் ஒருவர் மணமுடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் குறும்பட இயக்குநராகவும், புகைப்படகாரராகவும் சாரா பேகம்(Sara Begum) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்து போராடி வரும் ஈக்வடார்(Equador) பகுதியின் அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரை பற்றி சாராவிற்கு தெரியவந்துள்ளது.

தானும் இவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என நினைத்த சாரா, சமீபத்தில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழங்குடி மொழியை கற்று தனது படக்குழுவினருடன் ஈக்வடாருக்குச் சென்றுள்ளார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த அவர், எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக தானும் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனையடுத்து, தன்னை விட 30 வயது மூத்தவரான பழங்குடிகளின் தலைவரும் வீரருமான ஜின்க்டோவைத்(Ginkto)  திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும், சாராவின் தலையில் இறக்கைகளால் ஆன மகுடம் சூட்டப்பட்டு, அமேசானின் ராணியாக அங்கிருந்த பழங்குடியின மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சாரா கூறுகையில்,

எனது கணவர் மிகவும் அருமையான மனிதர். நான் குடும்பம் நடத்துவதற்காக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அவர்களின் போராட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவும் உதவியாக இருக்கவே திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?





இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள்
அதிகம்..?

 

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.



02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.



03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.



04. 1835 ல் அவரது காதலி மரணம்.



05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.



06. 1838 ல் தேர்தலில் தோல்வி.



07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.



08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.




09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.



10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.



11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.



12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.



இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
வேறுயாருமில்லை...



உலகம் அறிந்த மிகவும் பிரபலமான
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.



அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
இவையே வெற்றியின் இரகசியம்...!!

Tuesday, 16 December 2014

விளம்பர விஷயத்தில் விக்ரம்பிரபுவின் கண்டிஷன்...!

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் காமெடி நடிகர் சூரி பேசும்போது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். வெள்ளைக்காரதுரை படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் சூரியின் மேக்கப் ரூமுக்கு வந்த விக்ரம் பிரபு, தனக்கு காமெடி சப்ஜெக்ட்டு புதுசு என்பதால் தான் நடிக்கும்போது உதவி பண்ணுங்கள் என்று சூரியிடம் கேட்டாராம்.

 இதை சூரி சொல்ல, பிறகு பேச வந்த விக்ரம் பிரபுவும் அதை உறுதிப்படுத்தினார். அதை வைத்து விக்ரம் பிரபுவின் எளிமையையும் தன்னடக்கத்தையும் பலரும் பாராட்டிப்பேசினார்கள். படப்பிடிப்பில் சூரி உடன் நட்பாகப் பழகினாலும், வெள்ளைக்காரதுரை படத்தின் விளம்பரங்களில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விக்ரம் பிரபு விரும்பவில்லையாம். விக்ரம் பிரபு - சூரி இணைந்து நடிக்கும் வெள்ளைக்காரதுரை என்று முதலில் விளம்பர டிசைன்களை தயார் செய்துள்ளனர்.

அதைப்பார்த்த விக்ரம் பிரபு கடுப்பாகிவிட்டாராம். உடனடியாய் கோபுரம் பிலிம்ஸ் புரடக்ஷன்ஸ் மானேஜரை அழைத்து தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். தன் பெயருடன் காமெடியன் பெயரை சமமாகப் போடுவதா? என்று கோபப்பட்டதை அடுத்து தற்போது வெள்ளைக்காரதுரை விளம்பரங்களில் விக்ரம் பிரபு நடிக்கும் என்று மாற்றிவிட்டனர்.

அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக்கிடக்கும் இடங்கள்!

இந்தியாவில் மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன.

அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம்.
ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.



இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.


கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.


இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது.

எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.


ரூப்குந்த் லேக்

1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன.

ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


ஷனி ஷிங்க்னாபூர்

ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ரி-ப்ளே செய்யத் தூண்டும் 'பிசாசு' பாடலும் காட்சிகளும்!

 கண்ணெதிரே பட்டாலும் நொடிநேரம் கூட கவனிக்காமல் கடந்து போய்விடுகிறோம் இம்மனிதர்களை. நகரங்களில் விளிம்பு நிலையில் வாடும் மனிதர்களை நெருங்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது, இந்தப் பாடலின் காட்சிகள். | இணைப்பு கீழே |

இந்தப் பாடலையும், அது படமாக்கப்பட்ட விதத்தையும், மனிதர்களின் இயல்பைக் காட்டும் உத்தியையும் கவனித்தாலே புரிந்துவிடும், இது இயக்குநர் மிஷ்கினின் சினிமா மொழி என்று.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் பாடல் வரிகள், தமிழின் எளிய சொற்களுக்கும் மனத்தைக் குத்திக் கிழிக்கும் வல்லமை உண்டு என நிரூபிப்பவை. இளம் இசையமைப்பாளர் ஆரோள், வயலின் மூலம் உள்ளத்தை மருகவைக்கிறது. உத்ராவில் குரல் உருகவைக்கிறது.

பி.சி.ஸ்ரீராமின் மாணவர் வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் கேமரா, பாடல் வரிகளையும் இசையையும் ஒருங்கிணைத்த வசீகரமான காட்சிக் கவிதைக்கு வித்திட்டுள்ளது.

வயலின் மீட்டும் நாகா, பாடும் அந்தச் சிறுமி, சுரங்கப் பாதையில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பொம்மை விற்கும் நபர், பலூன் மாமா, சோர்வில் துவண்டிருக்கும் 'பர்ஸ்' விற்பனையாளர், பிச்சையிட முன்வரும் மிகச் சிலர்... தன் கண் எதிரே நிறைந்திருக்கும் இவர்கள் எவரையும் கண்டுகொள்ள நேரமின்றி கடக்கும் நகர வாழ்க்கையில் நடக்கும் மக்கள்.

மொத்தத்தில், நிஜமாகவே மிஷ்கின் ஒரு சினிமா 'பிசாசு' என்பதை உறுதி செய்கிறது, 'நதி போகும் கூழாங்கல் பயணம்' எனத் தொடங்கும் இப்பாடல்.

எழுந்து வாருங்கள் ஐயா! கண்ணீருடன் கமல்

கமல்ஹாசன் என்ற நடிகர் உருவானதற்கு மிக முக்கிய காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். இது மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் அடையாளம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், காமெடி நடிகர் விவேக் என அனைவரும் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

இந்நிலையில் நேற்று அவரின் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு செல்ல ,சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து உத்தம வில்லன் படத்தின் இறுதி கட்ட பணியில் இருக்கும் கமல் மிக உருக்கமாக ‘இது எல்லாம் நீங்கள் கொடுத்தது தான், உங்களுடன் நான் தொலைப்பேசியில் பேசிய 1.30 நிமிடம் என்ன பேசினீர்கள் என்று புரிய வில்லை, ஆனால், அது என்னவாக இருக்கும் என நானே புரிந்து கொண்டேன், முடிந்தால் மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா!’ என்று குரல் மங்கி கூறியுள்ளார்.

பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த நடிகர் கரணின் 90 வயது தந்தை

சென்னையில் பூட்டிய வீட்டில் நடிகர் கரணின் தந்தை இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகர் கரண். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை கேசவன் கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 இந்த நிலையில், இவரது வீடு திங்கள்கிழமை வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்துள்ளனர். அப்போது உயிரிழந்த நிலையில் கேசவன் தரையில் இருந்ததை பார்த்து, அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதில் வயதின் காரணமாக கேசவன் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது உடல் நடிகர் கரணிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

வேனில் லிங்கா படம் ஒளிபரப்பிய ஓட்டுநர் கைது

 திருட்டு சி.டி. மூலம் லிங்கா திரைப்படத்தை வேனில் ஒளிபரப்பிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் டிச.12-ம் தேதி வெளியானது. அதற்கடுத்த ஓரிரு நாளிலேயே, அந்த படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாகி விட்டன. இதைத் தடுக்க, போலீஸாருடன் இணைந்து ரஜினி ரசிகர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுரை அரசு மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வேனில் டி.வி.யில் லிங்கா படம் ஒளிபரப்பானது. வேனில் இருந்தவர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மற்றொரு வாகனத்தில் வந்த திரைப்பட விநியோகஸ்தர் ஆர்.எம்.கந்தன் என்பவர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.


அதன்பேரில், தல்லாகுளம் ஆய்வாளர் இளவரசு மற்றும் போலீஸார் அந்த வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது லிங்கா படம் ஓடிக் கொண்டிருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வேன் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மதனகோபாலைக் கைது செய்தனர். லிங்கா சி.டி. மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

நீதிமன்றத்தில் ரூ.7 கோடி செலுத்தினார் ‘லிங்கா’ தயாரிப்பாளர்

 ‘லிங்கா’ திரைப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்தில் ரூ.7 கோடியை நேற்று செலுத்தினார்.

மதுரையைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் தனது முல்லைவனம் 999 படத்தின் கதையை யு டியூப்பில் இருந்து திருடி, லிங்கா படத்தை தயாரித்திருப்பதாகவும், அதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரவிரத்தினம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு, கதை திருட்டு தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும், லிங்கா படத்தை வெளியிட தயாரிப்பாளர் ரூ.10 கோடியை உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதில், ரூ.3 கோடி ரொக்கத்தை உடனடியாக செலுத்தி படத்தை வெளியிடவும், எஞ்சிய ரூ.7 கோடியில் ரூ.2 கோடி மற்றும் ரூ.5 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை டிச. 15-ல் உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் டிச. 11-ம் தேதி உத்தரவிட்டது.


இதையடுத்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷ், டிச. 11-ம் தேதி மாலை ரூ.3 கோடியை ஆன்லைன் பணபரிவர்த்தனையில் உயர் நீதிமன்ற கிளை கணக்கில் செலுத்தினார். இந்நிலையில் எஞ்சிய ரூ.7 கோடியில் ரூ.2 கோடியை வரைவு காசோலை, ரூ.5 கோடிக்கான வங்கி உத்தரவாத ஆவணமும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நேற்று வழங்கப்பட்டது.

மனைவிக்கு முக்கியமாக தெரிய வேண்டியது!


கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


கணவன் தவறு செய்தால்...


சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.


குற்றங்குறைகள் இருந்தால்...


உண்மையாக இருந்தாலும், பிறர் உள்ளம் வருந்துமாறு எதையும் சொல்லாதீர்கள். ஒரு முடவனைப் பார்த்து நீ ஏன் முடவன் ஆனாய் என்று கேட்காதீர்கள். எவரும் தம் குற்றங்குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது இதயம் நிதானமாய் துடிக்கிறது. இதனால் உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அதிக இரத்தம் கிடைக்கிறது. அதிக அளவு பிராணவாயு கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு ஏற்படும். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சியை தினசரி செய்ய பழக்குங்கள். சிறுமிகள் கீழ்கண்டவற்றை செய்யலாம்.


தசைகள் இயக்கும் பயிற்சி...


சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்பு தலையையும், கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கை விரல்களால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.


தோள் பயிற்சி...


கால்களை அகல வைத்தபடி கைகளால் கால்களுக்கு இடையில் தரையைத் தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சியை செய்ய வேண்டும்.


மார்பகப் பயிற்சி...


மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டுவர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும்போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சிவிடக் கூடாது. நான்கு தடவைகள் செய்யவும் மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.


கால்கள் மெல்லியதாக இருக்க பயிற்சி...


ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் கூட விடலாம்.


இருதயநோய் ஆபத்தை தடுக்க...


ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை சாதாரணமாக நடந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய், மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் கண்டு பிடித்துள்ளார்கள். நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் படுகிறது.


உடலழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க...


உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிக எளிது. இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். அன்றாட வேலைகளில் ஒன்றாக உடற் பயிற்சியை கருதினால் நாம் வாழ்வில் வளமாக வாழலாம். நோய்கள் நிச்சயம் நம்மை நெருங்காது.


தோள்கள் வலிமை பெற...


கைகளை மாற்றி, மாற்றி மேலே உயரத் தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சி செய்தாள் தோள்கள் வலிமை பெறும்.


வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் மறைய...


மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி மேலே உயர்த்தி இறக்கி பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போலவும் கால்களை இயக்கலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து அழகிய தோற்றம் ஏற்படும்.


கழுத்து வலிமை பெற...


தலைப்பகுதியை மட்டும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துப்புறம் வலிமை பெறும்.

ஜாதியில் என்ன இருக்கு?



"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."என்ற பாரதியின் பாடலை பள்ளியில் பாடமாக படிக்க வேண்டுமென்றால் கூட முதலில் நாம் என்ன ஜாதி? என்ற விபரம் சொல்லிய பிறகு தான் அந்த பள்ளியில் நம்மை சேர்த்துக் கொள்வார்கள்.


அந்த அளவுக்கு இன்றைக்கும் நாட்டில் ஜாதி என்பது தவிர்க்க முடியாத கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஒருமாத காலமாக இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு செய்து வருகிறது.இந்தக் கணக்கெடுப்பில் முளைத்திருக்கும் பிரச்சனை தான் "ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு."


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட போது 1936 - ஆம் ஆண்டு தான் கடைசியாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு நம் நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பே நடைபெறவில்லை.


அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே அவசியம் தான்.


ஆனால் அதேநேரம் ஜாதிகள் மூலமாகத்தான் ஒருவர் தாழ்ந்தவர், ஒருவர் உயர்ந்தவர் என்று தரம் பிரித்து பார்க்க முடியும் என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமான செயல் மட்டுமில்லாது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட...


ஒரு குறிப்பிட்ட சாதியில் படித்தவர்கள், டாக்டர்கள், அரசுஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ளனரா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது என்ற வாதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


தங்களை சார்ந்திருக்கும் மக்கள் எல்லோருடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால் அரசின் எண்ணம் அனைத்து ஜாதி மக்களின் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்.


ஆனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதற்கும் இந்த கணக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஜாதிவாரியான மோதலுக்கும் வழிவகுத்து விடும்.


நண்பர் ஒருவர் உங்களிடம் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று உங்களிடம் "நீ எந்த ஜாதி?" என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போது உங்கள் நண்பரைப் பற்றி உங்கள் மனதில் எழும் எண்ணம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.


"இவன்..ஜாதி வெறி பிடிச்சவனா இருப்பான் போலருக்கே..?" என்ற மரியாதை குறைந்த எண்ணமாகத்தான் அது இருக்கும்.அதன் பிறகு உங்கள் முகத்தில் எழும் எரிச்சல் கலந்த முகபாவங்களும்,நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை சொல்லி முடித்த பிறகு அவர் முகத்தை நீங்கள் பார்க்கையில் உங்கள் மனதில் எழும் எண்ணங்களும், அல்லது அவர் உங்கள் முகத்தைப் பார்க்கையில் உங்களைப் பற்றி அவர் மனதுக்குள் எழும் எண்ணங்களும் அதுவரை கலகலப்பாக போய்க்கொண்டிருந்த உரையாடலை கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வருவதாக நீங்கள் உணர்வீர்கள்.அல்லது உங்கள் நண்பர் உணர்வார்.


லல்லுபிரசாத்யாதவ்,முலாயம்சிங்யாதவ்,டாக்டர்.ராமதாஸ் என்று பல அரசியல் தலைவர்கள் இந்த ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்றும் அவர்கள் அபயக்குரல்களையும் எழுப்பியுள்ளனர்.


ஒரு சமுதாயத்தில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தகவல்களும் இல்லாமல் நாட்டு மக்களுக்கான சமூக நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? என்றெல்லாம் ஜாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் கேட்கலாம்.


ஆனால் அதில் அவர்கள் ஜாதிவாரியான ஓட்டுகளை வாங்கி தொடர்ந்து அரசியல் நடத்துவதற்கான சுயநலம் மட்டுமே இருக்குமன்றி கண்டிப்பாக அதில் பொதுநலம் இருக்காது.அதனால் தான் அவர்கள் இப்படி கூச்சலிடுகிறார்கள்.


அதேநேரம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஒரு பொருட்டாக கொள்ளாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்,சமூக,பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களையும் கணக்கில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.


தற்போதைய சமூக வாழ்க்கையில் உள்ள மக்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் ஜாதியையும்,மதத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.மேலும் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் ஜாதி ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதை இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்




சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

* தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

* மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

* புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

* வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

* நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

* தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

*கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே!

பல்வலிக்கான வீட்டு வைத்தியம்!


நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறட்டையை விரட்டும் சிகிச்சை!

 குறட்டையை விரட்டும் சிகிச்சை

குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

கழுத்து வலியும் அதை களையும் வழியும்!

நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.

உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்


கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு


பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்


மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது. இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு  உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து


 காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்


 பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ


 இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

ஒரே படத்தில் அனிருத்தை ஓரங்கட்டி, மீண்டும் விட்ட இடத்தை பிடித்த யுவன்!

 யுவன் தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத்தின் திடீர் வளர்ச்சி மற்ற அனைத்து இசையமைப்பாளர்களையும் பெரும் தடையாக இருந்தது. குறிப்பாக யுவன் மார்க்கெட் கொஞ்சல் டல் அடிக்க ஆரம்பித்தது.

ஆனால், சில நாட்களுக்கு முன் வெளிவந்த வை ராஜா வை படத்தின் பாடல்கள் ஐ-டியூன் 4 மணி நேரத்தில் ஐ-சியூன் இந்தியப்பட்டியலில் இடம் பிடித்தது.

அதே போல் ஆடியோ சிடியும் நன்றாக விற்பனையாகிறதாம். சமீபத்தில் வந்த அனிருத்தின் காக்கி சட்டை பாடல்களை விட வை ராஜா வை படத்தின் பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

லிங்கா பற்றி அவதூறு பரப்பும் இணையதளங்கள், சமூக வலைப்பதிவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் குறித்து அவதூறாகவும், வேண்டுமென்றே எதிர்மறையாகவும் கேலி செய்து கருத்திடுவோர் மீது நடவடிக்கை கோரி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மற்றும் இணைய தளங்களை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ள கமிஷனர் அலுவலக சைபர் க்ரைம் பிரிவு, அத்தகைய கருத்துக்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிங்கா படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகி, உலகெங்கும் பெரும் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நல்ல வசூலைக் குவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் லிங்காவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இணையத்தில் சிலர் விஷமத்தனமாக படம் குறித்து கேலி கிண்டல் கருத்துக்களை எழுதியும், மோசமான படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

இது படம் குறித்த எதிர்மறைப் பிரச்சாரமாக அமைந்திருப்பதாகவும், திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான விஷயங்கள் என்றும் கூறி, இவற்றைத் தடுக்க சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் லிங்காவுக்கு எதிராக விஷமத்தனமாக எழுதப்பட்ட பக்கங்களை நீக்கவும், அத்தகைய நபர்களைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 இணைய தளங்களில் விமரிசனங்களைத் தாண்டி, லிங்கா பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லிங்கா திருட்டு விசிடி விற்போர் மற்றும் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜோதிகா தோழியாக நடிப்பது ஏன்? அபிராமி பதில்

வானவில்', ‘விருமாண்டி', ‘பட்ஜெட் பத்மநாபன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் அபிராமி. ஹிட் படங்களில் நடித்தபோதும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தன.

இதையடுத்து தனது நீண்ட நாள் காதலன் ராகுல் பாவணனை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அதேபோல் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவை மணந்துகொண்டு நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்டு ஆர் யூ‘ தமிழ் ரீமேக் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா. இதற்கான படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

இப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்க ஹீரோயினை தேடினார் இயக்குனர். அபிராமியிடம் கேட்டபோது ஒப்புக்கொண்டார். இதுபற்றி அபிராமி கூறும்போது, ‘இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றை தேர்வு செய்து நடிக்க இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

ஹீரோயின் தோழியாக வரும் கதாபாத்திரம் படத்தில் நீண்ட நேரம் வருவதுடன் நடிப்புக்கும் நல்ல வாய்ப்பளிக்கும் கதாபாத்திரமாக இருந்தது. மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தை கனிகா செய்திருந்தார்.

அதுபிடிக்கவே ஒப்புக்கொண்டேன். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருவுடனும், ஜோதிகாவுடனும் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது‘ என்றார்.

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...





கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...



நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..


அந்த கலர்களின் அர்த்தம் ,



பச்சை
- இயற்கை


ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்


சிவப்பு
- இயற்கை + ரசாயன கலவை


கருப்பு
- சுத்தமான ரசாயன கலவை .


இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?


நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.


* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.


* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.


* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.


* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.


* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.


* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.


* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.


* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.


* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.


* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.



வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும்.

அடிவயிற்றில் இருதயத்துடன் உயிர் வாழும் இளைஞர்!

 

பிறக்கும்போதே அடிவயிற்றில் இருதயத்துடன் பிறந்து 24 வயது வரை உயிர்வாழ்ந்து கொண்டியிருக்கும் இளைஞர் அதிசயமாக கருதப்படுகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் இருதயத்தை பொருத்த சீன டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கினாம் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூஜிலியாங் (வயது 24). இவர் முடிதிருத்தல் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போதே இவருக்கு அடிவயிற்றில் இருதய துடிப்பின் சத்தம் கேட்டது. ஆனால் இவரது பெற்றோர்கள் இதை சாதாரணாகவே எடுத்துக்கொண்டனர்.

நாளடைவில் ஹூஜிலியாங்கின் இருதயம் அடிவயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவர், பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமாக வேலை செய்தால் அல்லது ஓடினால் மூச்சிறைப்பு ஏற்பட்டது. அடிவயிற்றில் இருதயம் துடிப்பதை அவரால் உணர முடிந்தது.

இந்தநிலையில் பத்திரிகை செய்தி ஒன்றில் இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபருக்கு கடந்த 2012_ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனர். இதனை படித்த ஹூஜிலியாங், தானும் இதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பி, அந்த மருத்தவமனையில் சேர்ந்துள்ளார்.

சீன டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை அடிவயிற்றில் உள்ள இருதயத்தை இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் பொருத்த உள்ளனர். இதன் மூலம் தனக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹூஜிலியாங் உள்ளார்.

சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா? படித்து மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்!



கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

முதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’

குழந்தையின் வளர்ச்சி!

 

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.

சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.

எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை.

மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.

உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.

தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு

 குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.